ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஏனென்றால் நாம் யூதன்


பின்னொரு காலத்தில் ஆசிய நில வரைபடத்தை அழித்து, திருத்தி வரையும் படியான தீர்ப்பு அன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்தவர் பிரெஞ்சு நீதிபதி லூயிஸ் ட்ரேபஸ்ஸாக இருந்தார். தீர்ப்பைக் கணித்து சரியாக எழுதுவதில் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு நிகரானவர் அவர். ஒரு வருடக் கால தொடர் விசாரணைக்குப்பிறகு அவர் இராணுவ தளபதி கேப்டன் ஆல்பர்ட் டிரைபஸ் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியிருந்தார்.

பிரெஞ்சு நாட்டின் மொத்த இராணுவத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தவன் கேப்டன் டிரைபஸ். தரைப்படை தளபதி. இளைய வயதில் இத்தகைய உயர் பதவிக்கு வந்தவர்கள் இதற்கு முன்பு யாரும் இருந்திருக்கவில்லை. துடிப்பான, மிடுக்கான இளைஞன் அவன். பிரெஞ்சு வீதியைப்போல உடல்வாகு கொண்டவன் .

டிரைபஸ் குற்றவாளியாக நிறுத்தப்பட்டதும், அவனுக்கு எதிராக தீர்ப்பு வரப்பெற்றதும் பிரெஞ்சு மக்களுக்கு பெருத்த அவமானமாக இருந்தது. முடியாட்சியிலிருந்து குடியாட்சிக்கு திரும்பியப் பிறகு சீர்க்குலைந்த இராணுவத்தால் நாடு திரும்பவும் முடியாட்சிக்கு திரும்பிவிடுமோ என்கிற பயம் மக்களின் உயிரைக் கவ்விக்கொண்டிருந்தது.நீதிபதியின் தீர்ப்பிற்கு பிறகு அன்றைய தின பிரெஞ்சு மாலை தினசரிகள் டிரைபஸ் குறித்த செய்தியை வசவுச் சொற்களுடன் கூடிய தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தன.

நீதி மன்றத்தின் தீர்ப்பு அதன் காலனி நாடுகளில் எதிரொலித்தது. பாண்டிச்சேரி, மாஹி, ஏனாம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளில் சிற்றுண்டி விருந்துகளில் பிரெஞ்சு அதிகாரிகள் கேலிக்கிண்டலுக்கு உள்ளானார்கள். காலனி நாடுகளின் தலைமைப்பீடங்கள் தன் அச்சாணி முறிந்து ஆட்டத்துடன் நின்றுகொண்டிருந்தன.

ஐரோப்பிய கண்டத்தின் ஒரே குடியரசு நாடு பிரெஞ்சு . டிரைபஸ் பற்றியச் செய்தி பிரெஞ்சு நாட்டின் பரம்பரை எதிரியான பிரிட்டிஷ் நாட்டு பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது.

டிரைபஸ் பற்றி நினைக்கையில் பிரெஞ்சு மக்களின் கோபம் அமிலமாகத் தெறித்தது. அவனைப் பற்றி நினைக்கையில் அவர்களை அடித்து கொன்றுவிடுவதைப்போல, நெட்டி பறித்து, பற்களைக் கடித்துகொண்டார்கள்.

ஆல்பர்ட் டிரைபஸ் ஒரு பிரிட்டிஷ்காரன். அவன் பிரெஞ்சுக்காரனாக நடித்து குடியுரிமை பெற்றுள்ளான்.

அவன், இராணுவத் துறைக்குள் நுழைவதற்கும், இராணுவ தளபதி பதவியை அடைவதற்கும் பெரிய அளவில் கையாடல் நடந்தேறியிருக்கிறது.

அவன் தரைப்படை தளபதியானது பிரஞ்சு தேசக்குற்றம்.

பிரிட்டிஷ் நாட்டின் உளவாளி அவன்.

பிரெஞ்சு நாட்டின் குடியரசு ஆட்சியை சீர்க்குலைப்பது ஒன்றே அவனது தலையானப் பணி.

யூத எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கலவரம் மூட்டுவது அவனது கூடுதல் பணி.

பிரெஞ்ச் நாட்டின் இராணுவ இரகசியங்கள் இவன் மூலமாகவே பிரிட்டிஷ் நாட்டிற்குச் சென்றிருக்கிறது.

இவனுக்கு பிரெஞ்சு நீதி மன்றம் அதிகப்பட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கிறது.

என்பதாக அவனைப் பற்றியச் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

டிரைபஸ் மீது வழக்குத் தொடுத்தவர்கள் முடியாட்சி மன்னன் பதினெட்டாம் லூயியின் குடும்ப உறவினர்களாக இருந்தார்கள். இராணுவத் தளபதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சொகுசு அறைகளில் ஆடி களியாட்டம் நடத்தினார்கள். குடியரசு தோல்வியடைந்துவிட்டதாக கொக்கறித்தார்கள். அதிபர் ப்ளெக்ஸ் ஃபாயூரை பதவி விலகச் சொல்லி வெர்செயல்ஸ், டி லா கான்கோர்டு, பாரிஸ் நகரங்களில் ஒன்றுகூடி குரல் எழுப்பினார்கள்.

டிரைபஸ்க்கு அரசு அதிகாரிகள் தரப்பில் ஆதரவு இருந்தது. அவனை வெளியே ஒரு சேதாரமுமில்லாமல் கொண்டுவர முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அவர்கள் ஆளும் அரசின் அங்கத்தினராக இருந்தார்கள். இது குடியாட்சிக்கு எதிராக முடியாட்சியாளர்கள் செய்யும் சதி. சதியை முறியடிப்போம். மேல் முறையீடு செய்வோம்...

வழக்கு மேல் நீதி மன்றத்திற்குச் சென்றது. கீழ் நீதி மன்றம் பிறப்பித்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. தீர்ப்பின் தண்டனையை மட்டும் நீதிபதி சற்று திருத்தி எழுதினார்.

ஆல்பர்ட் டிரைபஸ் செய்த குற்றத்திற்கு அவன் பொது வெளியில் அவமதிக்கப்பட வேண்டும். நிர்வாணமாக நிறுத்தி அடித்தே கொல்லப்பட வேண்டும்...’

இத்தீர்ப்பு வெளிவந்த நாள் முதல் பிரெஞ்சு மக்கள் கையில் கற்களுடன் பொது வளாகங்களில் கூடத் தொடங்கினார்கள். தேசத்தின் துரோகி மீது கல்லெறிதல் அத்தேசத்திற்கு செய்யும் தொண்டு என்பதாக மக்கள் குடும்பத்துடன் அந்நாளை நோக்கி காத்திருந்தார்கள்.

ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஐந்து - ஏப்ரல் 7,

ஆல்பர்ட் டிரைபஸ் நிர்வாணமாக சிறைச்சாலைக்கு வெளியே அழைத்து வரப்பட்டான். தீர்ப்பு வழங்குவதற்கு முந்தைய நாள் வரைக்கும் இராணுவ மரியாதை செலுத்திய இராணுவ வீரர்கள் அவனுக்கான முதல் அவமரியாதையைச் செலுத்தினார்கள். அவர்கள் நேராக நின்று எச்சிலைக் காறி அவனது முகத்தில் உமிழ்ந்தார்கள். அவன் அதை சற்றும் பொருட்படுத்தாமல் மிடுக்குடன் நடந்து வந்தவனாக இருந்தான். அவனது இரண்டு கைளும் பின் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. கால்களில் பிணைந்த சங்கிலிகள். களைந்த தலை மயிர்கள். மர்ம உறுப்பில் மயிர்கள் கொசகொசக்க அவன் பொது வெளிக்கு இழுத்து வரப்பட்டான்.

அவனுக்கான தண்டனை நிறைவேற்றுமிடம் பாரிஸ் நகரத்தின் மையம் டி லா கான்கோர்ட் டாக இருந்தது. பிரெஞ்சு தேசத்தின் கம்பீரக் குறியீடு அந்த இடம்தான். பிரிட்டிஷ் - பிரெஞ்சு இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நூற்றாண்டு போரின் வெற்றி அடையாளம் அங்குதான் நிமிர்ந்துகொண்டிருக்கிறது. அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஓபெலிஸ்க் என்கிற நிமிர்ந்த தூணை பிரெஞ்சு மக்கள் தேசத்தின் மார்பகமாகப் பாவிக்கிறார்கள். அதன் அருகில் நிற்கும் கால்கள் தூக்கிய குதிரை அதன் மீது வாளுடன் அமர்ந்திருக்கும் தேவதை இரண்டும் பிரெஞ்சு தேசத்தின் புருவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்! அந்த இடத்திற்குத்தான் டிரைபஸ் இழுத்துவரப்பட்டான். நிமிர்ந்த தூணில் சங்கிலியால் பிணைக்கப்பட்டான்.

பொது இடத்தில் வைத்து அவமதிக்கும் நிகழ்ச்சி நாள், இடம் குறித்து பத்திரிகைகள் எழுதியிருந்தன. பல நாட்டினரும் அதைப் பார்க்க கூடினார்கள். உள்நாட்டு பத்திரையாளர்கள் உட்கார்ந்து செய்தி சேகரிக்க பிரத்யேக இடமும், வெளிநாட்டினர்களுக்கு தனி இடமும் ஒதுக்கப்பட்டது. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் தவிர மற்ற நாட்டினர் செய்தி சேகரிக்க வருகைத் தந்தார்கள். அதில் தியோடர் ஹெர்ஸ் என்கிற வியன்னா நாட்டு பத்திரிகையாளரும் ஒருவர்.

ஆல்பர்ட் டிரைபஸ் மீதான குற்றப்பத்திரிகை உரக்க வாசிக்கப்பட்டது.

இவன் பிரிட்டிஷ் நாட்டினரால் வேவு பார்க்க அனுப்பப்பட்டவன். நம் நாட்டின் இறையாண்மை குலைத்தவன். இவன் துரோகி.... ’

மூன்று விதமான அவமதிப்பு அவனுக்கு நடந்தேறியது.

வசைச் சொற்களால் திட்டுதல்

எச்சில் உமிழ்தல்

கடைசியாக ...

கற்களால் அடித்து கொல்லுதல்.

இரண்டு அவமதிப்பு நடந்தேறி மூன்றாவது அவமதிப்பு நடக்கையில் வியன்னா பத்திரிகையாளர் தியோடர் ஹெர்ஸ் திடுக்கிட்டார். அங்கு ஒலித்த ஒத்த குரல்கள் அவரை அச்சமூட்டவும், மூச்சடைக்கவும் செய்தன.

டிரைபஸ் ஒரு யூதன்...’

யூதன் ஒரு துரோகி’

யூதன் ஒரு கலகக்காரன்’

யூதன் கொல்லப்பட வேண்டியவன்’

யூதன் வீழ்த்தப்பட வேண்டியவன்

யூதனை எங்கே கண்டாலும் கொன்றேத் தீரணும்

தியோடர் ஹெர்ஸ் அதிர்ந்து உறைந்துபோனார். தானொரு யூதன் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் கண்ணீர் துளிர்க்க, இதயம் அறைய , நெஞ்சுக்கூடு விதிர்விதிர்க்க உட்கார்ந்திருந்தார்.

மறுநாள்

யூதனுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம் என்பதாகவே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. தியோடர் ஹெர்ஸ் அந்த மாதம் முழுமையும் உலகப் பத்திரிகைகளைக் கவனித்தார். ஒரு யூதனுக்கான ஏதேனும் ஒரு நாடு, யாரேனும் ஒருவர் குரல் கொடுக்கிறார்களா, எனக் காத்திருந்தார். அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

தியோடர் ஹெர்ஸ் கண்களில் டிரைபஸின் முகம் நிழலாடிக் கொண்டிருந்தது. அவன் சிந்திய இரத்தம், அவன் மீது காறி உமிழப்பட்ட எச்சில், அவனது துடிப்பு, உயிர் துறப்பு அத்தனையும் கண் முன்னே விரிந்தன. ஒரு யூதனுக்கென்று ஒருவனேனும் ஏன் குரல் கொடுக்கவில்லை. கண்டனக்குரலுக்கு தடையாக இருந்தது எது...?, தானொரு யூதன் என்று தெரிந்தால் என்னையும் அவர்கள் அடித்தே கொன்றிருப்பார்களோ...? யூதன் எந்தவொரு தேசத்திலும் வாழ தகுதியற்றவனோ...! அப்படியானால் என் உயிர்...? என் சந்ததியினர்...? அவர்களின் சந்ததி...? அடுத்து...? அவர்களுக்கு பிறகு...?

அவரால் ஒன்றையும் பெரிதாக யோசிக்க முடியவில்லை. தூங்கலாமென்று கண்களை மூடினால் கண்கள் முழுவதும் இரத்தமாகவேத் தெரிந்தது. கனவுகள் திடுக்கிட வைத்தது. சுற்றிலும் மரணக்குரல், ஓலம்...

அவரால் பத்திரிகைத் துறையில் பணியாற்ற முடிந்திருக்கவில்லை. பணியைத் துறந்தார். அத்துறையில் பணியாற்றுகையில் பல நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். அவர்கள் முஸ்லீம், கிறித்தவம், புத்தம், யூதன்...என இருந்தார்கள். அவர்களில் யூதனை மட்டும் தனியே பிரித்தறிந்தார். தனியே சந்தித்து பேசினார். ஒரு யூதன் இன்னொரு யூதனை - அவன் இன்னொருவனை - இன்னும் ஒருவனை - மேலும் ஒருவனை சந்திப்பு சங்கிலித் தொடராக நீண்டது.

ஒரு நாள் அனைவரும் சந்தித்துக்கொள்ள தேதி குறித்தார்கள். கப்பலில் கூடினார்கள். அவர்கள் அத்தனைப் பேரும் செல்வேந்தர்களாக இருந்தார்கள். சூரியன் அஸ்தமிக்காத பேரரசுவிலிருந்து பெரிய எண்ணிக்கையில் வந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். சிலர் ஷெம் குடியினராக, சிலர் பினிஷியர், அராபியர், அசிரியர், செமிடிக், பாரசீகர், பாபிலோனியர், அலெக்சாண்டிரியர், செவ்விந்தியர், ஒன்றிரண்டு பேர் தங்களை மெசபடோமிய வம்சாவழி என அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

அத்தனைப் பேர்களையும் ஒன்றுத்திரட்டிருந்த தியோடர் ஹெர்ஸ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. அத்தனைப் பேர்களும் ஒவ்வொரு வரலாற்று குன்றுகளைத் தலையில் சுமந்திருந்தார்கள். அவர்கள் ஒற்றை இனமாக ஒரு புள்ளியில் குவிந்திருக்கவில்லை. ஹெர்ஸ் அதிருப்தியால் ஹீப்ரு மொழியில் முணங்கினார். அவரது முணங்களை அத்தனைப் பேரும் கவனித்தார்கள். எதிர் வினையாற்றினார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் ஹீப்ரு மொழி ஓரளவு தெரிந்திருந்தது. பலே...! கைகளைத் தட்டிக்கொண்டு துள்ளி எழுந்தார். கைக்குலுக்கினார். அத்தனைப் பேரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துகொண்டார்கள். இனமாக, கண்டமாக, நாடாக பிரிந்து ஒருவருடன் ஒருவர் கலக்காமல் விலகி நின்றவர்கள் ஹீப்ரு மொழியால் ஒன்று கலந்துவிட்டனர் .

கப்பல் மத்தியத் தரைக்கடலில் மிதந்து கொண்டிருந்தது. ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மூன்று கண்டங்களும் கூடும் வாயிலிடத்தில் கப்பல் கரை ஒதுங்கியது. அவர்கள் ஒதுங்கிய இடம் துருக்கி ஒட்டிய துறைமுகமாக இருந்தது. அவர்கள் அங்கிருந்தவாறு தொலைநோக்கி வழியே வெட்டவெளியைப் பார்த்தார்கள். அதோ அது துருக்கி, அங்கே தெரிவது ஜெருசலேம். இந்தப் பக்கம்தான் எகிப்து இருக்கிறது.

பெயர் , பெற்றோர், வயது, தொழில், வருமானம், வசதி , குழந்தைகள் இத்தனை இருந்தும் தனக்கென்று இப்படியான ஒரு நாடு இல்லாததைக் குறித்து வெட்கமுற்றனர். துக்கம் கொண்டனர்.

தியோடர் ஹெர்ஸ் உரக்கக் கத்தினான் . ‘ நமக்கென்று ஒரு தேசம் வேண்டும்

மண் வேண்டும்...

நீர் வேண்டும்...

நிலம் வேண்டும்...

நாம் சுவாசிக்கும் காற்று நம் காற்றாக இருக்க வேண்டும்....’

அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் கூக்குரலிட்டார்கள். அவர்களின் கத்தலில் கப்பல் குழுங்கியது. அலைகள் அடங்கி எழுந்தது.

தியோடர் ஹெர்ஸ் முதலில் ஆடையை அவிழ்த்து தன் மடியிலிருந்த நாணயங்களை அள்ளி மையத்தில் வைத்தார். அத்தனைப்பேரும் வைத்தார்கள். நாணயங்களும், பொன், பொருளும் மலை போல குவிந்திருந்தது.

தியோடர் ஹெர்ஸ் கை நீட்டினார்.

நமக்கு நாடு வேண்டும்..’

நாடு வேண்டும்...’

நாடு பிடிக்க ஓர் இயக்கம் வேண்டும்...’

இயக்கம் வேண்டும்...’

யூத மக்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்க நாம் உருவாக்கிக்கொள்ளும் இயக்கம் ஜியனிசம்...’

ஜியனிசம்...’

ஜியனிசம்..’

.....’

தேசம் இல்லாத மக்களுக்காக , மக்கள் இல்லாத தேசத்தை கண்டடைவோம்...’

ஜியனிசம் என்கிற பதம் அவர்களின் மூளை வழியே இதயத்தில் இறங்கியது.

ஜியனிசம், ஜியனிசம்..’

ஹெர்ஸ் சொன்னார்சேர்ந்திருக்கும் பணத்தை வளர்ந்த நாடுகளுக்கு கடன் கொடுப்போம்...’

கொடுக்கும் கடன் போர் ஆயுதங்களுக்காகவே கொடுப்போம்...’

கடன் கொடுக்கும் முன் தனக்கென்று ஒரு நாடு வேண்டுமென சொல்லிக் கொடுப்போம்...’

நம் கடனால் ஏதேனும் ஒரு நாட்டை வல்லரசாக்குவோம்’

அந்த வல்லரசின் கீழ் மற்ற நாடுகளை ஒன்று குவிப்போம்’

உலகிற்கு கடன் கொடுப்பவர்கள் நாமாகவே இருக்க வேணும்..’

கொடுத்த கடனை ஒரு நாள் வட்டியுடன் திருப்பிக் கேட்போம்...’

வட்டிக்கு பதிலாக ஏதேனும் ஒரு நாட்டினைக் கேட்போம்...’

நம்மால் வல்லரசாகும் ஒரு நாடு, நமக்கான நாட்டை அது பெற்றுத் தரும்...’

நம்மின் கடைசி குரல் நமக்கென ஒரு நாடு கேட்பதாகவே இருக்க வேணும்...’

ஒருவர் சொன்னார் . எனக்குத் தெரிந்து துருக்கியில் ஓரிடம் இருக்கிறது. மக்கள் வாழத் தகுதியற்ற இடம் அது. அதை விலைக்கு வாங்கலாம்.

இன்னொருவர் - கென்யா, உகாண்டாவைப் பிடித்தால் மொத்த ஆப்ரிக்காவையும் வளைக்கலாம்.

சினாய், சைப்ரஸ், இத்தாலி இவற்றில் ஏதேனும் ஒன்று என்பது எனது விருப்பம்.

ஜெர்மனிக்குள் கலவரத்தை மூட்டி அந்த நாட்டை பிடிக்கலாமே.... அவர்களின் யோசனைகள் நீரோட்டம் போல பல திசைகளில் பாய்ந்திருந்தது.

இப்பொழுது அவர்கள் நடந்தே காசா திட்டு என்கிற இடத்திற்கு வந்திருந்தார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் பாலைவனமாக இருந்தது. சுற்றிலும் புழுதி வெள்ளம். அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒட்டகங்கள் மேய்ந்தன. செம்மறியாடு கூட்டம். மேய்ப்பவன் தலையில் முக்காடு. குல்லா. தாடி. ‘ அல்லாஹி அக்பர்’

தியோடர் ஹெர்ஸ் சொன்னான் ‘இந்த இடத்தையே விலைக்கு கேட்கலாமே...’

ஆம்...கேட்கலாம்! தர மறுத்தால்...?’

அடித்து பிடுங்கலாம்...’

எதிரியை வீழ்த்துகளில் இதயம் சொல்லும்படி நடத்தல் கூடாது. நமக்கு நம் மூளையே பிரதானம்...’

அந்த வழியாக ஒரு முதியவர் வந்தார். பார்க்க அவர் துறவி போலிருந்தார். அவர் பின்னே செம்மறி கூட்டம் வந்தது. அவரை வழிமறித்து கேட்டார்கள்.

இந்த நாட்டின் பெயர் என்ன...?’

பாலஸ்தீனம்...’

இந்நாட்டில் வாழும் மக்கள்...?’

அரபு இனத்தவர்’

அவர் பின்னே அவர்கள் நடந்தார்கள். முதியவர் பாலைவனம், சமவெளி, மலைகளைக் கடந்து ஜோர்டான் ஆற்றாங்கரையை நோக்கிச் சென்றார். ஆற்றின் கரையில் ஒரு பேரிச்சம் மரமிருந்தது. மரத்தினடியில் பரந்த வட்டமான நிழல் விழுந்திருந்தது. அந்நிழலில் உட்கார்ந்தார். அவரைச் சூழ்ந்து அத்தனைப் பேரும் உட்கார்ந்தார்கள்.

பெரியவர் கையில் ஒரு பழையக் காலத்து ஓலைச்சுவடி இருந்தது. அதைப் பிரித்தார். மரபு வழி கதை ஒன்று அதில் எழுதப்பட்டிருந்தது. ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்தார். ஓரிடம் வாசிக்கையில் அவர்களின் மொத்தக் கவனமும் அவர் மீது குவிந்தது.

கடவுள் ஆபிரஹாமுக்கு ஒரு உறுதி மொழியினை அளித்தார். எகிப்தின் ஆற்றிலிருந்து மாபெரும் நதியாகிய யூப்ரடிஸ் நதி வரை உள்ள தேசத்தை உங்களின் வழித் தோன்றல்களுக்கு நான் வழங்குவேன்...’

தியோடர் ஹெர்ஸ்க்கு அந்த ஒரு வாசகமே போதுமென இருந்தது. யூத மக்களுக்கான வாசகமாக அது இருந்தது. அந்த ஓலைச்சுவடு அவர்களுக்குத் தேவையென இருந்தது. முதியவரிடம் கேட்டார்கள். முதியவர் இதுவொன்றே என்னிடமிருக்கிறது என தர மறுத்தார்.

அவர்கள் முதியவரிடம் வாக்குவாதம் செய்தார்கள். ‘பெரியவரே...இந்த நிலம் யூத மக்களுக்கானது. நீங்கள் வைத்திருக்கும் ஓலைச்சுவடி அப்படியாகத்தான் சொல்கிறது...’

இல்லை. அது வெறும் கதை. இந்த நிலம் அரபு மக்களுடையது...’

கிடையாது. இந்நிலம் யூத வழித்தோன்றலுக்கு வழங்கிய இடம்...’

இந்நிலத்தின் பூர்வீகக் குடிகள் அராபியர்கள்...’

இல்லை. யூதர்கள்...’

இரு தரப்பினர்களுக்கிடையே சண்டை மூண்டது. தியோடர் ஹெர்ஸ் கைக்கு கொஞ்சம் இரத்தம் கிடைத்திருந்தது. அதை அள்ளிக்கொண்டு ஜியனிசம் வாசித்தார். அவரது வாசிப்பை மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள்.

முதலில் நாம் நமக்கான தேசத்தை உருவாக்குவோம். அதற்கு முன்னால் அராபியக் கலாச்சாரத்தை வேரோடு களைவோம். ஏனென்றால் நாம் யூதர்...’

அவர்களின் நடை ஜெருசலேம் நோக்கியதாக இருந்தது.



3 கருத்துகள்: