வாழ்க்கையின் அர்த்தம் என்றொரு நூல் மின் பக்கத்தில் வாசிக்க கிடைத்தது. பேயோன் , ஆனந்த விகடன் மூலமாக அறியப்பட்டிருக்கிறேன். பத்தி எழுத்தாளர். சோபாவில் ஒரு ஆசிரியர் என்றொரு அனுபவக் கட்டுரை. மாணவனாக இருந்த பொழுது சரியாக எழுத்தப்படாத நோட்டை ஆசிரியர் கிழித்து எறிகிறார். அதே ஆசிரியரை பல்லாண்டு கழித்து ஒரு வங்கியில் சந்திக்கிறார். தான் உங்கள் மாணவன் என அறிமுகம் செய்துகொண்டு அவன் எழுதிய நூலினை அவரிடம் கொடுக்கிறான். ஆசிரியர் அதை அப்பொழுதே பிரித்து வாசிக்கிறார். என்ன நீ எழுதியிருக்கிறாய்....என அந்நூலை ஆசிரியர் கிழித்து எறிகிறார். இப்படியாக முரண்பட்ட நகைப்பான கதைகளின் கட்டுரைத் தொகுப்பு.
சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

கருத்துகள்
கருத்துரையிடுக