வியாழன், 21 நவம்பர், 2013

கட்டுரை – நவம்பர் 23 (  தமிழ்த்தாய்வாழ்த்துஏற்றுக்கொள்ளப்பட்டநாள் )
செயல்மறந்துவாழ்த்துவோமே!
“ என்நாட்டுஅவைப்புலவர்பாடஆரம்பித்தால்உன்நாட்டுமாமன்னன்கூடஎழுந்துநின்றாகவேண்டும்”. “எங்கேபாடச்சொல்லும்பார்க்கலாம்” . அவைப்புலவர்பாடத்தொடங்குகிறார்“ ஜனகனமணகதி.......” மாமன்னன்எழுந்துநிற்கிறார். ஒருபள்ளியில்நடைப்பெற்றஹைக்கூவடிவநாடகம்இது.
ஒருஅரசுவிழாவின்போதுஒருபிரபலமானபின்னணிபாடகர்பாடியதேசியக்கீதத்தைகுறுந்தகடுமூலமாககேட்கமுடிந்தது.அவர்தேசியக்கீதத்தை1.35நிமிடங்கள்பாடியிருந்தார்.அந்தஇடத்தில்இப்படியொருகேள்விஎழுந்தது.தேசியக்கீதம்52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்.அப்படித்தானே?”ஆம்! “ஏன்.............?”  இந்தக்கேள்விக்குயாரிடமும்பதில்இல்லை.
இங்கிலாந்துமன்னர்வில்லியம்ஜார்ஜ் - யைவரவேற்கும்பொருட்டுஐந்துபத்திகள்கொண்டஒருவாழ்த்துப்பாடலைகவிஞர்ரவீந்திரநாத்தாகூர்வங்கமொழியில்இயற்றினார்.பிறகுஅவரேஅதைஆங்கிலத்தில்மொழிப்பெயர்த்தார்.அவரின்நெருங்கியநண்பரானஅபித்அலிஅதைஇந்தியில்மொழிப்பெயர்த்தார்.அதன்பிறகுஒரேபொருள்கொண்டமூன்றுவிதமானதேசியக்கீதம்பாடப்பட்டுவந்தன.இம்மூன்றுபடைப்புகளுக்கும்இசைக்கோர்க்கும்பணியைதாகூர்மேற்க்கொண்டார்.அதில்இந்திமொழிப்பெயர்ப்புபாடல்முதன்முதலாகதிசம்பர் 27 – 1911 அன்றுகல்கத்தாஇந்தியதேசியகாங்கிரஸ்மாநாட்டில்இசைக்கப்பட்டது.
இந்தியவிடுதலைக்குப்பிறகுஅம்பேட்கர்தலைமையிலானசட்டவரைவுக்குழுஜனவரி 14 - 1950 அன்றுஇந்தியில்மொழிப்பெயர்க்கப்பட்ட”ஜனகனமணகதி” பாடலில்உள்ளமுதல்பத்தியைமட்டும்தேசியகீதமாகஏற்றுக்கொண்டது.தாகூர்முதல்பத்தியைபுராபி( காலை) ராகத்தில்  52 வினாடிக்குள்பாடிஇசையமைத்திருந்தார்.  எனவேஅப்பாடல்தோராயமாக  52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்எனகாலநிர்ணயம்செய்யப்பட்டது.
தொடக்கக்காலம்தொட்டுபலரும்தேசியக்கீதத்திற்குகுரல்கொடுத்துவந்திருக்கிறார்கள்.இசையமைப்பாளர்கள்அவருக்குபிடித்தமானராகத்தில் ,தாளத்தில்இசையமைத்துதனியாகஆல்பம்வெளியிட்டுசுதந்திரஉணர்வைபறைச்சாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில்ஒவ்வொருமாநிலமும்தன்கென்றுஒருமாநிலப்பாடலைஉருவாக்கிக்கொள்ளமுணைந்தது.அதன்படிமாநிலஅரசுகள்விழாவின்தொடக்கத்தில்மாநிலப்பாடல்என்றும்இறுதியில்தேசியக்கீதம்என்றும்வரையறுத்துக்கொண்டது . எனவேதாகூர்சுரப்படுத்தியஅதிகாலைநேரபுராபிராகம்அதற்குஉகந்ததாகஇருக்கவில்லை.எனவேஎல்லாநேரத்திற்கும்பொருந்தும்படியாகசங்கராபரணம்ராகத்திலானதேசியக்கீதம்உருவாக்கிக்கொள்ளப்பட்டது.
தேசியக்கீதம்பற்றியதகவல்களைதகவல்அறியும்சட்டத்தின்கீழ்அறிந்துக்கொள்ளமுடியாது.ஏனெனில்அதற்கென்றுஎந்தவொருசட்டவிதிகளும்இல்லை. ஆனால்தமிழ்த்தாய்வாழ்த்துஅப்படியன்று. தமிழ்த்தாய்வாழ்த்துசட்டவிதிகளுக்குஉட்பட்டது.ஆம்!1970 ஆம்ஆண்டுதமிழகஅரசு – பொதுப்பணித்துறைமெமோஎண்- 3584 /  70 – 4 நாள் 23.11.1970 உத்தரவுஇவ்வாறுவரையறைசெய்துள்ளது.
1.“பெ. சுந்தரம்பிள்ளை“ இயற்றியமனோன்மணீயம்நூலிலுள்ள “ நீராரும்கடலுடுத்த ” என்கிறபாடல்தமிழ்தாய்வாழ்த்துப்பாடலாகஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பாடலைமாநிலஅரசு , உள்ளாட்சித்துறைமற்றும்கல்விநிறுவனங்களில்வழிப்பாட்டுபாடலாகவும் , விழாத்தொடக்கப்பாடலாகவும்பாடப்படவேண்டும். ( விழாமுடிவின்போதுபாடக்கூடாது)
2.  இப்பாடல்மோகனராகம், திஸ்ரம்தாளத்தில்திரு . எம்.எஸ் .விஸ்வநாதன்அவர்கள்இசைக்கோர்ப்பின்படிபாடப்படவேண்டும்.
இந்தஇரண்டுஉத்தரவுளும்அன்றையதுணைதலைமைச்செயலர்டி.வி. வெங்கடராமன்அவர்களால்பிறப்பிக்கப்பட்டுஅனைத்துதுறைகளுக்கும்அனுப்பிவைக்கப்பட்டது.
சிலப்பதிகாரம், மணிமேகலைஅளவிற்கு “மனோன்மணீயம்” பிரபலமானநூல்அல்ல.தமிழ்மொழிக்குரியமூலக்கதையும்அல்ல.எட்வர்டுபுளுவர்லிட்டன்பிரபுஎழுதிய“ தசீக்ரெட்வே ” எனும்ஆங்கிலஇலக்கியத்தைதழுவிஎழுதப்பட்டநாடகஇலக்கியம்அது.  சேரமன்னன்பாண்டியமன்னன்மீதுபோர்புரியசூழ்ச்சிமேற்கொள்ளும்கதை, இடையிடையேகாதல்கட்டமைப்பைக்கொண்டது.
இந்நாடகத்தை 1891 ஆம்ஆண்டுஇயற்றியசுந்தரம்பிள்ளைஅந்நூலைஅவரேவெளியிட்டுக்கொண்டார்.இந்நாடகத்தைதமிழ்நாடகத்தின்தந்தைஎனப்போற்றப்படும்பம்மல்சம்பந்தமுதலியாரிடம்கொடுத்துவிமர்சனத்தைக்கேட்டறிந்தார். பம்மல்அவர்கள் “இந்தஇலக்கியநாடகம்படித்துஉணர்வதற்குமட்டுமே. அரங்கேற்றுவதற்குஉகந்ததுஅல்ல ”எனவிமர்சனம்செய்தார்.  அவரதுவிமர்சனத்திற்கேற்பஅந்தஇலக்கியம்இதுநாள்வரைமக்கள்முன்நாடகமாகஅரங்கேற்றமாகவில்லை.ஆனால் 1942 ஆம்ஆண்டுஎம், எல், டாண்டன்திரைக்கதையில்பி.யூ.சின்னப்பாநடித்துதிரைப்படமாகஎடுக்கப்பட்டது.இப்படத்தில்தான்கே.வி. மகாதேவன்இசையமைப்பாளராகஅறிமுகமானார்.
“பத்தொன்பதாம்நூற்றாண்டின்பேராசிரியர்” எனசிறப்பிக்கப்படுபவர்பெ.சுந்தரம்பிள்ளை.தமிழாய்ந்ததமிழ்பேரறிஞர்அவர்.அவர்மூதாதையர்களின்பூர்வீகம்தமிழகம்என்றாலும்அவர்வசித்ததுமேற்குவெனிஸ்எனஅழைக்கப்படும்ஆலப்புழை.மலையாளம்திறம்படக்கற்றவர்அவர்.தமிழ்மூத்தமொழிஎன்பதால்தமிழ்மொழியில்பட்டப்படிப்புகளைத்தொடர்ந்தவர்.ஆங்கிலஅரசுவழங்கும்மிகஉயர்ந்தபட்டமானராவ்பகதூர்சிறப்புப்பட்டத்தைபெற்றவர். பேராசிரியர், துணைவேந்தர்எனபல்வேறுபதவிகளைவகித்தவர்.
தமிழ்த்தாய்வாழ்த்துமுதலில்கவிஞர்கண்ணதாசனைவைத்துஎழுதவைக்கலாம்எனமுடிவுசெய்யப்பட்டிருந்தது. கவிஞர்அவர்கள்முதலில்அதைமறுத்தார்.பிறகுஅதற்காகஒருபாடலைஎழுதவும்தொடங்கினார்.பல்வேறுதமிழ்அறிஞர்கள்அதைஏற்றுக்கொள்ளமுன்வரவில்லை.பிறகுபாரதியார்மற்றும்பாரதிதாசனின்கவிதைகள்  ,சிலப்பதிகாரம்உட்படபல்வேறுஇலக்கியங்களில்உள்ளவாழ்த்துப்பாடலைஎடுத்துவைத்துக்கொண்டுஆய்வுச்செய்யத்தொடங்கினார்கள். பாரதிதாசன்குழந்தைப்பாடலாகஇயற்றிய“ வாழ்வினில்செம்மையைசெய்பவைநீயே , மான்புகழ்நீயேஎன்தாயே ”  என்கிறப்பாடலும்,  மனோன்மணீயம்நூலில்பெ.சுந்தரம்பிள்ளைஇயற்றிய “ நீராரும்கடலுடுத்த ” மொழிவாழ்த்துப்பாடலும்தேர்விற்குரியதாகின.         
இவ்விருபாடல்களையும்தாகூர்இயற்றியதேசியக்கீதத்துடன்ஒப்பிட்டுபார்க்கப்பட்டது.தாகூர்ஆங்கிலப்புலவர்களால்பாராட்டுப்பெற்றவர்,உலகப்புகழ்பெற்றகவிஞர். அவருடன்ஒப்பிட்டுப்பார்க்கையில்பெ.சுந்தரம்பிள்ளைமொழியால், கல்வியால்மேம்பட்டவராகதிகழ்ந்தார். எனவேசுந்தரம்பிள்ளைஇயற்றியவாழ்த்துப்பாடல்தமிழ்த்தாய்வாழ்த்தாகஜீலை 7 -1970 அன்றுஒருமனதாகமுடிவுசெய்யப்பட்டது.இதைபாண்டிச்சேரிதமிழறிஞர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்களின்கவனம்மண்ணின்மைந்தரானபாரதிதாசன்மீதேஇருந்தது.எனவேஅவர்களின்பதிலுக்காகஐந்துமாதக்காலம்தமிழகஅரசுகாத்திருந்தது.
தமிழ்இலக்கியவாழ்த்துப்பாடல்களில்புவிஇயல், தத்தவஇயல், மொழிஇயல், வரலாற்றுஇயல், தொல்லியல்எனபல்துறைகளைகொண்டுஓர்இலக்கியப்பாடல்இயற்றப்பட்டதுஎன்றால்அதுமனோன்மணீயம்நாடகத்தின்வாழ்த்துப்பாடல்தான். இந்தச்சிறப்பினைஅறியவேண்டுமெனில்நமக்குமுழுப்பாடலும்தெரிந்திருக்கவேண்டும்! மனோன்மணீயம்நாடகத்தின்மொழிவாழ்த்துபாடலின்மொத்தவரிகள்பனிரெண்டு.அதில்ஐந்துவரிகளைநீக்கிஏழுவரிகளைமட்டும்தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலாகதேர்வுசெய்தார்கள்.
நீர்நிறைந்தகடற்பரப்பைஆடையாகஉடுத்தியநிலமகளின்திருமுகமாகப்பரதக்கண்டம்விளங்குகிறது.தெக்கணமாகியதென்னகம்திருமுகநெற்றியாகவும், தமிழகம்நெற்றிப்பொட்டாகவும்கொண்டது ( புவிஇயல்) .  ‘அனைத்துலகும்இன்பமுற ‘, ‘எத்திசையும்புகழ்மணக்கஇருந்தபெரும்தமிழணங்கே‘ (தொல்லியல் ) . ‘பல்லுயிரும்பலஉலகும்படைத்துஅளித்துத்துடைக்கினும்ஓர்எல்லையறுபரம்பொருள்‘( தத்துவம்) , கன்னடமும்களிதெலுங்கும்கவின்மலையாளமும்துளுவும்உன்உதிரத்துஉதித்துஎழுந்தேஒன்று ( மொழியியல் )”எனபல்துறைசிறப்புமிக்கபாடலாகஅதுஇயற்றப்பட்டிருக்கிறது.
மறைமலையடிகள் ,பரிமாற்கலைஞர், பேராசிரியர்பெ. சுந்தரம்பிள்ளை, பாரதியார்உட்படபலரும்தென்னகமொழிகளுக்குதாய்“தமிழ்” தான்என்றார்கள்.இராமலிங்கஅடிகள்தமிழ்எம்மொழிக்கும்தந்தைமொழிஎன்கிறார்.ஆனால்அன்றையநாளில்தென்னிந்தியாவில்நிகழ்ந்தமொழிஅரசியல்தமிழைதாய்அல்லதுதந்தைமொழிஎன்கிறகூற்றைஏற்றுக்கொள்ளஅண்டைமாநிலங்கள்முன்வரவில்லை. 
மலையாளம், தெலுங்கு ,கன்னடமொழியாளர்கள்அதற்குதொடர்ந்துஎதிர்ப்புதெரிவித்துவந்தார்கள். தமிழறிஞர்களைத்தவிர்த்துமற்றமாநிலமொழியாளர்கள்ஒன்றுகூடி‘தென்னகமொழிகளின்தாய்மொழிதமிழ்‘ என்கிறமுழக்கத்தைமுறியடிக்கதனிஇயக்கம்காணமுயன்றார்கள். இதனைக்கருத்தில்கொண்டுகன்னடம், ,தெலுங்கு , மலையாளம், துளு , ஆரியம்சொற்கள்பொதிந்தஐந்துவரிகளைநீ்க்கிமற்றவரிகளைக்கொண்டவாழ்த்துப்பாடலைதமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலாகஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்றுதமிழ்த்தாய்வாழ்த்துப்பாடல்கன்னடம், மலையாளம், தெலுங்குமொழிகளில்மொழிப்பெயர்க்கப்பட்டுபாடநூல்களில்இடம்பெற்றுள்ளது.ஒருவேளைஅந்தஐந்துவரிகளையும்தேர்வுக்குழுநீக்காமல்இருந்திருந்தால்இன்றுஅப்பாடல்மற்றமொழிகளில்மொழிப்பெயர்த்திருக்கவாய்ப்பில்லை. சரி! பாரதிதாசனின்“ வாழ்வினில்செம்மையைசெய்பவைநீயே ” என்கிறபாடல்என்னஆனது? அதுதான்பாண்டிச்சேரிமத்தியஆட்சிப்பகுதியின்தமிழ்த்தாய்வாழ்த்து. 
“ நீராரும்கடலுடுத்த“பாடல் “ஆசிரியப்பா” இலக்கணப்படிஅமைந்தப்பாடலாகும்.எனவேஅது “அகவற்பாஓசை” யைஉடையது.இதனைக்கருத்தில்கொண்டுஅப்பாடல்மெல்லிசைமன்னன்எம்.எஸ்விஸ்வநாதனின்இசையில்மோகனராகத்தில்டி.எம்.சௌந்தராஜன்குரலில்பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 
இன்றுபலபாடகர்கள்தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலைநவீனப்படுத்தும்முயற்சியில்இறங்கியிருக்கிறார்கள். அதைஅவரவர்ராகத்தில்பாடிஇணையத்தில்கோர்த்திருக்கிறார்கள்.அதைதேடிப்பிடித்துகேட்கும்பொழுதுவாழ்த்துதுமேஎன்பதுவால்த்துதுமேஎன்றும்முகாரிராகத்திலும்ஒலிப்பதைக்கேட்டுஒருசராசரிதமிழனால்கவலைப்படாமல்இருக்கமுடியவில்லை!                                               
அண்டனூர்சுரா (தொடக்கப்பள்ளிஆசிரியர்)
மண்டேலாநகர்கந்தர்வகோட்டைபுதுக்கோட்டைமாவட்டம்613301
தொடர்புக்கு958565 - 7108

                       




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக