முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனல் காற்று

நாவல் - அனல்காற்று @ஜெயமோகன்

பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக தான் எழுதிய கதை இது என்பதாக முன்னுரை பேசுகிறது. ஒரு வேளை எடுத்திருந்தால் படம் நன்றாக ஓடவும் செய்திருக்கும்.

இந்நாவலை வாசித்ததும் எனக்கு அவள் அப்படித்தான் என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. அப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது திரைபடத்தின் உரையாடல். படம் முழுக்கவும் கதாநாயகி பேசிக்கொண்டிருப்பாள். அப்படியாகவே இந்நாவல் முழுக்கவும் அருண் ,  தன்னை விட்டு பிரிந்து சென்ற சுசியை நினைத்து மருத்துவமனையில் தனக்குத்தானே பேசுவதுதான் கதை.

தன்னை விரும்பும் சுசியிடம் தான் விரும்பும் சந்திரா குறித்து பேசுகிறான் அருண். சநதிரா , விதவைப்பெண். அவளுக்கும் அவனுக்குமான நெருக்கத்தை அப்படியே
படமாக்கியிருந்தால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இதுதவிர fuck , boobs வார்த்தைகள் வேறு.

நாவலின் ஓரிடத்தில் தாய்க்கும் ஜோ என்கிற கதாப்பாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தையும் பேசுகிறது.

உரையாடல்கள் அருமை. சில இடங்கள் காதலையும் , காமத்தையும் , தத்துவத்தையும் பேசுகிறது.

நாவலின் முடிவு நாடகத்தனம். சந்திரா அருணிடமிருந்து சட்டென விலகுவதும்  சுசி அருணுடன் சேர்ந்துவாழ விட்டுக்கொடுப்பதுமான காட்சி வெள்ளைத்திரைக்குத் தேவைதானே.

அனல் காற்று அருண் , சந்திரா இவர்களுக்கிடையேயான நெருக்கத்தின் போது மட்டுமா, வாசகன் வாசிக்கையில் யாரையேனும் சந்திரவாக நினைத்துகொண்டு வாசிக்கையில் அவர்களுக்குள்ளும் அடிக்கவே செய்யும்.

நாவலில் சமூகப்பிரச்சனை என்று ஒன்றுமில்லை. அதே நேரம் காமம் சுரக்கையில்  இருக்கின்ற பிரச்சனைகளை நன்றாகவேச் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...