ஞாயிறு, 25 மார்ச், 2018

அனல் காற்று

நாவல் - அனல்காற்று @ஜெயமோகன்

பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக தான் எழுதிய கதை இது என்பதாக முன்னுரை பேசுகிறது. ஒரு வேளை எடுத்திருந்தால் படம் நன்றாக ஓடவும் செய்திருக்கும்.

இந்நாவலை வாசித்ததும் எனக்கு அவள் அப்படித்தான் என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. அப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது திரைபடத்தின் உரையாடல். படம் முழுக்கவும் கதாநாயகி பேசிக்கொண்டிருப்பாள். அப்படியாகவே இந்நாவல் முழுக்கவும் அருண் ,  தன்னை விட்டு பிரிந்து சென்ற சுசியை நினைத்து மருத்துவமனையில் தனக்குத்தானே பேசுவதுதான் கதை.

தன்னை விரும்பும் சுசியிடம் தான் விரும்பும் சந்திரா குறித்து பேசுகிறான் அருண். சநதிரா , விதவைப்பெண். அவளுக்கும் அவனுக்குமான நெருக்கத்தை அப்படியே
படமாக்கியிருந்தால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இதுதவிர fuck , boobs வார்த்தைகள் வேறு.

நாவலின் ஓரிடத்தில் தாய்க்கும் ஜோ என்கிற கதாப்பாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தையும் பேசுகிறது.

உரையாடல்கள் அருமை. சில இடங்கள் காதலையும் , காமத்தையும் , தத்துவத்தையும் பேசுகிறது.

நாவலின் முடிவு நாடகத்தனம். சந்திரா அருணிடமிருந்து சட்டென விலகுவதும்  சுசி அருணுடன் சேர்ந்துவாழ விட்டுக்கொடுப்பதுமான காட்சி வெள்ளைத்திரைக்குத் தேவைதானே.

அனல் காற்று அருண் , சந்திரா இவர்களுக்கிடையேயான நெருக்கத்தின் போது மட்டுமா, வாசகன் வாசிக்கையில் யாரையேனும் சந்திரவாக நினைத்துகொண்டு வாசிக்கையில் அவர்களுக்குள்ளும் அடிக்கவே செய்யும்.

நாவலில் சமூகப்பிரச்சனை என்று ஒன்றுமில்லை. அதே நேரம் காமம் சுரக்கையில்  இருக்கின்ற பிரச்சனைகளை நன்றாகவேச் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக