வியாழன், 25 அக்டோபர், 2018

வேட்கை இலக்கிய இதழ்

இன்றைய தினம் எனக்கு பிடித்தமான கட்டமைப்பில் சிற்றிதழிலும் சிறிய இதழாக சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு இதழ் கைக்கு வந்தது. - வேட்கை -




நவீன இலக்கியப் படைப்பாளர்களுக்கான களம் என்கிற அடையாளத்தோடு வந்திருந்த இதழைப் பார்க்கையில் எனக்கும் கூட இப்படியாக  ஒரு இதழைத் துவங்கிவிடலாம் என்கிற ஆசை வந்துவிட்டது.  - Cool down :(

இதழ் முழுக்கவே மா. அரங்கநாதனின் பேட்டி.

தூண்டிலாக வீசப்பட்ட கேள்விகள். வலையில் சிக்கிய மீன்களாக பதில்கள்.

#உண்மையோடு உறவு வைத்துக்ககொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை.

#என்னைப் பொறுத்தவரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல சந்தேகங்களுக்கு கவிதை அம்சமே நல்ல பதிலைத் தந்தது.

#உதைப்பந்து விளையாட்டிற்குக் கூட இலக்கணம் இருக்கிறது. இந்த கவிதைக்கு இல்லையா? என்கிற கேள்விக்கு உதைப்பந்து விளையாட்டிற்கு இலக்கணம் இருக்கிறது. டென்னிஸ் விளையாட்டிற்கு இருக்கிறது. கிரிக்கெட்டிற்கு விளையாட்டிற்கு இருக்கிறது. ஆனால் விளையாட்டிற்கு என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா?

#நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரிய வருகிறது...இப்படியான பல பதில்கள்.

பதில்களின் பிரமாத வரிசையில் மிக நுட்பமாக ஒரு கேள்வி

#' உங்கள் வீடு பேறு கதையில் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து திருவல்லிக்கேணிக்கு தன் தாயார் இறந்து போன மாடியறையைப் பார்த்துப் போக வருகிறான். வந்தவன் அங்கே அந்த வீட்டுக்காரரோடு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த அறையைப் பார்க்காமலேயே போகிறான். அந்த வீட்டுக்காரர் ஞாபகப்படுத்தியும் கூட - ஏன் என்று சொல்ல முடியுமா?


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மா.அரங்கநாதனுக்கு சாகித்ய விருது கிடைக்கவில்லையென ஆதங்கப்படுகிறார். அட விடுங்க சார் விருதா முக்கியம். திரும்பவும் அவரது படைப்பை வாசிப்பதே முக்கியம்...



இதழ் தொடர்புக்கு..
அ.கார்த்திக்கேயன்
36/14 ஆறாவது குறுக்கு ( கிழக்கு) வித்யா நகர் ,அம்மாபேட்டை ,சேலம் - 636003
           - 25.10.2018 * 5.29pm


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக