புதன், 29 ஆகஸ்ட், 2018

2018 இல் நான்

சிறந்த எழுத்தாளர் விருது



 29 ஆவது ஆண்டாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் பாரம்பரியமிக்க  புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நடந்துவருகிறது. இக்கண்காட்சியில்  ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் , பதிப்பாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்குவது வழக்கம். அவ்வகையில்  இவ்வாண்டு  முத்தன் பள்ளம் நாவலாசிரியர் அண்டனூர் சுரா அவர்கள் சிறந்த எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்டு  அவருக்கு விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. 




18.08.2017









சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.எ அரங்கில் நடைபெறும் புத்தகக் கணகாட்சியில்   பாரதி புத்தகலாயம் அரங்கில் அண்டனூர் சுராவின் கொங்கை நாவல் வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை  நடிகரும் முற்போக்கு செயற்பாட்டாளருமான தோழர் ரோகிணி வெளியிட  , மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் க.சு.சங்கீதா பெற்றுகொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் ஆர்.நீலா, வெய்யில், மு.கீதா, விஜயலெட்சுமி, உமா மோகன் , மனுஷி, பெருமாள் ஆச்சி, வடுவூர் சிவ. முரளி எனப் பலரும் பெற்றுகொண்டார்கள்.

நூல் குறித்து உரையாற்றிய பேராசிரியர் க.சு.சங்கீதா , நாவலின் தலைப்பே அதிரும்படியாக இருக்கிறது,  இந்நாவல் குறித்து இரு விதமாக விமர்சனம் வர வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் கொங்கை குறித்து பேச வேண்டிய காலத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என உரையாற்றினார்.  இவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் மு.கீதா, நாவல் வாசிக்க இலகுமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பெண்சார் பார்வையில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றார். ஆர்.நீலா,  குட்டி ரேவதி எழுதிய முலைகள் நூல் குறித்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் தற்போது கொங்கை வெளிவந்துள்ளது என்றார். வெய்யில், முலை என்று நாவலுக்கு பெயர் வைக்கப்பட்டு கொங்கை என மாற்றியதைச் சுட்டிக்காட்டினார். இந்நாவல் ஆவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றார். இந்நாவலை வெளியிட்ட ரோகிணி அவர்கள் , ' இதுபோன்ற விடயங்கள் பேசப்பட வேண்டிய ஒன்று. ஆண்களின் பார்வையில் கொங்கை என்பது மட்டுமல்ல, பெண்களின் பார்வையில் கொங்கை  எப்படியாக இருக்கிறது என்பதையும் இந்நாவலை வாசித்து தெரிந்துக்கொள்ள  முடியும் ' என்றார். இறுதியாக , ஏற்புரையாற்றிய நூலாசிரியர் அண்டனூர் சுரா , கொங்கை , முலை இரண்டும் ஒன்றைக் குறிக்கும் ஒத்தச் சொல் என்றாலும் வர்க்க வேறுபாடும், அதன் பொருளும் , பார்க்கும் பார்வையால் வித்தியாசம் அடைகிறது என்றவர், இந்நாவல் குறித்து பெண்களின் விமர்சனங்களை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். வெளியிட்ட  அன்றைய தினம் முதலே  பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்நாவல் கி.பி அரவிந்தன் நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய  குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



நவம்பர் ஞானம் இதழில் - சிறுகதைப்போட்டி முடிவு அறிவிப்பு - வீழ்வேனொன்றோ நினைத்தாய்? என்கிற எனது சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக