முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மாலெ தீப்பொறி - எஸ்.குமாரசாமி

மாலெ தீப்பொறி - எஸ்.குமாரசாமி - போர் பற்றிய கட்டுரையில் மகுடேஸ்வரன் - இன் கவிதை ஒன்றை சுட்டிக்காட்டிருந்தார்.  உத்தரவிடுவோன் மு்னை முகத்தில் நிற்கும்முதல் ஆளாய் இருத்தல் வேண்டும் என்றிருந்தால் இவ்வுலகில்போர் நிகழுமா, என்ன?. ஆழமான கட்டுரைக்கு அக்கவிதை மேலும் ஆழப்படுத்திருந்தது. அ்னைவரும் வாசிக்கவேண்டிய கட்டுரை அது.

இரோம் ஷர்மிளா - ஒரு பெண் புலியின் பொதுவழிப்பாதை.

        ‘என்னை பத்திரிக்கையில் போடாதீர்கள்...’ என்றொரு சிறுகதை. ஒரு குடிசைக்குள் நுழையும் இந்திய இராணுவம் ஒரு அப்பாவிச் சிறுவனைக் கைது செய்கிறது. அச்சிறுவன் தான் கைது செய்யப்படுவதற்கானக் காரணத்தைக் கேட்கிறான். இராணுவம் துப்பாக்கியை நீட்டியபடி காரணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லிவருகிறது. சிறுவன் ‘ நான் ஒரு தவறும் செய்ய வில்லை...நான் சின்னப்பையன், சாராயம், போதை மருந்து எனக்குத் தெரியாது. நான் உளவாளி இல்லை,. யாரிடமும் நான் பணம் வாங்கவில்லை...என்னிடம் எந்தத் துப்பாக்கியும் கிடையாது. நான் தீவிரவாதி கும்பலைச் சேர்ந்தவனில்லை. நீங்கள் சொன்ன எந்த விஷயமும் எனக்கு சம்மந்தமில்ல, நான் அப்பாவி. நான் செத்துப்போயிட்டேன் என்றால், என்னைப் பற்றி  அவதூறாகப் பத்திரிக்கையில் எழுதாதீர்கள். ஏனென்றால் அதை மறுக்க என் தரப்பில் யாருமில்லை....’ அவன் மீது இராணுவத் தோட்டாக்கள் பாய்கின்றன.        மணிப்பூரி எழுத்தாளர் ஈ.ஸோனாமணி சிங் எழுதிய இக்கதையை கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கினால் அச்சிறுவன் சுடப்படும் அரவம், அழுகுரல், கதறல் யாவும் வடகிழக்குத் திசையி...

அசோகமித்ரனின்‘ பிரயாணம்’

சாகாத நாக்குகள் - 10 பகுதியில் அசோகமித்ரனின் ‘ பிரயாணம்’ கதையை நானும் வாசித்திருக்கிறேன். முதலில் எனக்கு அக்கதை சொல்ல வரும் செய்தி சரியாகப் பிடிபடவில்லை. பிரபலமான எழுத்தாளர் எழுதிய கதையாயிருச்சே...என்று அக்கதையை திரும்பத்திரும்ப வாசித்தேன். அக்கதையை நான் புரிந்துகொண்ட விதம் இப்படியாக இருந்தது.குரு- சிஷ்யன் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை பரிசோதிக்கும் கதையாக இக்கதை எனக்குப்பட்டது.           இக்கதையில் குரு தன் சீடனுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார். எத்தனை ஆண்டுகள் கற்றுக்கொடுக்கிறார். அவனை எப்படியாக பாவித்து கற்றுக்கொடுக்கிறார் என்கிற காட்சி கதையில் இடம் பெற வில்லை. ஆனால் இக்கதை சொல்லவரும் செய்திக்கு இருவருக்குமிடையேயான நெருக்கம், காலம் வேண்டியதில்லை என எழுத்தாளர் அசோகமித்ரன் நினைத்திருக்கலாம்.        நான் கதையில் இடம்பெறும் குரு  துரோணாச்சார்யார் என்றும், சீடனை ஏகலைவனாகவும் பாவித்துப்பார்த்தேன்.        கதைப்படி, சீடன் தன் குருவை மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வருகிறான...

இண்டமுள்ளு - நூல் விமர்சனம்

     எழுத்தாளர் அரசன் எழுதித் தொகுத்திருக்கும் ‘இண்டமுள்ளு’ சிறுகதைகளை வாசித்து முடித்ததும் எனக்கு சொல்லத் தோன்றுவது இதுதான். ‘ கிராமத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னால் தாத்தா- பாட்டி காலத்துடன் சம வயதில் வாழ்ந்த திருப்தி வருகிறது.’      வளர்மதி பதிப்பகம் மூலமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலுக்கு சி.கருணாகரசு அணிந்துரை எழுதியிருக்கிறார். மிகச்சிறப்பான அணிந்துரை. பெருஞ்சொம கதையை பெரிய அளவில் சிலாகித்து எழுதியுள்ளார். அந்த அளவிற்கு அக்கதையும் இருக்கிறது. சற்றே பெரியக் கதை அது. இக்கதையின் மருதன் - பார்வதி பாத்திரம் கதை முழுக்க விரிந்து மனதில் பெரிய சலத்தை ஏற்படுத்துகிறது. மருதன் , அவரது பெரியப்பா - பெரியம்மா சார்ந்த குடும்ப நகர்வுகளை வாசிக்கையில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த உணர்வைத் தருகிறது.      கெடாவெட்டி கதை ஆடு உரிப்பு கதையாக நீண்டு ஒரு துக்கத்தை அதிர்ந்து பேசுகிறது. பிணம், துக்கம் சொல்லிப்போதல், மரம், அறுத்தல், அடுக்குதல், பாடையைத் தூக்குதல் போன்ற சம்பவங்களை சொல்லிச்செல்கிறது.      பெருஞ்சொ...

தேசியக் கல்விக் கொள்கை

        ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016 இன் முன்னோட்டம் பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தொழிற்நுட்பக் கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம், பத்தாம் வகுப்புகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் தவிர்த்து தொழிற்பாடங்கள் அறிமுகம், அங்கன்வாடி மாணவர்களை பள்ளியுடன் இணைத்து முன்பருவக்கல்வி, மீத்திறம் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு, உதவித்தொகை, ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை ஆசிரியர்களுக்கு கட்டாயத் தேர்வு,...என பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு, முன்னோக்கிய திட்டமிடல் இருந்தாலும் வழக்கம் போலவே ஆரம்பக்கல்வியை விடவும் உயர்கல்விக்கு அதிக முன்னுரிமை, நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் இருக்கத்தான் செய்கிறது.         இயல் - 1         ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கல்விக்கொள்கை - 2016 இன் முகப்புரையை வாசித்தால் இம்முகப்புரை யாருடைய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது என சொல்லிவிடுமளவிற்கு முகப்புரை...

யாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்

  யாதுமாகி நின்றேன் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு கவிதை இப்படியாக... இக்கவிதையை எழுதிய கவி இளவலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.       கோழிகள் மிதித்ததில்       குஞ்சுகள் மடிந்தன.          ஆனால் இறந்தவை அனைத்துமே       ‘கோழி’க் குஞ்சுகள்       என்ன நண்பர்களே...புரியவில்லையா! கவிதையின் தலைப்பு ‘ பெண் சிசுக்கொலை’

பிரச்சாரப் பீரங்கி

   க ட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தினைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கக்கூடிய கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்களே....        முன்னிலை வகித்திருக்கக்கூடிய கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அவர்களே....      இக்கட்சிக் கூட்டத்தினை நெறிப்படுத்த கட்சியின் தலைமையிடத்திலிருந்து வந்திருக்கக்கூடிய மத்திய பொதுக்குழு உறுப்பினர் அவர்களே....       நன்றி நல்க இருக்கிற கட்சியின் பொருளாளர் அவர்களே...       கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களே....     கட்சிக்காகவும் நம் தலைவருக்காகவும் தன் இன்னுயிரையும் கொடுக்க இருக்கிற கட்சித் தொண்டர்களே....அனைவருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்கிறவன் முறையில் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.        நண்பர்களே.....        இது அவசரக்கூட்டம். தலைவரின் உணர்ச்சிப்பூர்வமான பொதுக்கூட்ட உரைக்குப் பிறகு கூடியிருக்கிற கூட்டம். மிக முக்கியமானக் கூட்டம். நம்மை , ந...

சாதனை

இன்றைய( 11.09.2016) தீக்கதிர் - வண்ணக்கதிரில் ஒரு கவிதை. சுஜித் எழுதியது. அக்கவிதையை வாசிக்கையில்  என் மகன் என்னிடம் சொல்வதைப் போலிருந்தது.                 சாதனை படுக்கையில் பாத்ரூம் போறதெல்லாம் நிறுத்திட்டேன் கட்டைவிரல் சப்புறதையும் சத்தியமா குறைச்சுட்டேன்ல ஸ்ட்ரா வச்ச டம்ளரையும் தம்பிக்கிட்ட கொடுத்துட்டேன்ல நாலு சக்கர சைக்கிளையும் ரெண்டாக மாத்திட்டேன்ல அப்பா ஸ்கூட்டிலேயே நான் முன்னாடி உக்காருரதில்ல தெரு கிரிக்கெட்ல கூட இப்ப நான் உப்புக்கு சப்பாணி இல்ல பேனா ரப்பரெல்லாம் நானிப்ப தொலைக்கிறதில்ல பக்கத்து வீட்டு பாபுவ விட இப்ப நான் ஹெயிட்டு தெரியும்ல இந்த தடவையாவது எனக்கு முழு டிக்கெட் எடுமா!

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங்

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங் - நூல் விமர்சனம்        என்.சி.பி.எச் வெளியீடு. நான்காம் பதிப்பு. விலை ரூபாய் எழுபது.        ‘விஞ்ஞானம் - நேற்று - இன்று - நாளை ’ பதினேழு கட்டுரைகள் உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கிறது. அறிவியல், வரலாறு இரண்டையும் கலந்து தொகுக்கப்பட்ட தொகுப்பினை வாசிக்க நம்மை விண்வெளிக்குள் அழைத்துச்சென்று பால்வெளித் திரளுக்குள் ஒரு புள்ளியாக கரைத்துவிடுகிறது.        சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள கேலக்ஸி ஆண்ட்ராமீடா என்கிற பால்வெளித்திரள், நம்முடைய பால்வெளி ஸ்பைரல் கேலக்ஸ், சந்திரனிலிருந்து பார்த்தால் பூமி எப்படித் தெரியும், மனிதனின் மூதாதையர் குரங்கு தானா...? மீனிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறதா...? காற்றிலுள்ள ஹைட்ரஜனைப்பிரித்தெடுத்து எரிபொருள் தயாரிக்க முடியுமா...? ஒரு வேளை தயாரித்தால் ஒரு டீ ஸ்பூன் அளவிலான பெட்ரோலுக்கு ஈடாக எவ்வளவு ஹைட்ரஜன் தேவைப்படும், குரோமோசோம்களின் உருவாக்கம், ஏப் வகை குரங்கிற்கும் மனதினுக்கும் உள்ள தொடர...

நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து

காக்கை இதழ் - செப்டம்பர் - நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து கட்டுரை வாசித்தேன்.        இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து இதுநாள் வரை நான் வாசித்த கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அக்கட்டுரை சொல்ல வந்திருப்பது ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகள். ஆனால் அத்தனை இலகுவாக, மாணவர்களின் மெட்ரிக், நீட்டல், நிறுத்தல் அளவைகளுடன், சவ்வூடு பரவலாக ஆசிரியர்களின் மனதிற்குள் நுழைந்து வேதி வினை நிகழ்த்திருக்கிறது. இத்தகைய நல்லக்கட்டுரை ஆசிரியர்களைத் தாண்டி எத்தனைப்பேருக்கு புரியமெனத் தெரியவில்லை. என் கவலை அதுவல்ல. நம் ஆசிரியர்களில் எத்தனைப்பேர் இதை வாசிக்கப் போகிறார்கள்....?        கட்டுரையை கீழ்க்காணும் வாசகங்கள் அழகூட்டுகிறது.        பொருட்களைக் கையாளும்போது உணர்வு ஒரு துருவத்தில்தான் செயல்படுகிறது. மனிதர்களைக் கையாளும் போது இருபுறமும் உணர்வு ஏற்படுகிறது.        ஆசிரியர்களாகிய நீங்கள் தவறு செய்தால் பதின்பருவ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். நீங...

நூல் விமர்சனம்

ஏன் பெண்ணென்று பிறந்தாய்....! கிருஷ்ணன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். முழுக்க முழுக்க காதல் கவிதைகளின் தொகுப்பு அது. தொகுப்பில் பழநிபாரதியின் அணிந்துரை மிகச்சிறப்பு. அவர் அணிந்துரையை இவ்வாறு முடித்திருக்கிறார். கடவுளால் படைக்கப்பட்ட பெண்.... காதலால் படைக்கப்பட்ட பெண்.... இருவரை விடவும் அழகாக இருக்கிறாள் இங்கே கவிதையால் படைக்கப்பட்ட பெண்!          தொகுப்பின் காதல் கவிதைக்குள் வருகிறேன்..! முதல் கவிதை காதலிக்காதவர்களையும் காதல் மறந்து போனவர்களையும் மீண்டும் காதலிக்க வைத்துவிடுகிறது.          தன்னைக் கடந்து செல்லும்          பெண்களில் ஒருத்தியைக்          காதலிக்க வேண்டுமென்ற எண்ணம்          ஆண்களுக்கு இருப்பதென்னவோ          இயல்புதான்! ஆனால் நீ கடந்து செல்லும் போதெல்லாம் உன்னைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களையு...

மச்சக்குட்டி

                              ‘ அம்ம ... செவிட்டி குட்டி ஈனப்போகுது....’ ‘படக்..படக்’கென காவ்யாவின் கண்கள் அடித்துக்கொண்டன. ‘அய்..’ யென  ஒரு சிரிப்பு சிரித்துகொண்டாள். ‘மாக்..’ கென ஒரு குதி குதித்துகொண்டாள். தவளை தாவித்தண்ணீருக்குள் குதிப்பதைப்போன்ற  தடாகக்குதிப்பு அது. அவள் குதித்தக்குதியில் பாவாடை அவிழ்ந்து நழுவிக்கொண்டு சென்றது. லாவகமாக அதை ஒரு கையால் பிடித்துகொண்டாள். மறுகையால் தொடையை அடித்துகொண்டாள். பந்து குதிப்பதைப்போல ஒரே இடத்தில் நின்றுகொண்டு குதித்தாள். அவளது குதியில் உருப்பட்டிகள் நாலாபுறமும் தெறித்து வெறித்து ஓடின ‘ கொர்...கொர்...’ என பெருமூச்சொரிந்து உறுமின.    ‘ அம்ம.....’ பார்வைக்கயிறு கொண்டு அம்மாவை இழுத்தாள். அவளது அழைப்பில் அத்தனை கெஞ்சல், பாசம், பிசிபிசிப்பு இருந்தது.           அவள் வீட்டில் எத்தனையோ பன்றிகளும், குட்டிகளும், கிடாக்களும் இருந்தாலும் அவளுக்குப்பிடித்தது செவிட்டிதான்.      ...