ஞாயிறு, 7 அக்டோபர், 2018

2018 விருது பெற்ற புகைப்படம்

அவர் பெயர் Nikhil Tembekar .  புத்தகக் கடை நடத்துபவராக இருக்கிறார். வன உயிர் புகைப்பட கலைஞரும் கூட.  டிசம்பர் மாதம் ஒரு நாள் NH 930  காரில்  பயணம் செய்திருக்கிறார். கிழக்கு மஹாராஷ்ரா மாநிலம் Chandrapur - Mul சாலை அது. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் சாலை அது.


அதிகாலை 4.00 மணி. வாகனத்தின் விளக்கு மின்னுகிறது. வாகனத்தை சட்டென நிறுத்துகிறார்.  அவருக்கு அப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. வன விலங்குகளின் நடமாட்ட பகுதி இதுவென்று.

  சாலையின் ஓரத்தில் ஒரு பசு இறந்து கிடக்கிறது. தாயும் குட்டியுமாக இரண்டு வரிப்புலிகள் உக்கிர பசியைத் தணித்துக்கொள்ளும் பொருட்டு கறியை பிய்த்துத் தின்னுகிறது.

இவர் தனது கேமராவை எடுக்கிறார். இப்படியும் அப்படியுமாக புகைப்பாடம் எடுக்கிறார். அவர் எடுக்கும் புகைப்படங்கள் அவருக்கு திருப்தியளிக்கும்படியாக இல்லை. அவருக்கு பிடிக்கும்படியாக ஒரு புகைப்படத்தை எடுக்க ஐந்து மணி நேரம் வரைக்குமாகிறது. கடைசியில் அவர் எடுத்த புகைப்படம் அவருக்கு பிடித்துப்போய்கிறது. அப்புகைப்படம்  ' Nature in focus photography awards - 2018 ' விருது பெறுகிறது.  அந்தப் புகைப்படம்தான் இது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக