இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 59-ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தும் நூல்களுக்கான பரிசுப் போட்டி
2015, 2016 ஆம் ஆண்டுகளில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மொழியாக்கம் ஆகிய துறைகளில் வெளியான முதல் பதிப்பு நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ 5000 பரிசளிக்கப்படும். எழுத்தாளர் முகவரி, கைப்பேசி எண், தன்முகவரியிட்ட இரண்டு அஞ்சலட்டைகள் அனுப்ப வேண்டும். நூலில் ஏதும் எழுதுதல் கூடாது. ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டாம். முடிவு நாள் : 15-07-2017
அனுப்பவேண்டிய முகவரி: தலைவர், மணிமேகலை மன்றம்,
146/1 குறிஞ்சித்தெரு, பி.எஸ்.கே. நகர் அஞ்சல், இராஜபாளையம் 626 108
பேசி : 99444 15322
சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...
தகவலுக்கு நன்றி ஐயா. ...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு