முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2016 ஆம் ஆண்டு நான்....

 2016 ஆம்  ஆண்டு இலக்கியத்துறையில் நான்..
இவ்வாண்டின் தொடக்கத்தில் ‘ லெக்கிங்ஸ்’ என்கிற சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானது. கடைசியாக  ‘ ம்...’ கதைசொல்லி மாத இதழில்.
இவ்வாண்டில் பிரசுரமான மொத்தச் சிறுகதைகள்   - 19
கட்டுரைகள்   -      5
நூல் வெளியீடு - 1
ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை ( சிறுகதைத் தொகுப்பு) - இருவாட்சி பதிப்பகம்.
பரிசுகள்  பெற்ற விபரம்
1. ஆஸ்திரேலியா- அக்னிக்குஞ்சு இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
2. வெண்மணி அறக்கட்டளை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ( பரிசு இதுநாள் வரைக்கும் வழங்கப்படவில்லை)
3. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
4. டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
5. காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய     சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
6. வானதி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு
7. லண்டன் புதினம் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
திற - சிறுகதைத் தொகுப்பிற்காக...
8. கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்பு பரிசு
9. ஈரோடு தமிழ் சங்கம் மூன்றாம் பரிசு.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் 4 படைப்புகள் அதிகம்.
மன நிறைவு தந்த நிகழ்வு
கோவை இலக்கிய சந்திப்பு
ஏமாற்றம்
லண்டன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாதது
2016 ஆம் ஆண்டினை இன்முகத்துடன் அனுப்பி வைக்கிறேன்.....



கருத்துகள்

  1. வலைப்பதிவக காண்செவிக் குழு வழியே வந்தேன் நண்பா, உங்களின் 2016இன் தொடர் படைப்புகளின் எண்ணிக்கை மகிழ்ச்சி தருகிறது. 2017 இன்னும் சிறக்க இனிய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. 2017 மேலும் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துகள்.....

    தமிழ் வலைப்பதிவகம் வழியே வந்தேன். தொடரும் வசதியை வைத்துக் கொண்டால் நல்லது...

    தொடர்ந்து சந்திப்போம்....

    தலைநகரிலிருந்து

    வெங்கட்....

    பதிலளிநீக்கு
  3. மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழர்...

    பதிலளிநீக்கு
  4. சுயமதிப்பீடு நம்மை மென்மேலும் வளர்க்கும். இவ்வாறான பழக்கத்தை நான் கையாண்டு வருகிறேன். 2017இல் மேலும் சாதிக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...