முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2018 இல் நான்

சிறந்த எழுத்தாளர் விருது



 29 ஆவது ஆண்டாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் பாரம்பரியமிக்க  புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நடந்துவருகிறது. இக்கண்காட்சியில்  ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் , பதிப்பாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்குவது வழக்கம். அவ்வகையில்  இவ்வாண்டு  முத்தன் பள்ளம் நாவலாசிரியர் அண்டனூர் சுரா அவர்கள் சிறந்த எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்டு  அவருக்கு விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. 




18.08.2017









சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.எ அரங்கில் நடைபெறும் புத்தகக் கணகாட்சியில்   பாரதி புத்தகலாயம் அரங்கில் அண்டனூர் சுராவின் கொங்கை நாவல் வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை  நடிகரும் முற்போக்கு செயற்பாட்டாளருமான தோழர் ரோகிணி வெளியிட  , மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் க.சு.சங்கீதா பெற்றுகொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் ஆர்.நீலா, வெய்யில், மு.கீதா, விஜயலெட்சுமி, உமா மோகன் , மனுஷி, பெருமாள் ஆச்சி, வடுவூர் சிவ. முரளி எனப் பலரும் பெற்றுகொண்டார்கள்.

நூல் குறித்து உரையாற்றிய பேராசிரியர் க.சு.சங்கீதா , நாவலின் தலைப்பே அதிரும்படியாக இருக்கிறது,  இந்நாவல் குறித்து இரு விதமாக விமர்சனம் வர வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் கொங்கை குறித்து பேச வேண்டிய காலத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என உரையாற்றினார்.  இவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் மு.கீதா, நாவல் வாசிக்க இலகுமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பெண்சார் பார்வையில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றார். ஆர்.நீலா,  குட்டி ரேவதி எழுதிய முலைகள் நூல் குறித்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் தற்போது கொங்கை வெளிவந்துள்ளது என்றார். வெய்யில், முலை என்று நாவலுக்கு பெயர் வைக்கப்பட்டு கொங்கை என மாற்றியதைச் சுட்டிக்காட்டினார். இந்நாவல் ஆவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றார். இந்நாவலை வெளியிட்ட ரோகிணி அவர்கள் , ' இதுபோன்ற விடயங்கள் பேசப்பட வேண்டிய ஒன்று. ஆண்களின் பார்வையில் கொங்கை என்பது மட்டுமல்ல, பெண்களின் பார்வையில் கொங்கை  எப்படியாக இருக்கிறது என்பதையும் இந்நாவலை வாசித்து தெரிந்துக்கொள்ள  முடியும் ' என்றார். இறுதியாக , ஏற்புரையாற்றிய நூலாசிரியர் அண்டனூர் சுரா , கொங்கை , முலை இரண்டும் ஒன்றைக் குறிக்கும் ஒத்தச் சொல் என்றாலும் வர்க்க வேறுபாடும், அதன் பொருளும் , பார்க்கும் பார்வையால் வித்தியாசம் அடைகிறது என்றவர், இந்நாவல் குறித்து பெண்களின் விமர்சனங்களை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். வெளியிட்ட  அன்றைய தினம் முதலே  பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்நாவல் கி.பி அரவிந்தன் நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய  குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



நவம்பர் ஞானம் இதழில் - சிறுகதைப்போட்டி முடிவு அறிவிப்பு - வீழ்வேனொன்றோ நினைத்தாய்? என்கிற எனது சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...