முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
சு.வேணுகோபால் கணையாழி இதழில் 'மறைந்த பின்னும் பறக்கும் பறவை' குறுநாவல் வாசித்தேன். ஒரு ஓவியக் கலைஞனின் வாழ்க்கை அவனது ஏமாற்றம், குடும்ப சூழலை இந்நாவல் கனத்துடன் பதிவு செய்திருந்தது. நாவல் வால்பாறை சுற்றுலா கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் டீச்சரின் அந்தரங்க உறுப்புகள் உட்பட பலதையும் கேலி செய்து அவர்கள் பெற்ற தண்டனைகளுடன் நகரும் கதை ஓரிடத்தில் யாரென்று தெரியாத ஒருவர் தற்கொலைச் செய்துகொள்ள அதை அவர்கள் காவல் துறையிடம் முறையிட காவலர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொள்ள என திகிலுடன் நகரும் கதை தற்கொலை செய்துகொண்டவர் யாரென தெரியவருகிற பொழுது மனது கனத்து விடுகிறது. தற்கொலைஞன் தமுஎகச, கலை இலக்கிய கூட்டங்களுக்கு ஓவியம் வரையும் மணிமாறனாக இருக்கிறான். ஓவியம் இனி தீட்டவேண்டாம் என்றும் மகள் பூப்பெய்துவிட்டதால் தினக்கூலி வேலைக்கு போக வேண்டும் என அவரது மனைவி பணிக்கிறாள். அவருக்கு ஒரு கலை இலக்கியக் கூட்டத்திலிருந்து ஓவியம் தீட்ட அழைப்பு வருகிறது. மனைவி தடுக்கிறாள். இதற்கிடையில் அவள் தினக்கூலிக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில் ஒருவன் உன் மகளுக்கு நான் நகை எடுத்து தருவதாகவும் உனக்கு எப்பொழுது பணம் கிடைக்கிறதோ அப்பொழுது பணம் தந்தால் போதுமென்று சொல்லியச்செய்தியை அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஒரு பக்கம் ஓவியம் தீட்ட போக முடியாமையும் இன்னொரு பக்கம் மூன்றாவது ஒருவன் மனைவியை வளைக்கப்பார்ப்பதும் அவனுக்குள் உள்ளக்கிடக்கை கிடந்து அடித்துகொள்கிறது. வால்பாறை சுரங்கத்திற்குள் இறங்கி அவரை அள்ளி வருகிறார்கள். அவர் மகளின் பூப்பெய்தல் சடங்கைக் கூட செய்து முடிக்காமல் மனைவியின் ஓலத்தோடு இடுகாட்டிற்கு தூக்கிச்செல்லப்படுகிறார். நாவல் தொடக்கத்தில் குதூகலத்தையும் இறுதியில் ஒரு கலைஞனின் துயர் வாழ்வையும் எழுதிச்செல்லும் இந்நாவல் கலைஞர்களுக்கான நாவல். சு.வேணுகோபால் மற்றும் கணையாழி இதழ் இருவருக்கும் எனது வணக்கங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...