முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங்

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங் - நூல் விமர்சனம்
       என்.சி.பி.எச் வெளியீடு. நான்காம் பதிப்பு. விலை ரூபாய் எழுபது.
       ‘விஞ்ஞானம் - நேற்று - இன்று - நாளை ’ பதினேழு கட்டுரைகள் உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கிறது. அறிவியல், வரலாறு இரண்டையும் கலந்து தொகுக்கப்பட்ட தொகுப்பினை வாசிக்க நம்மை விண்வெளிக்குள் அழைத்துச்சென்று பால்வெளித் திரளுக்குள் ஒரு புள்ளியாக கரைத்துவிடுகிறது.
       சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள கேலக்ஸி ஆண்ட்ராமீடா என்கிற பால்வெளித்திரள், நம்முடைய பால்வெளி ஸ்பைரல் கேலக்ஸ், சந்திரனிலிருந்து பார்த்தால் பூமி எப்படித் தெரியும், மனிதனின் மூதாதையர் குரங்கு தானா...? மீனிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறதா...? காற்றிலுள்ள ஹைட்ரஜனைப்பிரித்தெடுத்து எரிபொருள் தயாரிக்க முடியுமா...? ஒரு வேளை தயாரித்தால் ஒரு டீ ஸ்பூன் அளவிலான பெட்ரோலுக்கு ஈடாக எவ்வளவு ஹைட்ரஜன் தேவைப்படும், குரோமோசோம்களின் உருவாக்கம், ஏப் வகை குரங்கிற்கும் மனதினுக்கும் உள்ள தொடர்பு பல அறிவியல் புதிர்களை விடுத்து அவிழ்த்திருக்கிறது.
       ஒரு பக்கம் சகாரா பாலைவனம், இன்னொரு துருவத்தில் அண்ட்ராட்டிகா பனி இவை இரண்டும் மொத்தப்பூமியின் வெப்ப சமநிலையை ஈடு செய்கிறது. அயல் கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வேற்றுக்கிரவாசிகள் வந்துப்போனதாகச் சொல்கிறார்களே உண்மைதானா...? அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா...? ஒரு செயற்கைக்கோளினைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமா....கடல்நீரை குடிநீராக்கினால் கடல் மட்டும் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியுமா...? என நீளும் கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு புதிர்கள் முடிந்தும் அவிழ்ந்தும் கிடக்கின்றன.
       இக்கட்டுரையின் தொகுப்பை மாணவர்களுக்குரிய நூலாகக்  கொண்டு வந்திருக்கலாம். மூளை நரம்பு மண்டலம் நியூரான் செல்களால் ஆனது என்பதை நியூட்ரான் செல் என உள்ளதை திருத்தியிருக்கலாம். அடுத்தப் பதிப்பில் இத்தவறு திருத்தப்படும் என நம்புகிறேன்.
       தமிழ் உத்தம் சிங்கின் பரந்த வாசிப்பும், எதையும் அறிவியலாகப் பார்க்கும்  பார்வையும், இக்கட்டுரைகளில் கொட்டிக்கிடக்கிறது. உண்மைகளால் ஆன ஒரு திறந்த பெட்டகம் ‘ விஞ்ஞானம் நேற்று  - இன்று - நாளை’. அனைவரும் வாசித்தாக வேண்டிய ஓர் அறிவியல் தொகுப்பு. தமிழ் உத்தம் சிங் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
        



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...