முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்.செந்தில்குமார்

புத்தகத்தின் பெயர் சிக்கிமுக்கி சிறுகதைகள். Chikkymukky.com மின்னிதழில் வெளிவந்த கதைகளின் தொகுப்பு என்பதால்  அதற்கு  அப்படியொரு பெயர். புதுமைப்பித்தன் பதிப்பகம். தாராகணேசன் தொகுப்பு.இத்தொகுப்பில் பிரபஞசன்,  வண்ணதாசன், நாஞ்சில் நாடன், சமயவேல் , லக்ஷ்மி சரவணக்குமார், என பலர் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்நூல். எஸ்.செந்தில்குமாரின் கதை  ஒன்றும் அதில் இடம்பெற்றிருக்கிறது.அக்கதை அதிகாலைத் தற்கொலையின் கதை. இக்கதைப்பற்றி சொல்லியாக வேண்டும்.  சரஸ்வதி, தியாகராஜன் இருவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சரஸ்வதியின் கொழுந்தன் தியாகராஜன். கணவன் இருக்கையில் கணவனின் தம்பியை சேர்த்துகொள்கிறாள் சரஸ்வதி. இதனால் கணவன் தற்கொலை செய்துகொள்கிறார். தந்தை இறக்க காரணமான அம்மாவையும், சித்தப்பாவையும் மகள்கள் அடித்து விரட்டுகிறார்கள். காலத்தின் பிற்பகுதியில் அவளது மருமகன்களில் ஒருவர் படி தாண்டி மாமியாரிடம் ' நீ புருஷன் இருக்கையில் இன்றொருத்தனை சேர்த்துகொண்டதைப் போல நீ பெத்தவள் நான்  இருக்கையில் வேறொருத்தனிடம் படுத்திருக்கிறாள்...என்ன வளர்ப்போ...ஆ...த்தூ.. ' எனத்துப்பிச் செல்கிறான். இந்த அவமானம் இருவரையும் தற்கொலை க்கு தூண்டியிருக்கிறது. அதற்கு பிறகும் கதை தேவையின் பொருட்டு நீண்டாலும் விமர்சனம் தன் மேல் விழுந்த அதே பலி மகள் மீது விழுகையில் பெண்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை என்பதை காட்டி நிற்கிறது. நல்ல கதை. எஸ்.செந்தில்குமார்  அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

சவப்பெட்டி

காக்கை பிப்ரவரி  இதழில் பிரசுரமாகியிருக்கும் சிறுகதை அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு இரு வேறு செய்திகள் எனக்கு வந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானச் செய்தி அப்பாவின் ஆரம்பக்கால உதவியாளர் சேதுராமன் சொன்னச் செய்தியாக இருந்தது. அப்பா மீது வைத்திருந்த நன்மதிப்பின் பேரில் அவர் அந்த செய்தியைச் சொல்லியிருந்தார். அச்செய்தியைச் சொல்கையில் அவருடைய நா தழதழத்ததை விடவும் அச்செய்தியை உள்வாங்கிய என் ஒற்றைச் செவி நடுங்கிற்று. அவர் ஒரு கெஞ்சிய முன் கோரிக்கையுடன் அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். விக்கல் எடுப்பதைப்போன்று வார்த்தைகளை உருட்டினார். ‘ தம்பி நான் சொன்னேனு மட்டும் யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் உயிரோடு இருக்க முடியாது. உன் அப்பா ஆஸ்பஸ்திரியில சேர்த்த மறுநாளே இறந்திட்டார்ப்பா. அதற்குப்பிறகும் உன் அண்ணன்கள் உன் அப்பாவிற்கு வைத்தியம் பார்த்திக்கிட்டிருக்கான்க. உனக்கு எதிராக என்னவோ சூழ்ச்சி நடக்குதப்பா....’ இதை அவர் சொல்லி முடிக்கையில் அவரது வார்த்தைகள் எனக்குள் கனத்தன. அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை விடவும் இறந்ததற்கு பிறகும் உன் அண்ணன...