முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து

காக்கை இதழ் - செப்டம்பர் - நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து கட்டுரை வாசித்தேன்.
       இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து இதுநாள் வரை நான் வாசித்த கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அக்கட்டுரை சொல்ல வந்திருப்பது ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகள். ஆனால் அத்தனை இலகுவாக, மாணவர்களின் மெட்ரிக், நீட்டல், நிறுத்தல் அளவைகளுடன், சவ்வூடு பரவலாக ஆசிரியர்களின் மனதிற்குள் நுழைந்து வேதி வினை நிகழ்த்திருக்கிறது. இத்தகைய நல்லக்கட்டுரை ஆசிரியர்களைத் தாண்டி எத்தனைப்பேருக்கு புரியமெனத் தெரியவில்லை. என் கவலை அதுவல்ல. நம் ஆசிரியர்களில் எத்தனைப்பேர் இதை வாசிக்கப் போகிறார்கள்....?
       கட்டுரையை கீழ்க்காணும் வாசகங்கள் அழகூட்டுகிறது.
       பொருட்களைக் கையாளும்போது உணர்வு ஒரு துருவத்தில்தான் செயல்படுகிறது. மனிதர்களைக் கையாளும் போது இருபுறமும் உணர்வு ஏற்படுகிறது.
       ஆசிரியர்களாகிய நீங்கள் தவறு செய்தால் பதின்பருவ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். நீங்கள் காமம், வெகுளி, மயக்கம் கொள்வதால் உங்களுக்கு போதித்த ஆசிரியச் சான்றோர்களின் நாமம் கெடும்.
       நடுநிலைக் கரைசலாக இருக்க வேண்டிய உங்களின் வேதிச் சமநிலை குலைந்ததால் ஏற்பட்ட இடமாறு தோற்றப்பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
       நீங்கள் குடல்வாலோ, பித்தப்பையோ அல்ல. மனித சாரத்தின் நாடி நரம்புகள்.
       குழந்தைகள் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவைகள் அல்ல. அவர்கள் படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியிருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவரின் அசைவையும் துல்லியமாகக் கணிக்கும் இயற்பியல் தாரசுகள்.
       உங்கள் அறிவுக்கும் வயதுக்கும் எள்ளளவும் இணையானவர் இல்லை குழந்தைகள். அவர்களிடம் தோற்றுப்போவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது.
       தகு பின்னம், தகா பின்னங்களாக வந்து சேரும் அவர்களை முழுக்களாக மாற்றுவதே ஆசிரிய மகிமை.
       உங்கள் அட்ச ரேகை, தீர்க்க ரேகைத் துருவங்களின் நிலப்படம்தான் குழந்தைகளின் ஆயுள் ரேகையைத் தீர்மானிக்கிறது
       இப்படியாக நவீன நன்னெறியுடன் நீளும் கட்டுரை இவ்வாறு முடிகிறது...‘ எவ்வழி  நல்லவர் எம் ஆசிரியர், அவ்வழி நல்லை வாழிய நிலனே....’ இதைவிடவும் சிறப்புற ஆசிரியரை வாயுறை வாழ்த்திட இன்னொருவர் வேண்டுமா என்ன...!

       எழுத்தாளர் நா. அருள்முருகன் அவர்களையும், இக்கட்டுரையை பிரசுரம் செய்திருக்கும் காக்கை இதழையும் இப்பொழுதே நன்றிப்பாராட்டுவதை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...