முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
சு.வேணுகோபால் கணையாழி இதழில் 'மறைந்த பின்னும் பறக்கும் பறவை' குறுநாவல் வாசித்தேன். ஒரு ஓவியக் கலைஞனின் வாழ்க்கை அவனது ஏமாற்றம், குடும்ப சூழலை இந்நாவல் கனத்துடன் பதிவு செய்திருந்தது. நாவல் வால்பாறை சுற்றுலா கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் டீச்சரின் அந்தரங்க உறுப்புகள் உட்பட பலதையும் கேலி செய்து அவர்கள் பெற்ற தண்டனைகளுடன் நகரும் கதை ஓரிடத்தில் யாரென்று தெரியாத ஒருவர் தற்கொலைச் செய்துகொள்ள அதை அவர்கள் காவல் துறையிடம் முறையிட காவலர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொள்ள என திகிலுடன் நகரும் கதை தற்கொலை செய்துகொண்டவர் யாரென தெரியவருகிற பொழுது மனது கனத்து விடுகிறது. தற்கொலைஞன் தமுஎகச, கலை இலக்கிய கூட்டங்களுக்கு ஓவியம் வரையும் மணிமாறனாக இருக்கிறான். ஓவியம் இனி தீட்டவேண்டாம் என்றும் மகள் பூப்பெய்துவிட்டதால் தினக்கூலி வேலைக்கு போக வேண்டும் என அவரது மனைவி பணிக்கிறாள். அவருக்கு ஒரு கலை இலக்கியக் கூட்டத்திலிருந்து ஓவியம் தீட்ட அழைப்பு வருகிறது. மனைவி தடுக்கிறாள். இதற்கிடையில் அவள் தினக்கூலிக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில் ஒருவன் உன் மகளுக்கு நான் நகை எடுத்து தருவதாகவும் உனக்கு எப்பொழுது பணம் கிடைக்கிறதோ அப்பொழுது பணம் தந்தால் போதுமென்று சொல்லியச்செய்தியை அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஒரு பக்கம் ஓவியம் தீட்ட போக முடியாமையும் இன்னொரு பக்கம் மூன்றாவது ஒருவன் மனைவியை வளைக்கப்பார்ப்பதும் அவனுக்குள் உள்ளக்கிடக்கை கிடந்து அடித்துகொள்கிறது. வால்பாறை சுரங்கத்திற்குள் இறங்கி அவரை அள்ளி வருகிறார்கள். அவர் மகளின் பூப்பெய்தல் சடங்கைக் கூட செய்து முடிக்காமல் மனைவியின் ஓலத்தோடு இடுகாட்டிற்கு தூக்கிச்செல்லப்படுகிறார். நாவல் தொடக்கத்தில் குதூகலத்தையும் இறுதியில் ஒரு கலைஞனின் துயர் வாழ்வையும் எழுதிச்செல்லும் இந்நாவல் கலைஞர்களுக்கான நாவல். சு.வேணுகோபால் மற்றும் கணையாழி இதழ் இருவருக்கும் எனது வணக்கங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

சிறுகதைப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹ 4000 மூன்றாம் பரிசு ₹ 2000 ஆறுதல் பரிசு மூன்று பேருக்கு ₹ 1000 கடைசி தேதி ஏப்ரல் 30 முகவரி முனைவர் இரா. செல்வி C/O  திருமதி ரேணுகா நாகராஜ் 55, திரு.வி.க வீதி ஹோல் காலேஜ் பீளமேடு கோவை 641014 r.selvi1957@gmail.com