செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

நூல் விமர்சனம்

தமிழவனின் நாவல் இது. சரித்திரத்தில் படிந்த நிழல்கள். காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்.
 ஒரு புனைவு நாடு தொகிமொலா.அரசன் பச்சை ராஜன். ராணி பாக்கியத்தாய். இவர்களை மையமாகக் கொண்டு நாவல் நகர்கிறது. முழுக்கவும் புனைவு. நாடு அற்றவர்கள், மொழி அற்றவர்கள் , ஒருவனை நாடு அற்றவனாக மாற்ற முனையும் வன்மம், ரஷ்யா உடைந்ததற்கு பிறகு ஒரு நாட்டினரின் கீழ் வந்த ஐ.நா மன்றம் என அனைத்யையும் இந்நாவல் தொட்டுச்செல்கிறது. நூலகம் எரிப்பு , பண்பாட்டு அரசியலில் கால் வைப்பது என இந்ராவல் பேசாத பொருள் இல்லை. எதிரிகளின்', 'வம்சத்தை', வேரறுத்தல்' இம்மூன்று பதங்களும் நாவலில் கவனிக்கும் படியாக இருக்கிறது.
நாவல் முழுக்கவும் கிளைக்கதைகள். நாவலின் மையமான தொகிமொலா தமிழர்களின் நாடான இல்லாத ஒன்றை நினைவுப்படுத்துகிறது. நல்ல நாவல் எழுத்தாளரின் புனைவை புரிந்துக்கொள்ள முரண்டுப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
'

1 கருத்து: