முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய சிறந்த சிறுகதை - 7

இந்திய சிறந்த சிறுகதை - 7

இரண்டு புத்தகங்க

மலையாளம் - அசோகன் சருவில்.

ஒரு திருடன் திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்வு செய்கிறான். முன்னோட்டமாக அவ்வீட்டிற்குச் செல்கிறான். ஒரு பாட்டியும் தாத்தாவும் இருக்கிறார்கள். பாட்டியின் காதில் இரண்டு பெரிய நகைகள்.

' நீ யாரப்பா ...? ' வளைந்து குனிந்து கண்களுக்கு கைக்கொடுத்து கேட்கிறாள்.

' நான் யாரெனச் சொல்லும் பார்க்கலாம்...'

யோசிக்கிறாள். ' திருச்சபையிலிருந்து பாதிரியார் அனுப்பினாரா..?'

'ம்...'

' என்னால நடக்க முடியல... எப்படியாம் நான் திருச்சபைக்கு போறது. கூப்பிட்டு கூப்பிட்டு விடுகிறார்.  எனக்கொரு உதவி செய்யேன்...'

' என்ன உதவி...?'

' இந்த பைபிள் அவர் கொடுத்தது. அவர்கிட்டேயே கொடுத்திடு...'

வாங்கிக்கொள்கிறான். அடுத்து அதே வீட்டில் தாத்தா நடக்க முடியாமலிருக்கிறார். அவரிடம் செல்கிறான்.

' யாரப்பா நீ...?'

' கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...'

' வாலிப சங்கத்து பையனா நீ...?'

'ம்..'

' கட்சி நல்லா போய்க்கிட்டிருக்கா...?'

'ம்...'

' என்னால இப்ப கட்சியப்பத்தி யோசிக்க முடியுறதில்ல. கட்சியைப் பத்தி பலராமன் எழுதின புத்தகத்த வாசிச்சேன். இப்ப கண்ணு தெரிய மாட்டேங்குது. எனக்கொரு உதவி செய்றீயா...?'

' ம்...'

' இந்தப் புத்தகத்த பலராமனுக்கிட்ட கொடுத்திடு. அவர் வேறு யார்க்கிட்டேயும் கொடுத்து வாசிக்கச் சொல்வாரு....'

இரண்டையும் வாங்கிக்கொண்டு மதுபானக்கடைக்குச் செல்கிறான். மது அருந்துகிறான். அவனுக்கு ஒரு பெண் உதவித் தேவைப்படுகிறாள். வாடிக்கையான ஒரு பெண் கிடைக்கிறாள். அவளை அழைத்துகொண்டு மறைவான இடத்திற்கு செல்கிறாள். அவளிடம் இந்த இரண்டு புத்தகங்களையும் கொடுத்து நடந்த சம்பவங்களைச் சொல்கிறான்.

அவள் கண்கள் கலங்க கேட்கிறாள் ' அப்ப நாளைக்கு நீ அவங்கள கொன்னுடுவல்ல...?'

அவனிடம் ஒரு பதிலும் இல்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...