tag:blogger.com,1999:blog-40870262267018866572024-03-05T13:53:01.677+05:30அகரம்எழுத்தாளர் அண்டனூர் சுராஅண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.comBlogger195125tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-90630918098634200982020-03-22T20:34:00.001+05:302020-03-22T20:34:37.086+05:30சர்வதேச கவிதைப்போட்டி -2020<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7f8H7gfZimQ-zmMnJkMgypPZDz_A_VcKECujQpCZ-_oTRB2CSmWVJPd99b582hGz_5N4no4RJV4-FKX15Oo5krPnQayhBfwmRwj4GoY89w-VOR89c8UjUmtez2j54UwNTt7aSDvtlKB4/s1600/Screenshot_2020-03-22-20-23-13.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7f8H7gfZimQ-zmMnJkMgypPZDz_A_VcKECujQpCZ-_oTRB2CSmWVJPd99b582hGz_5N4no4RJV4-FKX15Oo5krPnQayhBfwmRwj4GoY89w-VOR89c8UjUmtez2j54UwNTt7aSDvtlKB4/s640/Screenshot_2020-03-22-20-23-13.png" width="360" /></a></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-53404480678871609312019-06-01T13:45:00.003+05:302019-06-01T13:45:58.557+05:30தமிழ் வளர்ச்சித்துறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiug_ytRCxA4mJ00hoiRYmZuEyJjW_SJBJgX9o1rQw1TxvQdd7ubzHRtQx32qqlvV5Xh202Myci1C5omtTpKUhMSc_FbkvB5ZyqQYp68_lMea5JGghYK3MQZS1mkjTp-hHLDhRPP90WsbU/s1600/IMG-20190601-WA0005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1136" data-original-width="1055" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiug_ytRCxA4mJ00hoiRYmZuEyJjW_SJBJgX9o1rQw1TxvQdd7ubzHRtQx32qqlvV5Xh202Myci1C5omtTpKUhMSc_FbkvB5ZyqQYp68_lMea5JGghYK3MQZS1mkjTp-hHLDhRPP90WsbU/s640/IMG-20190601-WA0005.jpg" width="594" /></a></div>
கடைசி தேதி ஜூலை 31</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-73610021656000146272019-05-17T15:24:00.000+05:302019-05-17T15:24:00.515+05:30நூல்கள் வரவேற்கப்படுகின்றன<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKuc5Lphyphenhyphen9J5b7Ba39je8wwvy1dr37_uvyRwLwRsqsan36au0JLzNdUiKQ1LatJ2lEE7pAsTKDcJDIMgmT9CptLtpBJuf7DJ0eObXzJiv-pdNUeBvA90US_LHQgFXYRmiIoi05bO_WBLc/s1600/IMG-20190517-WA0005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="524" data-original-width="405" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKuc5Lphyphenhyphen9J5b7Ba39je8wwvy1dr37_uvyRwLwRsqsan36au0JLzNdUiKQ1LatJ2lEE7pAsTKDcJDIMgmT9CptLtpBJuf7DJ0eObXzJiv-pdNUeBvA90US_LHQgFXYRmiIoi05bO_WBLc/s640/IMG-20190517-WA0005.jpg" width="494" /></a></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-15597359615101368992019-05-17T15:12:00.001+05:302019-05-18T23:24:55.815+05:30நாவல்கள் வரவேற்கப்படுகின்றன<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2rjRcb2uaCY4mMuk0PmxCJzAfCMAcq13EPRt9nc8qXXGjMs-RgszCAtA1nOhr7L_B37VPHweyPhNVgDcKWrhvuFF_fXaswtSKtA403wHDnt7VggUTt6WdvD8GHhCwrvuP4SfC8JWDGRA/s1600/Screenshot_2019-05-14-17-03-54-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="722" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2rjRcb2uaCY4mMuk0PmxCJzAfCMAcq13EPRt9nc8qXXGjMs-RgszCAtA1nOhr7L_B37VPHweyPhNVgDcKWrhvuFF_fXaswtSKtA403wHDnt7VggUTt6WdvD8GHhCwrvuP4SfC8JWDGRA/s640/Screenshot_2019-05-14-17-03-54-1.png" width="478" /></a></div>
<br />
புதின ஆசிரியர் கவனத்திற்கு....</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-11289607145215517512019-01-10T16:23:00.000+05:302019-01-10T16:23:02.849+05:30கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நண்பர்களே,<br />
2019-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதிற்கு<br />
பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.<br />
<br />
2016 – ஆம் ஆண்டிலிருந்து வெளியான கவிதை தொகுப்புகளைப் பரிந்துரைக்கலாம்.<br />
<br />
கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் சேர்த்து அனுப்பவும்.<br />
<br />
கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:<br />
<br />
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை.<br />
38/22, நான்காவது பிரதான சாலை<br />
கஸ்தூரி பாய் நகர், அடையாறு, சென்னை - 600 020.<br />
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.03.2019<br />
<br />
அன்புடன் ,<br />
வேல் கண்ணன்,<br />
கார்த்திகேயன் ராமனுஜம்.<br />
அறங்காவலர்.<br />
கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை,<br />
சென்னை 20.</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-68898199095090863732019-01-05T15:43:00.000+05:302019-01-05T15:46:52.988+05:30விமர்சனங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
05.01.2019</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">சபரிமலை விவகாரம் - தினகரன் இதழ் தலையங்கம்</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">கடலுக்குள் பெண்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, பிராமணர்கள் கடல் தாண்டி வெளிநாடு செல்லக்கூடாது, பெண்கள் விண்வெளிக்கு பயணிக்கக்கூடாது, இடுகாட்டிற்கு பெண்கள் முச்சந்தியைத் தாண்டி செல்லக்கூடாது,</span><br />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">பூப்பெய்த பெண்கள் அந்த மூன்று நாட்கள் கோயிலுக்குச் செல்லக்கூடாது, ஐயப்பன் கோயிலுக்கு அத்தகைய பெண்கள் எப்பொழுதும் மாலையிட்டு செல்லக்கூடாது இப்படியாக இந்து மதம் கட்டமைக்கும் ஐதீகம் நிறைய உண்டு. ஐதீகம் என்பதே நம்பிக்கைகுரிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை. </span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">மூன்று வாரத்திற்கு முன்பு THE HINDU நடுப்பக்கத்தில் அரபிக்கடலில் </span><br />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">மீன் பிடிக்கும் ஒரு மீனவப் பெண்ணைப் படம் பிடித்து இந்தியாவில் நடுக்கடலில் மீன் பிடிக்க உரிமைப் பெற்ற முதல் பெண் என்கிற குறிப்புடன் பேட்டி வெளியாகியிருந்தது. விண்வெளிக்குச் சென்று திரும்பி பெண்களின் பட்டியல் நிறைய உண்டு. இடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் வேறு வழியே இல்லாமல் அனுமதித்த நம்மால் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் முரண்பட்டிருக்கிறோம். </span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">இது குறித்து பத்திரிகைகள்</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">அவர்கள் வழிபட மாதங்கள் தனியே ஒதுக்கலாம்</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">சீசன் காலமான இந்நேரத்தில் பெண்களை இத்தனை அவசரமாக அனுமதித்திருக்க வேண்டியதில்லை</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">முல்லைப்பெரியாறு விஷயத்தில் உச்சநீதி மன்றத்தை மதிக்காத கேரள அரசு இதை மட்டும் இத்தனை அவசரத்தில் நடைமுறைப்படுத்த காரணம் என்ன என்பதாக பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">கோவில் விசயத்தில் மட்டுமல்ல எத்துறையிலும் பெண்களுக்கு சமத்துவம் நிலவ வேண்டும் என்பது என் விருப்பம். </span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">நேற்றைய தினம் மாலை முரசு என்கிற பத்திரிகை ' பிடிவாதம் பிடிக்கும் பினராயி அரசு ' என்கிற தலைப்பில் தலையங்கம் தீட்டியிருந்தது. அத்தலையங்கம் முல்லைப்பெரியாறு - சபரிமலை இவ்விரு பிரச்சனைகளையும் உச்சநீதி மன்ற தீர்ப்பையொட்டி அமுல்படுத்தும் வேகத்தை மையமாக வைத்து எழுதியிருந்தது.</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">இன்றைய தினகரன் இதழில் ' அரசே துணை போவதா? ' என்கிற தலைப்பில் தலையங்கம். அதில் சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டுவது ஆளும் அரசு போன்றும் ஆண்கள் மது, போதை பிரச்சனையிலிருந்து விடுபட ஐயப்பன் தரிசனமே வழி என்பதைப் போலவும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் மீது காட்டு விலங்குகள் தாக்குதல் தொடுக்காமல் காப்பது ஐயப்பன் என்பதைப் போலவும் எழுதப்பட்ட தலையங்கத்தை வாசிக்கையில் நாத்திக - திராவிட - பகுத்தறிவு இயக்க குடும்ப வழி பத்திரிகைதானா இது என ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொள்ள தோன்றியது. 'சபரிமலையிலுள்ள விலங்குகள் கூட ஐயப்பன் என்கிற சொல்லுக்கு கட்டுப்பட்டு யாரையும் துன்புறுத்தியது கிடையாது...' என்கிற வரிகளெல்லாம் தினகரன் இதழுக்கு அழகா, பொருந்துமா , ஏற்குமா..? என்று புரியவில்லை. அத்தலையங்கத்தின் வழியே அதே கேள்வியை இப்படி கேட்கத் தோன்றுகிறது. ஐயப்பன் கோயிலுக்குக் கட்டுப்பட்டு விலங்குகளே பக்தர்களைத் துன்புறுத்தாத பொழுது பக்திப்பெருக்கால் அக்கோயிலுக்கு வரும் பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது சரியா? </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUHK7LaMKfjFzrSb_jSjezWR5-nJL5MWlOrmGlZpTtV4pvbkna9YDd9BQ6LnES0jaQNFZyqq4wbAa3Gk13iXC9SxqKc3kMVoNvxQasZSD5rWQ8e7XPC8XHpRttooFfumDpNmMfy1GUyVU/s1600/Screenshot_2019-01-05-13-51-39-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="869" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUHK7LaMKfjFzrSb_jSjezWR5-nJL5MWlOrmGlZpTtV4pvbkna9YDd9BQ6LnES0jaQNFZyqq4wbAa3Gk13iXC9SxqKc3kMVoNvxQasZSD5rWQ8e7XPC8XHpRttooFfumDpNmMfy1GUyVU/s640/Screenshot_2019-01-05-13-51-39-1.png" width="396" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCezY8Ti5Kq62UQ5jmnqdw61Ku9qQ-ujq-deHbzPssB5Rph-TFhrZFEXyS9Jb6elBF5BjBSrsbbfZJ1wijpV4XrFLG3qHbiinQYXRMhATg6YGxH10l3cd9dGmsqBhYiFu1jtBARLmcQd4/s1600/Screenshot_2019-01-05-13-51-52-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="818" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCezY8Ti5Kq62UQ5jmnqdw61Ku9qQ-ujq-deHbzPssB5Rph-TFhrZFEXyS9Jb6elBF5BjBSrsbbfZJ1wijpV4XrFLG3qHbiinQYXRMhATg6YGxH10l3cd9dGmsqBhYiFu1jtBARLmcQd4/s640/Screenshot_2019-01-05-13-51-52-1.png" width="422" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjye4D9LJf8fqPj1BPOQ0mF0OeQzYq8ZejamiHJxnnfV6m7SE5o2kE4CnIGvbqOj0j785L5CLL8W0k-MmI6giFdj-BfYtTgS99nM94GGUx3XpJByVHXKOI0xE5KbuvdnQ-RddZT1ItGF7U/s1600/Screenshot_2019-01-05-13-51-59-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="392" data-original-width="540" height="290" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjye4D9LJf8fqPj1BPOQ0mF0OeQzYq8ZejamiHJxnnfV6m7SE5o2kE4CnIGvbqOj0j785L5CLL8W0k-MmI6giFdj-BfYtTgS99nM94GGUx3XpJByVHXKOI0xE5KbuvdnQ-RddZT1ItGF7U/s400/Screenshot_2019-01-05-13-51-59-1.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-26346764420213174292019-01-03T12:38:00.000+05:302019-02-04T16:57:29.599+05:302019<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஜனவரி - சங்கு இதழில் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH8jkTXG7Xu0aiHe_Uxj6gL_86Q5m8WAj3amV-TrJhEz-Iv29NBnyMxcTB5flWn1VXd39Stti6b2oamXlE_hbYdx7PSL7y8RGWNaH0uq-5iYl_CKJSg5AugX0bzgHk_TN1ahOTtwDkjRI/s1600/20190103_122528-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="965" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH8jkTXG7Xu0aiHe_Uxj6gL_86Q5m8WAj3amV-TrJhEz-Iv29NBnyMxcTB5flWn1VXd39Stti6b2oamXlE_hbYdx7PSL7y8RGWNaH0uq-5iYl_CKJSg5AugX0bzgHk_TN1ahOTtwDkjRI/s320/20190103_122528-1.jpg" width="192" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4Ju7sIJdD0MBzLNt8Icsvk3UNvpo1au1RwrySNMa6F2OFTob9RcVG2FCK4zJv7qEKACyf4REAEnFeshXfDme0n780CAh7-9mUdW6r3mnJEeqXbiEKEfFneL43UCRBuXD8dJeoZbYoa4E/s1600/20190103_183144.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4Ju7sIJdD0MBzLNt8Icsvk3UNvpo1au1RwrySNMa6F2OFTob9RcVG2FCK4zJv7qEKACyf4REAEnFeshXfDme0n780CAh7-9mUdW6r3mnJEeqXbiEKEfFneL43UCRBuXD8dJeoZbYoa4E/s320/20190103_183144.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUZ0u4ZO6BvcDCul1NyU2PHBQDu5zCpmHOSE6t-bgF0eQK5v6KmkmEloDofEp3Y5d3BLJaM7wkjPW1Kar9oJ0dR8s-0T-rnxbXe08qdrl5PeOcTy1bomzAWYtHBeFLWhBHZt3_PJvs1Ig/s1600/20190103_183113.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUZ0u4ZO6BvcDCul1NyU2PHBQDu5zCpmHOSE6t-bgF0eQK5v6KmkmEloDofEp3Y5d3BLJaM7wkjPW1Kar9oJ0dR8s-0T-rnxbXe08qdrl5PeOcTy1bomzAWYtHBeFLWhBHZt3_PJvs1Ig/s320/20190103_183113.jpg" width="180" /></a></div>
ஜனவரி - அமுதசுரபி இதழில்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYCr-jyhU3I0fX2evT-hN5Oo_7afSCyYk7ONXdZpRHhylKQul7gITbrmue-6R6t2AeJJ9eBGVLALEBoE4b3CV4YSjLlknbGNeUSdMgOGmRbTk8U9_RLwrS6hR38YoomGZ4GSSuw2vbFvw/s1600/15466085974401522234843.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYCr-jyhU3I0fX2evT-hN5Oo_7afSCyYk7ONXdZpRHhylKQul7gITbrmue-6R6t2AeJJ9eBGVLALEBoE4b3CV4YSjLlknbGNeUSdMgOGmRbTk8U9_RLwrS6hR38YoomGZ4GSSuw2vbFvw/s320/15466085974401522234843.jpg" width="180" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZv0Qy0U6ayQK3b-GIclgod2eFbp4qnys777Q2aVH6ZLh1t0Jn8ety4PoUs9PQmmuChkhR-XdT9zvDgD6Dq-9mt0HXJ7br-K95hFnntugZLT2S4l2agqIpjhw305c4m6NUKDwmgAwJDKo/s1600/1546608727305-1031617837.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZv0Qy0U6ayQK3b-GIclgod2eFbp4qnys777Q2aVH6ZLh1t0Jn8ety4PoUs9PQmmuChkhR-XdT9zvDgD6Dq-9mt0HXJ7br-K95hFnntugZLT2S4l2agqIpjhw305c4m6NUKDwmgAwJDKo/s640/1546608727305-1031617837.jpg" width="360" /></a></div>
<br />
பேசும் புதிய சக்தி இலக்கிய விழாவில் அழகிய பெரியவனின் ' அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார் ' நூலினை அறிமுஸகம் செய்து பேசிய போது...ஜனவரி இதழில்<br />
<br />
பிப்ரவரி -<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia3VleqwcgkuaUWGCdDGD1IJsVOBJfng0ijgSAmgGXdRlk4llYOg44YNZ3yUw4C6mdw-U-2Ru1UeO_2avzobk_U04QvGxbY1AFVbKAewn86Vx80HXLx4GReKEL-aseJsoLDrVnnw_Jtvk/s1600/Screenshot_2019-02-04-16-35-09.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia3VleqwcgkuaUWGCdDGD1IJsVOBJfng0ijgSAmgGXdRlk4llYOg44YNZ3yUw4C6mdw-U-2Ru1UeO_2avzobk_U04QvGxbY1AFVbKAewn86Vx80HXLx4GReKEL-aseJsoLDrVnnw_Jtvk/s640/Screenshot_2019-02-04-16-35-09.png" width="360" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7EDtdrZQTqZUakK5UcJcIIa9X1137bSoM5FPE05HFGkfpGsWPIl73fQ7-NFyjrp8aCXWXhTIyxWO3S5nf6WaKxn8_dtXFGa2RyzZvbbK_WTS0QEctiQ3RQ5lmMrIMjpKxCs1BV25oYYs/s1600/Screenshot_2019-02-04-16-43-59.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7EDtdrZQTqZUakK5UcJcIIa9X1137bSoM5FPE05HFGkfpGsWPIl73fQ7-NFyjrp8aCXWXhTIyxWO3S5nf6WaKxn8_dtXFGa2RyzZvbbK_WTS0QEctiQ3RQ5lmMrIMjpKxCs1BV25oYYs/s400/Screenshot_2019-02-04-16-43-59.png" width="225" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSklAAQ-M4zOnRuVbI7TN3HkNebUNk2YWkr-TDzoea35sb1DXHspVQQpxJzyfTHBOe6dnWc1ZFr5qpokeUWBNne5YY7BeVaFpiLNuHrfFHAv03kbMrB5Li4mBwx0VJQpQZ7ql9t0wgTRo/s1600/20190201_091339.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSklAAQ-M4zOnRuVbI7TN3HkNebUNk2YWkr-TDzoea35sb1DXHspVQQpxJzyfTHBOe6dnWc1ZFr5qpokeUWBNne5YY7BeVaFpiLNuHrfFHAv03kbMrB5Li4mBwx0VJQpQZ7ql9t0wgTRo/s400/20190201_091339.jpg" width="400" /></a></div>
<br />
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-11214206757807636852019-01-03T08:42:00.000+05:302019-01-03T08:42:20.850+05:30மூங்கில் வனம் - மூன்றடி கானம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோவையில் ஒரு நிகழ்வில் கவிதை நூல் குறித்து பேசிய கவிஞர் இராகவன் கவிதைகளான கவிதைகள் குறித்து பேசிய அவர் சில கவிதைகளை எடுத்தாண்டார். அதிலொரு கவிதை யானை குறித்த கவிதையாக இருந்தது. அவர் ஒப்பித்த வேகத்திற்கு என்னால் அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கவிதையின் ஒற்றைச் சொல் எனக்குள் தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன் முள்ளைப்போல வருடிக்கொண்டே இருந்தது. பழனி இலக்கிய சந்திப்பில் கிடைத்த புதிய நட்பான கூடல் தாரிக்கின் மூங்கில் வனம் தொகுப்பில் அக்கவிதை இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiVaMYmZ83KYUP9EzUjY5QKxPCqjfsBZEpA12YLpd90XxsnfG8lbMusF2wGgSvlE0wFOuiYfo1Gj4lJdxOvsT9QT4PbOtU8jN3_xvUWgcdN_PzsahTfmc53TanOQOGX1SKYyRaQKT8hWs/s1600/20190103_083730.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiVaMYmZ83KYUP9EzUjY5QKxPCqjfsBZEpA12YLpd90XxsnfG8lbMusF2wGgSvlE0wFOuiYfo1Gj4lJdxOvsT9QT4PbOtU8jN3_xvUWgcdN_PzsahTfmc53TanOQOGX1SKYyRaQKT8hWs/s320/20190103_083730.jpg" width="180" /></a></div>
<br />
<br />
வனத்தையும் வாழ்வையும்<br />
இழந்து<br />
சபிக்கப்பட்ட யானையைத்தான்<br />
ஆசிர்வதிக்க<br />
நிர்ப்பந்திக்கிறான் பாகன்<br />
<br />
இக்கவிதையில் யானையை வெறும் யானையாக மட்டும் நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை. வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் நாளுக்கு நாள் இழந்து தவிக்கும் நம் வாழ்க்கைதான் யானையின் வாழ்த்தலாக இருக்கிறது. <br />
<br />
கூடல் தாரிக்கின் மூன்றாவது தொகுப்பு இது. <br />
<br />
கஜல் வடிவத்தில் எழுதப்பட்ட மூன்றடி நான்கடி சொற்பின்னலே மொத்தக் கவிதையும். அழகை வர்ணிக்கும் வானவில் வரிகள்.<br />
<br />
மழையின் சாயலில்தான்<br />
இருக்கிறார்கள்<br />
கருணை கொண்ட <br />
மனிதர்கள் யாவரும்<br />
<br />
முதல் கவிதை மெல்லிய தூறலாய் மனதிற்குள் மாமழை பெய்கிறது. வாசிப்பவனை கருணையாளனாக கரைக்கிறது.<br />
<br />
வேழம் வளைத்த<br />
மூங்கிலென<br />
சட்டென நிமிர்கிறாள் தலைவி<br />
வனம் முழுவதும்<br />
பிளர்கிறது அன்பு <br />
<br />
கரைந்துண்ணும் அன்பை பிளிரச் செய்யுமிடத்தில் பேரருவமாகிறது அன்பு. இப்படியாக அடிமேல் அடி எடுத்துவைக்கும் அழகால் வாசிப்பின் தாகத்தை மேலும் தாகமூட்டும் தொகுப்பாக வந்திருக்கிறது மூங்கில் வனம். நல்ல தொகுப்பு. <br />
ஓவியா பதிப்பகம். ஆசிரியருக்கு எனது - ழ் -<br />
</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-68824573989604425472018-12-17T13:00:00.000+05:302019-01-03T12:47:07.418+05:30செய்திக்கோவை - 2019<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg16r1qzjbLwJ0eM7rHbtePpOaTZ5MCrG-3RluLKVzKWJFRtYX5RJ2hcAc3UrgYYSGdYcB4mI06eLzqM8gsjqfNJDqYa-awmob7DM_-gdgYQoOoTKXsIII3iax1z5N-wYYCCgVu_feaB9Y/s1600/IMG-20181217-WA0044.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="1051" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg16r1qzjbLwJ0eM7rHbtePpOaTZ5MCrG-3RluLKVzKWJFRtYX5RJ2hcAc3UrgYYSGdYcB4mI06eLzqM8gsjqfNJDqYa-awmob7DM_-gdgYQoOoTKXsIII3iax1z5N-wYYCCgVu_feaB9Y/s640/IMG-20181217-WA0044.jpg" width="524" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2y5YcRZSoQBF-ORGl6IXMOqTykY_kiyxGztEo0UDc9h_uE4iZtVc-7G03JLm3GkE5E8yfgDkRtb2EI7AZb_Dp-TYdZanSHiN06Wv7lKaSNP2sZo16cG3y-jCEHN24uwDDBSvBuSjxAFQ/s1600/Screenshot_2019-01-02-22-00-16.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2y5YcRZSoQBF-ORGl6IXMOqTykY_kiyxGztEo0UDc9h_uE4iZtVc-7G03JLm3GkE5E8yfgDkRtb2EI7AZb_Dp-TYdZanSHiN06Wv7lKaSNP2sZo16cG3y-jCEHN24uwDDBSvBuSjxAFQ/s640/Screenshot_2019-01-02-22-00-16.png" width="360" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLMjuTXN3Jdhyphenhyphena7ZpbzB211rw3Gw7iYYyVaCYC2aSw0tyhLXPFBKKjxjlHkb7H6LfCY257_SxIbRUj6Gh8WIbSkw8grY4xuGOy4LmyuEYLvHHBCj3CkoCh6oLpkyn2M8ZBzkmHfcoDt5Q/s1600/Screenshot_2019-01-02-21-58-28.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLMjuTXN3Jdhyphenhyphena7ZpbzB211rw3Gw7iYYyVaCYC2aSw0tyhLXPFBKKjxjlHkb7H6LfCY257_SxIbRUj6Gh8WIbSkw8grY4xuGOy4LmyuEYLvHHBCj3CkoCh6oLpkyn2M8ZBzkmHfcoDt5Q/s640/Screenshot_2019-01-02-21-58-28.png" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-79389887044816878822018-11-10T20:33:00.005+05:302019-01-03T12:41:00.279+05:30சதுரங்க ராணி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிறுகதை<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஏழாவது நகர்வில் சித்தி அவளது ராணியை இழந்துவிட்டிருந்தாள். இந்த நகர்விற்கு முந்தைய நகர்வில் என் கறுப்புக்குதிரை, கோட்டை, மந்திரி , சிப்பாய்கள் சித்தியின் வெள்ளை ராணியைச்சுற்றி வட்டம் கட்டியிருந்தும் சித்தி, அவளது வெள்ளை ராணியைக் கண்டுகொள்ளாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. இராணியைப் பறிக்கொடுக்க விளையாடிய விளையாட்டைப்போலதான் சித்தி அவளது காய்களை நகர்த்திக்கொண்டிருந்தாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தி அவளது இராணியைப் பறிக்கொடுத்தது என்னுடைய கறுப்பு சிப்பாயிடம். ஆட்டத்தில் தேர்ந்த சித்தி அதிக புள்ளிகள் கொண்ட இராணியை ஒரு சிப்பாயிடம் பறிக்கொடுத்ததை நினைத்து சித்தி கவலையோ, அவமானமோ அடையவில்லை. ஒரு சிப்பாயை வேண்டுமென்றே ஒரு கோட்டையிடம் பறிக்கொடுத்து அந்தக் கோட்டையை ஒரு சிப்பாய் கொண்டு பறிக்கும் சாதூரிய நகர்த்தலின் போது இருக்கும் ஒரு எதார்த்தமான மகிழ்ச்சியில்தான் சித்தி இருந்துகொண்டிருந்தாள். சித்தியின் நமட்டுச்சிரிப்பு எனக்கு வியப்பளித்தது. அவள் ஒடுங்கிய சம்மனத்துடன் முகவாய்க்கட்டைக்கு இடது கையைக் கொடுத்து நெற்றியைச் சுழித்தவாறு அவள் மொத்த சதுரங்க காய்களையும் பார்த்தவிதம் ‘ இப்ப பார்...உன் காய்களை நான் என்னச் செய்கிறேன் என்று....’ என மிரட்டுவதைப்போலிருந்தது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தி எத்தனையோ பேரிடம் சதுரங்கம் விளையாடியிருக்கிறாள். விலா மடிப்புத் தேர், ஆண்டர்சன் திறப்பு, ஓயாமல் முற்றுகை என்கிற சதுரங்கத்தின் அத்தனை உத்திகளும் அவளுக்கு அத்துபடி. ராஜாவை எட்டாவது வரிசை வரைக்கும் கொண்டுச் சென்று எதிராளிக்கு செக் வைக்குமளவிற்கு ஆட்ட நுணுக்கத்தை அவள் கற்றிருந்தாள். ஒரு கோட்டை, ஒரு ராணி அவளிடம் இருந்தால் போதும். எதிராளியின் மொத்த நகர்வுகளையும் அவளது நகர்விற்கும் கீழ் கொண்டுவந்துவிடுவாள். அத்தகைய சித்தி இராணியை ஆட்டத்தின் தொடக்கத்தில் பறிக்கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தி எப்பொழுதும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பதில்லை. அவள் யாரோ ஒருவரை இயக்க மட்டும் செய்வாள். இப்பொழுது அவளால் சதுரங்கம் விளையாடாமல் இருக்க முடிவதில்லை. யாரேனும் ஒருவரை அழைத்துவைத்துகொண்டு சதுரங்கம் விளையாடுவாள். யாரேனும் வரவில்லை என்றால் இருக்கிறதே இருக்கு மடிக்கணினி.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>கணினியுடன் விளையாடிய சித்தி இரண்டு முறை கணினியைத் தோற்கடித்திருக்கிறாள். அத்தகையவள் இராணியை ஒரு கறுப்பு சிப்பாயுடன் பறிக்கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது. நான் இராணிக்கு அருகாமையில் என் சிப்பாயை கொண்டுபோய் வைக்கையில் சித்தி என் சிப்பாயை வெட்டியிருக்க வேண்டும். அல்லது இராணியை எடுத்து இதற்கு முன் அது இருந்த இடத்தில் அதை வைத்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் சித்தி ‘தொலையட்டும் சனியன்...’, என வேண்டுமென்றே விட்டுவிடுவதைப்போலதான் இராணியை விட்டிருந்தாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் சித்தியிடம் கேட்டேன். ‘ சித்தி....உன் சிந்தனையெல்லாம் ஆட்டத்தில்தானே இருக்கிறது........?’<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>‘ ஆமாம்....’<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>‘ மிக முக்கியமான காய் ஒன்றே நீ இழக்கப்போகிறாய்....’ என்றேன். சித்தி என்னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ பார்க்கலாம்...’ என்றவாறு அவள் குதிரையை நகர்தினாள். குதிரை ‘ட’ வடிவில் முன்னோக்கி போகவேண்டியது. ஆனால் அது பின்னோக்கி சென்று கறுப்புக் கட்டத்திலிருந்து வெள்ளைக் கட்டத்திற்கு மாறியிருந்தது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தியின் ஆட்டம் வழக்கம் போலிருக்கவில்லை. அவளது ஆட்டத்தில் என்னவோ ஒரு சாணக்கியத் தனம் இருக்க வேண்டும் அல்லது விருப்பமில்லாமல் அவள் விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். மொத்த ஆட்டத்தையும் அவளது ஆளுமையின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் அவளை இயக்கிக்கொண்டிருந்தது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தி வெள்ளைக் காய்களை கேட்டு வாங்கி அடுக்கியிருந்தாள். எனக்கு கறுப்பு. முதல் நகர்வை அவள்தான் நகர்த்த வேண்டும் என்பதால் அவள் வெள்ளை காய்களை கேட்டு வாங்கியிருந்தாள். ஆனால் நான்காவது நகர்வில் ஒரு சிப்பாய் கொண்டு இன்னொரு சிப்பாயை வெட்டியிருந்தேன். நான் வெட்டிய அடுத்த நகர்வில் சித்தி என் அமைச்சரை வெட்டியிருந்தாள். அமைச்சரை வெட்டத் தெரிந்த அவளுக்கு இராணியைக் காத்துக்கொள்ளத் தெரியாதது எனக்கு விநோதமாகப் பட்டது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தி இராணியைப் பறிக்கக்கொடுத்ததை நினைக்கையில் எனக்கு இறுக்கமாகவே இருந்தது. ஆனால் சித்தி சிரித்த முகமாகவே இருந்தாள். இராணியை இழந்துவிட்ட துக்கம் அவளது முகத்தில் மருந்திற்கும் இல்லை. இராணியைப் பறிக்கொடுத்ததன் பிறகு சதுரங்கத்தில் வேகம் இருக்க முடியுமா என்ன...? ஆனாலும் உன்னை நான் எப்படி விழுத்துகிறேன் பார்...என்பதைப்போல அவள் இராஜாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் எப்பொழுது சதுரங்கம் விளையாடினாலும் ராஜா மீது கையை வைப்பதில்லை. இராஜாவை வலது அல்லது இடது பக்கம் நகர்த்தி கோட்டைக்கு இடையில் மறித்துக் கட்டவே செய்வேன். ஆனால் சித்தி ராஜாவை எந்தவொரு முன்னெச்சரிக்கையுமின்றி நகர்த்தினாள். அவள் நகர்த்த வேண்டியக் காய்கள் இன்னும் எத்தனையோ இருக்க அவர் ராஜாவை நகர்த்தியதை வைத்து என்னால் ஒன்று புரிந்துகொள்ள முடிந்தது. அது அவளிடமிருக்கும் ஒரு சிப்பாயை எட்டாவது கட்டத்திற்கு கொண்டுச்சென்று அச்சிப்பாயை இராணியாக்க வேண்டும் என்கிற வெறித்தனம் மட்டும் அவளிடமிருந்தது. இந்த ஒன்றிற்காக அவள் மற்ற அத்தனைக் காய்களையும் இழக்கவும் தயாராக இருந்தாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>என்னைத் தவிர குடும்பத்தில் அத்தனைப்பேருக்கும் சதுரங்கம் சொல்லிக்கொடுத்தது சித்திதான். சித்தி சித்தப்பாவிற்கு மனைவியாக திருமணம் முடித்துகொண்டு வருவதற்க முன்பாகவே நான் சதுரங்கம் விளையாடுபவனாக இருந்தேன். ராஜாவை கோட்டைக்குள் மறித்துகட்டுதல், ஓபன் டெக்லர், பேட் டச், தேர் நடை, முதல் நகர்வில் ஒவ்வொரு சிப்பாயையும் இரண்டு கட்டங்கள் நகர்த்தலாம், ராஜாவை தொட்டு ஆடும் அதே விரல்களில்தான் கோட்டையை நகர்த்த வேண்டும்....இது போன்ற நுணுக்கங்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தது சித்திதான்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>எங்கள் குடும்பத்திற்கு சித்தி மறுமகளாக, சித்தியாக, சித்தப்பாவிற்கு மனைவியாக வந்ததன் பிறகு நான் யாருடன் விளையாடினாலும் சித்தி எனக்கு எதிராக நின்று எதிராளிக்கு சொல்லிக்கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள். எதையும் சத்தமாகச் சொல்லிக்கொடுக்க மாட்டாள். எதிராளியின் காதிற்குள் கிசு, கிசுப்பாள். அவளது கைக்காட்டலில் நகரும் காய்கள் எனக்கு பல நேரங்களில் சவால்களாக இருந்திருக்கின்றன. பல நேரங்களில் என்னை தோற்கடித்திருக்கின்றன.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஒரு முறை நானும் சித்தப்பாவும் விளையாடுகையில் சித்தப்பாவின் ராஜா, இரண்டு சிப்பாய்களைத் தவிர மற்ற அனைத்து காய்களையும் நான் வெட்டியிருந்தேன். அதற்குப்பிறகு சித்தப்பாவுடன் கலந்துகொண்ட சித்தி என்னிடமிருந்த இரண்டு மந்திரிகள், ஒரு குதிரை உட்பட நான்கு சிப்பாய்களையும் வெட்டி என் ராஜாவிற்கு ‘ செக்’ வைத்தது அதுநாள் வரைக்கும் நான் விளையாடிய விளையாட்டில் மிக மோசமான விளையாட்டிற்கு அது வழி வகுத்தது. சதுரங்க விளையாடுபவர்கள் மத்தியில் அவள் சின்னராணியாகிப்போனாள். சின்ன ராணி என்று அவளை என் குடும்பத்தார்கள் அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்படி அழைக்காதவர்களின் மீது அவள் தன் வன்மத்தைக் காட்டினாள். எனக்கு அவள் எப்பொழுதும் நகர்வுகள் பற்றிச் சொல்லிக்கொடுத்ததில்லை. அவளுக்கு போட்டியாகத் தெரியும் யாருக்கும் அவள் ஆட்டத்தின் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்ததில்லை.<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இன்றைய ஆட்டத்தில் அவளது முதல் காய் நகர்த்தல் சிப்பாயாக இல்லாமல் குதிரையை மூன்று கட்டங்கள் தாண்டி ஒரு சிப்பாய்க்கு முன் வைப்பதாக இருந்தது. இத்தொடக்கம் அவசரக்கால ஆட்டத்திற்கு வழி வகுக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஆட்டம் ஆடி முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நகர்த்தும் ஆட்ட உத்தி இது. இந்த நகர்த்தலுக்கு பிரகடனம் என்று பெயர். ‘முடிந்தால் என்னை வீழ்த்திப்பார்’ என சொல்லாமல் சொல்லும் சவாலான நகர்த்தல் அது. எதிராளியை படு உஷார் படுத்தவோ அல்லது மிரட்டும் படியான காய் நகர்த்தல் அது. சித்தியின் இந்நகர்த்தல் எனக்கு வியப்பு அளித்தது. விஸ்வநாதன் ஆனந்த் கடைசியாக உலக சதுரங்கப்போட்டியில் இப்படித்தான் அவரது ஆட்டத்தைத் தொடங்கியிருந்தார். போட்டியின் முடிவில் அவர் சாம்பியன் பட்டத்தை இழந்த போது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இப்படியொரு ஆட்டத்தை தொடங்குவதைப் பற்றியதாகவே இருந்தது. அவர் தோற்ற ஆட்டத்தையே சித்தியும் தொடங்கியிருந்தாள். அவர் ஆடத் தொடங்கிய ஏழாவது நகர்வில் நான் நினைத்தபடியே அவளது இராணியை என்னிடம் பறிக்கொடுத்திருந்தாள்<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>‘ ஏன் வெட்டினாய், எப்படி வெட்டினாய்..., அடடா கவனிக்காமல் விட்டுவிட்டேனே...இல்லை இல்லை....முந்தைய ஆட்டத்தை நான் திரும்பப்பெறுகிறேன்...’ இதுபோன்ற எந்தவொரு எதிர்வினையும் அவளிடமிருந்து வந்திருக்கவில்லை. ஒரே ஒரு அசட்டு சிரிப்புதான். ‘தொலையட்டும்...இந்த இராணி....’ என்கிற மாதிரியான முகவெட்டு அவளிடமிருந்தது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அவளது ஒரு ராணியுடன் ஒரு குதிரையும் ஒரு மந்திரியும் என் வசம் வந்தி்ருந்தன. சித்தி அடுத்து எதை நகர்த்தப்போகிறார் எனக் கூர்ந்து கவனித்தேன். அவளுடைய ஒரு கோட்டைக்கு நேராக என்னுடைய ஒரு கோட்டை இருந்தது. அதை அவள் வெட்டியிருக்க வேண்டும். ஆனால் அவள் ஒரு சிப்பாயை எடுத்து ஒரு கட்டம் முன் நகர்த்தினாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் என் மந்திரியை குறுக்குவாக்கில் நகர்த்தினேன். அவள் இராணியாக்க நினைக்கும் சிப்பாய் காய் என் மந்திரியால் வெட்டப்படாமல் இருக்க குதிரையை மூன்று கட்டங்கள் தள்ளி நகர்த்தினாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சதுரங்கள் விளையாடுகையில் ஒன்றை மனதில் நிறுத்திக்கொண்டு காய்களை நகர்த்தவேண்டும். எதிரணியின் காய்களை வெட்டுவதை விடவும் தன் காய்களை எதிராளியால் வெட்டப்படாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. அதுவே சதுரங்க ஆட்டத்தின் மிக முக்கியமான கருத்தில் கொள்ள வேண்டிய விதி. இது எனக்கு யாரோ சொன்னதல்ல. சித்தி சொன்னதுதான்! ஆனால் அன்றைய தினம் ஆட்டத்தில் சித்தி அப்படியாகத்தான் விளையாடினால் என்றாலும் அவளது மொத்தப்பார்வையும் அந்த ஒரு சிப்பாய் மீதே இருந்தது.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் அந்தவொரு சிப்பாயை எப்படியேனும் வெட்டிவிட வேண்டும் என்கிற கோணத்தில் யோசித்தேன். சித்தியின் ஆட்டம் மிக நேர்த்தியாக இருந்தது. அந்த ஒரு சிப்பாயைச்சுற்றி நான் நிறையக் காய்களை வைத்திருந்தேன். அத்தனைக் காய்களையும் வெட்டிக்கொண்டு ஆறாவது கட்டத்தை நோக்கி சிப்பாயைக் கொண்டு வந்திருந்தாள். இன்னும் இரண்டு நகர்வு நகர்த்தினால் போதும். ஒரு சிப்பாய் இராணியாகி விடும். அவளது இரண்டு கண் பார்வையும் அந்த ஒற்றை சிப்பாய் மீதே இருந்தது. அச்சிப்பாய்க்கு காவலாக ராஜாவையும், ஒரு கோட்டையையும் நிறுத்தியிருந்தார். முன்னும் பின்னும் இரண்டு சிப்பாய்கள் இருந்தன. இது தவிர ஒரு மந்திரி, ஒரு குதிரை இருந்தன.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இந்த இடத்தில் என் ராஜாவிற்கு செக் வைக்கும்படியான ஒரு வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. ஆனால் சித்தி அதைக் கவனிக்கவில்லை. அவள், அவளுடைய கோட்டையை எடுத்து இரண்டொரு கட்டங்கள் கிடைமட்டமாக நகர்த்தி பின் படுக்கைவாக்கில் அந்தவொரு சிப்பாய்க்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தினார்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அவளது குதிரையை மூன்று கட்டங்கள் நகர்த்தி அல்லது மந்திரியை குறுக்கு வாக்கில் கொண்டு வந்து இரண்டு கட்டங்கள் தள்ளி நிறுத்தினால் போதும். எனக்கு ‘செக்’. அதற்கு பிறகு எனக்கு ஆட்டமில்லை. ஆனால் சித்தி அப்படியொரு ஆட்டத்தை ஆடவில்லை. அவளது ஆட்டம் வேறொரு வகையினதாக இருந்தது. அவருடைய முகம் கடுகடுவென இருந்தது. எப்படியேனும் இந்த சிப்பாயை ராணியாக்கிவிட வேண்டும் என்கிற வேக வெட்டு மட்டும் அவளுடைய முகத்தில் இருந்தது. தரையை இரண்டொரு முறை அடித்து ‘ நான் வெல்வேன்...எனக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சியை வீழ்த்துவேன்....’ என சபதம் எடுத்துகொண்டாள். அப்பொழுது அவளுடைய முகத்தை பார்த்தி்ருக்க வேண்டுமே...அப்பப்பா...! இதுநாள் வரைக்குமில்லாத உக்கிர முகம் அது.<br />
<br />
தன் வாழ்நாளில் இப்படியான உக்கிரமம் ஒருவருக்கு ஒரு முறைதான் வரும். அன்றைய தினம் சித்திக்கு வந்திருந்தது. அந்த ஒரு சிப்பாய்க்காக மற்ற காய்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டு வந்தாள். அவரிடம் மிச்சமிருந்தது ஒரு சிப்பாய், ஒரு மந்திரி, ஒரு ராஜா அவ்வளவேதான்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் என்னுடைய ஒரு மந்திரியை எடுத்து அந்த ஒரு சிப்பாயை வெட்டிவிட வேண்டும் என்கிற நோக்கில் வைத்தேன். நான் நகர்த்தியது மந்திரி. இந்த நகர்வு அவருக்கு கோபத்தை மூட்டியிருக்க வேண்டும். அவளுடைய மந்திரியைக் கொண்டு என் மந்திரியை வெட்டியிருந்தாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் அடுத்த நகர்வில் கோட்டையை நகர்த்தியிருந்தேன். அடுத்த நகர்வில் அது அந்த ஒரு சிப்பாயை வெட்டும் படியாக அமையும் என்பதால் அவரது ராஜாவைக் கொண்டு என் குதிரையை வெட்டியிருந்தாள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>ஆட்டத்தின் வேகம் சூடு பிடித்தது. சித்தப்பா, அண்ணன், அக்காள், என் அம்மா, அப்பா உட்பட பலரும் சித்தி பக்கம் உட்கார்ந்திருந்தார்கள். என்னை எப்படியேனும் தோற்கடித்திட வேண்டும் என்கிற வெறித்தனம் அவளைச் சுற்றியிருந்த அத்தனைப் பேர்களிடமும் இருந்தது. என்னைப் பெற்ற அம்மாவிற்கு கூட அத்தகைய வெறி இருந்தது. இக்குடும்பம் ஒரு சிலனமுமில்லாமல் நகர சித்தி வெற்றிப்பெற்றாக வேண்டும். இல்லையேல் அத்தனைப் பேரிடமும் அவளுடைய அகோர முகத்தைக் காட்டவே செய்வாள். அவளது இத்தகைய முகம் அடுத்த ஆட்டத்தில் அவள் வெற்றிப்பெறும் வரைக்கும் நீளும்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>நான் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்கு பின்னால் யாரும் நின்றிருக்க வில்லை. அத்தனைப்பேரும் சித்தியைச் சுற்றியே நின்று கொண்டிருந்தார்கள். இரு கண்களால் அறுபத்து நான்கு கட்டங்களையும் பார்த்துகொண்டிருந்தேன். நான் வெற்றிப்பெற பல வழிகள் இருந்தன. ஆனால் அதற்கு முன்னால் சித்தியின் அந்த ஒற்றை சிப்பாயை வெட்டிவிட வேண்டும் என்கிற உத்வேகம் மட்டும் எனக்கு இருந்தது. <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தி, அந்த ஒற்றை சிப்பாயை மேலும் ஒரு கட்டம் முன்னோக்கி நகர்ந்தியிருந்தாள். இன்னும் ஒரே ஒரு கட்டம்தான். எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று என்னிடமிருக்கிற கோட்டையை வைத்து அந்த ஒற்றை சிப்பாயை வெட்டிவிட வேண்டும். மற்றொன்று என் சிப்பாயை மேலும் ஒரு கட்டம் முன் நகர்த்தி ‘ராஜாவிற்கு செக் வைக்க வேண்டும். இவ்விரண்டில் எதை செய்யலாம் என நீண்ட நேரம் யோசித்தவன் இரண்டில் எதை செய்யலாமென சித்தியின் முகத்தைப் பார்த்தேன். சித்தியின் மொத்தப் பார்வையும் அந்த ஒரு சிப்பாயை மட்டும் பார்த்தபடி இருந்தது. அவளுடைய முகம் பார்க்க முன்னே விடவும் விகாரமாக இருந்தது. அந்த ஒரு சிப்பாய்க்காக நான் எதையும் செய்வேன். என்ன விலைக்கொடுத்தேனும் இந்த சிப்பாயை நான் இராணியாக்கவே செய்வேன் என்கிற சவால் முகத்தால் முகத்து தசைகள் துடித்தன.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>அவளது அந்த ஒற்றைச்சிப்பாய் ஒரு கட்டம் முன் நகர்ந்தால் போதும் ஒரு சிப்பாய் இராணியாகிவிடும். இப்பவே அவளுடைய ஆட்டம் நடுங்கச் செய்யும் படியாக இருக்கிறது. அதில் சிப்பாய் இராணியாகிவிட்டால் அவ்வளவே தான்! இராணி எத்தனை கட்டம் வேண்டுமானாலும் பாயும். தாவும் , குதிக்கும். அவளது தேவையான அத்தனையையும் வளைக்கும். பதுக்கும். அவளது சிப்பாய் சிப்பாயாக இருக்கும் வரைக்கும்தான் எனக்கு வெற்றி. ஒருவேளை சிப்பாய் இராணியாக மாறிவிட்டால் எனக்காக வெற்றி வாய்ப்பு அஸ்தமனம்தான். நான் என் வெற்றி வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. நான் இரண்டில் ஒரு முடிவு எடுத்தேன். நான் ராணியாகப்போகும் அந்த ஒற்றை சிப்பாய் பற்றி கவலைப்படவில்லை. ஆட்டம் நீடித்தால் தானே சிப்பாய் இராணியாகும். பிறகு அது அதன் ஆட்டத்தைக் காட்டும். அதற்கு ஏன் இடம் கொடுப்பானேன். நான் என் சிப்பாயைக் கொண்டு வெள்ளை ராஜாவிற்கு ‘செக்’ வைத்தேன்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்திக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த அத்தனைப் பேரும் நெற்றியைச் சுழித்தார்கள். சித்தியின் தோளினைப்பற்றி குலுக்கினார்கள். சித்தி ராஜாவை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு ராஜாவை முன் பின் நகர்த்த வேண்டும். அப்படி நகர்த்தினால் மட்டுமே சதுரங்க சாம்ராஜ்ஜியத்தை தன் வசம் வைத்துகொள்ள முடியும். அப்படி நகர்த்துவதற்கான காலிக்கட்டங்கள் அறவே இல்லாமல் இருந்தன. வலது பக்கமாக ஒரு கட்டம் நகர்த்தலாம். ஆனால் அதற்கு நேராக கோட்டை இருந்து. முன் பின் நகர்த்த வாய்ப்பில்லை. ஆட்டம் இத்துடன் முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் சித்தி ராஜாவைப்பற்றி சற்றும் கவலைப்படவில்லை. அவள் இராஜாவின் மீது சற்றும் அக்கறை இல்லாதவளாய் அந்த ஒற்றை சிப்பாயை மேலும் ஒரு கட்டம் நகர்த்தி நான் வெட்டி வைத்திருந்த வெள்ளை ராணியை எடுத்து எட்டாவது கட்டத்தில் வைத்து பெரிய அளவில் சிரித்தாள். <br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>சித்தியின் ஆட்டம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. இராஜாவிற்கு செக் வைத்ததன் பிறகு நீளும் ஆட்டத்தைப் பார்த்து என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. இறந்து போன இராஜாவை உயிர் இருப்பதாகச் சொல்லி அரியணையில் உட்கார வைத்து தன் சாம்ராஜ்ஜியத்தை நீடித்த ரோம் மகாராணி என் நினைவிற்கு வந்து போனாள். சித்தியைச் சுற்றி நின்ற பலரும் சித்தியைத் தூக்கி வைத்துகொண்டு ஆடினார்கள். அவளைக் கொண்டாடினார்கள். அவளது ஆட்டத்திறமையைப் பாராட்டி சின்னராணி எனப் பட்டம் சூட்டினார்கள்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்....? சித்தியால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது...? அப்படியே கிடைத்தாலும் எத்தனைக் காலத்திற்கு கிடைக்கும்....? சித்தியின் தவறான ஆட்டத்தை ஏன் அவர்களால் சுட்டிக்காட்ட முடியவில்லை....? அவர்களின் மீது எனக்கு கோபம் வரவே செய்தது. சதுரங்கப் பலகையை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.<br />
<br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>காலக்கழிவில் ஒன்று நடந்தேறியது. நான் கறுப்பு, வெள்ளை கட்டங்கள் கொண்ட சதுரங்க பலகையாகிவிட்டிருந்தேன். சித்தியும் அவளைச் சூழ்ந்தவர்களும் சதுரங்க காய்களாகியிருந்தார்கள்.<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> - சங்கு 167 , அக்டோ 2018 - டிசம் 2018 இதழில் பிரசுரமானது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDlij2x_wr8AboAIw_djqqioUF2CsAPVJsBksRLf61JEPPXgsUN9___rjdW-T1aZLZZxAaGw5Xfp7IftwqtH9Glohj-hsITw-PyQWsR_Ln9HYLkidLV-gHX-zuQtY0yu5GNcuZ70nbxE8/s1600/1541861614093-2004138449.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDlij2x_wr8AboAIw_djqqioUF2CsAPVJsBksRLf61JEPPXgsUN9___rjdW-T1aZLZZxAaGw5Xfp7IftwqtH9Glohj-hsITw-PyQWsR_Ln9HYLkidLV-gHX-zuQtY0yu5GNcuZ70nbxE8/s640/1541861614093-2004138449.jpg" width="360" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNWiwhX-uaVE0BE9xR8E-0ggtBLiHXlbqrRtMpbPEeOE3ZEwxOTinr5U8DeDpIM6PtvKkVPKAXuShBOT9TKncAMbbtxkfgcNtK2_gPRpSI6b_Fqa0bSoz3BTgkZdP4-4asV2048ev2QFA/s1600/20190103_122528-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="965" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNWiwhX-uaVE0BE9xR8E-0ggtBLiHXlbqrRtMpbPEeOE3ZEwxOTinr5U8DeDpIM6PtvKkVPKAXuShBOT9TKncAMbbtxkfgcNtK2_gPRpSI6b_Fqa0bSoz3BTgkZdP4-4asV2048ev2QFA/s320/20190103_122528-1.jpg" width="192" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-33302033246325767752018-11-10T20:09:00.000+05:302018-11-10T20:09:09.121+05:30இன்னும் பொறுக்குவேன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாழ்த்துகள் <br />
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTFD8G-JEDn2mNK5dnX6wKp35PdrEetRjLzgs5uQycbwQdaiJSpO_8lnFHLHwDZFghslUcFeLUh4yGnaPgEJiBC1vtVJ4eT7ZyhAuNx2RZwdCqvLw3dDUA7mz1C00KWT72kLjBT3M4QdM/s1600/1541860627101-2083150725.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTFD8G-JEDn2mNK5dnX6wKp35PdrEetRjLzgs5uQycbwQdaiJSpO_8lnFHLHwDZFghslUcFeLUh4yGnaPgEJiBC1vtVJ4eT7ZyhAuNx2RZwdCqvLw3dDUA7mz1C00KWT72kLjBT3M4QdM/s640/1541860627101-2083150725.jpg" width="360" /></a></div>
<br />
<br />
சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன். இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. <br />
<br />
ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. <br />
<br />
இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன்.<br />
<br />
ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி,<br />
<br />
இன்னும் பொறுக்குவேன்...</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-36038729897834528952018-11-07T12:35:00.001+05:302018-11-08T22:05:47.542+05:30அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிறுகதை<br />
அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.<br />
***************<br />
<br />
‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.<br />
‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’<br />
நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின.<br />
கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீதிபதி கேட்டிருந்தக் கேள்விகளில் இக்கேள்வி தடிமனுக்கு மாறாக கனமானதாக இருந்தது. கலெக்டரின் கண்கள் உருண்டன. வெண்விழிகள் துடித்தன. யாரைச் சொல்லலாமென மண்டைக்குள் தேடினார்.<br />
‘ கலெக்டர் சார், உங்களைத்தான் கேட்கிறேன், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து உங்களுக்கு தகவல் தெரிவித்தது யார்...?’<br />
கலெக்டருக்கு அந்நேரத்தில் நினைவிற்கு வந்தவரை பதிலாகச் சொன்னார். ‘ தாசில்தாரர் தெரிவித்தார்...’<br />
நீதியரசரின் முகம் சிவந்து கண்கள் சிவந்தன. ‘ துப்பாக்கி சூடு நடத்தியவரே தகவல் தெரிவிக்கவும் செய்தார். அப்படித்தானே...?’<br />
‘ அப்படியன்று, துப்பாக்கி சூடு நடத்தியவர் தாசில்தாரர் அல்ல...’<br />
‘ பிறகு..?’<br />
‘ காவல் துறையினர்’<br />
நீதியரசர் சிரித்தார். சிரித்து ஆற்றிக்கொள்ளும் பதிலாகவே கலெக்டரின் பதிலிருந்தது. அவர் சிரித்ததும் மாமன்றம் சிரித்தது. அவர்கள் சிரித்த சிரிப்பில் அவரவர் உட்கார்ந்த நாற்காலிகள் குலுங்கிச் சிரித்தது.<br />
‘ அமைதி, அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது ‘ நீதிபதி மேசையைத் தட்டி நீதிமன்றத்தை அமைதிப்படுத்தினார். அதையும் மீறி சிரிப்பின் மிடறல்கள் தெறிக்கவே செய்தன. நீதியரசர் கோபத்துடன் கேட்டார். ‘ அப்படியென்றால் துப்பாக்கி சூடு நடத்திய காவலர் அல்லவா தகவல் தெரிவித்திருக்க வேண்டும். தாசில்தாரர் தெரிவிக்கக் காரணம்...?’<br />
‘ துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர் அவர்தான்...’<br />
‘ எவர்தான்...?’<br />
‘ தாசில்தாரர்..’<br />
நீதியரசர் தலையை ஆட்டிக்கொண்டார். சற்று நேரம் கண்களை மூடி பதிலை உள்வாங்கினார். பிறகு குறிப்பெடுப்பதற்கு உகந்ததாக குனிந்தார். அவர் எடுக்க வேண்டிய குறிப்பு முன்பே குறிக்கப்பட்டு கட்டம் கட்டப்பட்டிருந்ததால் அதன் மீது மேலும் ஒரு கட்டம் கட்டி நிமிர்ந்தார். ‘ தகவலை அவர் எப்படி தெரிவித்தார்...?’<br />
‘ உண்ணா போராட்டம் கலவரமாகிவிட்டதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்றார் ’<br />
‘ தகவல் மட்டும் தெரிவித்தாரா, இல்லை அதற்காக வருத்தமும் தெரிவித்தாரா..?’<br />
‘ வருத்தமும் தெரிவித்தார்...’<br />
‘ வருத்தமென்றால் எப்படி..?’<br />
கலெக்டருக்கு கேள்வி புரிந்தது. ஆனால் புரியாததைப் போல பற்களால் உதடுகளை வருடினார். அப்படியாக நடிப்பதும், நேரம் கடத்துவதும் அவர் வகிக்கின்ற பதவிக்கும், அவர் மேல் விழுந்திருக்கும் கறையைப் போக்கிக்கொள்ளவும் தேவையென இருந்தது. ‘கனம் நீதியரசர் அவர்களே, உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை’<br />
கலெக்டரின் எதிர்வினை இரு தரப்பிலும் நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர்களின் நெற்றியைச் சுழிக்க வைத்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் சொல்லி வைத்தார் போல இருக்கையிலிருந்து எழுந்தார்கள். கறுப்பு அங்கியை ஒரு கையால் எடுத்துவிட்டுக்கொண்டு முன் வந்தார்கள். நீதியரசர் அவர்களைப் பார்த்து தன் கையால் அவர்களின் நுழைவைத் தடுத்தார். உங்களின் வாதம் பிரதிவாதங்கள் முடிந்துவிட்டது. நீங்கள் கேட்காமல் விட்டக் கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றவாறு வழக்கறிஞர்களைப் பார்த்தார். அவரது பார்வைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.<br />
‘ பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்குமளவிற்கு தாசில்தாரருக்கு அதிகாரமிருக்கிறதா...?’ வார்த்தைகள் பிசிறாமல், தடித்தக் குரலில் விரலை நீட்டிக் கேட்டது நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த பலரையும் எச்சரிக்கை செய்வதைப்போலவே இருந்தது. இப்படியொரு கேள்வியை கலெக்டர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரையும் அறியாமல் தலை சுண்டியது. ‘ இ..ல்..லை...’<br />
‘ என்ன இல்லை...?’<br />
‘ துப்பாக்கிச் சூடு பிறப்பிக்கும் அதிகாரம் தாசில்தாரருக்கு இல்லை’<br />
‘ பிறகு எப்படியாம் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார்..? ’<br />
கலெக்டர், தலைக்குள் பொங்கினார். அதே நேரம் நீதியரசர் முன் பணிந்து படிந்து நின்றார். அவருக்கு அவசர யோசனை தேவைப்பட்டது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு கால அவகாசம் கேட்கலாமா, என்று நினைத்தார். வாதம் , பிரதி வாதங்களுக்கு காலம் அவகாசம் வழக்கறிஞர் கேட்கலாம், சாட்சியம் கேட்கலாம், குற்றம் சுமத்தப்பட்டவர் கால அவகாசம் கேட்பது, குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதான குற்றத்தை, உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடும்... விரல்களைப் பிசைந்தபடி நின்றார்.<br />
‘ கேள்வியை நான் திரும்பவும் கேட்கத்தான் வேண்டுமா...?’ நீதியரசர் ஆடாமல், அசையாமல் அதே நேரம் கலெக்டரின் கண்களைப் பார்த்துக் கேட்டார். கலெக்டரின் நா வரைக்கும் வந்திருந்த சொற்கள் அடி நாவிற்குள் உருண்டன. ‘ உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது’<br />
‘ சொல்லுங்கள், அந்த அதிகாரத்தை தாசில்தாரருக்கு கொடுத்தவர் யார்...?’<br />
இக்கேள்விக்கான பதில் இதயத்திலிருந்து வந்தது. அப்பதிலை முறித்து, மனதிற்குள் எரித்து, மூளையிலிருந்து ஒரு பதிலை உருவி நீதிபதியின் முன் வைத்தார். ‘போராட்ட மக்களின் நடவடிக்கையைக் கண்காணித்து வந்தவர் அவர்தான், அதுமட்டுமன்று அறவழிப்போராட்டம் கலவரமாக மாறுகையில் அவ்விடத்தில் நின்ற ஒரே உயர் அதிகாரி அவர்தான்...’<br />
‘ அவர்தான் என்றால் தாசில்தாரரைச் சொல்கிறீர்கள்...’<br />
‘ ஆமாம், தாசில்தாரரைச் சொல்கிறேன்...’<br />
நீதியரசருக்கு குறிப்பு தேவைப்பட்டது. ஒரு பக்கம் முழுவதும் எழுதி மறுபக்கமும் எழுதினார். அவரது பேனா குறிப்பேட்டில் ஊர்ந்துகொண்டிருக்க, தலையை ஒரு கணம் நிமிர்த்தி குறிப்பெடுத்தலை ஒரு புள்ளியில் நிறுத்திக் கேட்டார் ‘ டெபுடி கலெக்டர் அவ்விடத்தில் நின்றிருக்க வேண்டுமே..?’<br />
‘ அவர் வேறொரு அலுவலில் இருந்தார்...’<br />
அவர் பேனாவை குறிப்பேட்டிற்குள் வைத்து மூடிவிட்டு விரல்களை விரல்களுக்குள் கோர்த்து நெட்டி பறித்தவாறு கேட்டார். ‘ அவரது அலுவலை இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது...’<br />
கலெக்டருக்கு இக்கேள்வி பிடித்திருந்தது. மெல்லப் பதுங்கி அதே நேரம் நீதியரசரின் முன் முகத்தை நீட்டி சொன்னார் ‘ அவரது அலுவல் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் நீதியரசரே..’<br />
நீதிபதியின் முதுகு குன்றியது. குன்றிய வேகத்தில் நிமிரவும் செய்தது. அவரது கேள்விகள் சக்கரம் போலச் சுற்றி அவர் எதிர்ப்பார்த்த விடை கிடைக்காத, அதேநேரம் மிக முக்கிய கேள்வியாகத் தெரிந்த ஒரு கேள்வியை எடுத்து தீட்டி கலெக்டர் முன் நீட்டினார். ‘தாசில்தாரருக்கு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்குளவிற்கு அதிகாரம் இருக்கிறதா...?’<br />
‘ அதிகாரம் இல்லை...’<br />
‘ பிறகு எப்படி உத்தரவு பிறப்பித்தார்...?’<br />
‘ அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள், காவல் துறையினர் மீதும், அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தத் துவங்கினார்கள். காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கவும், தீ வைக்கவும் செய்தார்கள்....’<br />
‘ ஆகையினால்...’<br />
‘ஆமாம் நீதியரசர் அவர்களே, அரசு கோப்புகளைக் காக்கவும், போராட்டக்காரர்களின் தாக்குதலிலிருந்து மக்களை மீட்கவும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது...’<br />
நீதியரசரின் ஒரு விரல் குறிப்பேட்டைத் திறந்தது. அவரது பேனா குறிப்பேட்டில் கோலமிட்டது. பிறகு அவருக்குப் புரியும் படியாக இரண்டு மனித உருவங்களை வரைந்து அதில் ஒன்றை அடித்து விட்டு ஒரு உருவத்தை வட்டம் கட்டியது. அக்குறிப்பு விசாரணையின் மைய நரம்பை பிடித்துவிட்ட களிப்பை நீதிபதிக்குக் கொடுத்திருந்தது.<br />
‘ ஒரு சிறுவன் துப்பாக்கி சூட்டில் இறந்திருக்கிறான். ஒரு சிறுவனால் கூட காவல் துறையினர் மீதும், அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்த முடியுமா..?’<br />
கலெக்டர் சற்றும் யோசிக்கவில்லை. அவர் எதிர்ப்பார்த்திருந்த கேள்வியைக் கேட்டுவிட்டதைப்போல பதிலளித்தார் ‘ அவன் கீழே குனிந்து காவல் துறையினரைத் தாக்க கற்களை எடுத்திருக்கிறான்...’<br />
இக்கணம் அவர் எழுந்திருக்க வேண்டியிருந்தது. அவர் எழுந்ததும் அவரது உதவியாளர் ஓடி வந்தார். அவரை நோக்கி நீதியரசர் விரலைக் காட்டி அவருக்குத் தேவையான கோப்பை எடுக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தார். உதவியாளர் அவர் கேட்டக் கோப்புகளை எடுத்து பணிந்து குனிந்து நீதிபதியிடம் நீட்டினார். நீதிபதி கோப்பின் நாடாவை அவிழ்த்தார். அதிலிருந்த ஒரு புகார் மனுவை எடுத்து மனதிற்குள் வாசித்தார். பிறகு அதிலிருந்து ஒரு சாராம்சத்தை தன் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு கலெக்டரை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் ‘ துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான என் மகன் என்னுடன் கடைத்தெருவிற்கு வந்தவன். காய்கறி வாங்கி திரும்பி வருகையில் கூடையின் மேலிருந்த ஒரு தேங்காய் தவறி கீழே விழுந்து விட்டது. அதை அவன் குனிந்து எடுக்கையில் என் கண் முன்னே என் மகனைச் சுட்டு படுகொலை செய்துவிட்டார்கள்.. என்றல்லவா அத்தாய் புகார் கொடுத்திருக்கிறார்...?’<br />
கலெக்டர் இரு புறமும் திரும்பிப் பார்த்தார். அவருக்கு படபடப்பு வந்திருந்தது. அவரையும் மீறி அதற்கானப் பதில் நழுவி விழுந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, இது ஆதாரமற்றது...’<br />
‘ அவனது தாயார் கொடுத்த புகார் மீதான முதல் தகவல் அறிக்கை அப்படியாகத்தான் சொல்கிறது...’<br />
கலெக்டர் அந்த ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றார். பிறகு மெல்ல சுதாரித்துக்கொண்டு சொன்னார். ‘ அவன் கடையிலிருந்து தேங்காய் வாங்கிவந்தது காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தவே..’<br />
நீதிபதியின் உடம்பு குலுங்கியது. மெல்ல தலையை ஆட்டிக்கொண்டார். ‘ 144 தடை உத்தரவு அமுலில் இருந்ததா, இல்லையா...?’<br />
‘ ஆம், இருந்தது...’<br />
‘ பிறகு எப்படி அச்சிறுவனால் உள்ளே நுழைய முடிந்தது...?’<br />
‘ கலவரம் வெடித்ததும் மக்கள் நாலாபுறமும் சிதறினார்கள். அச்சிதறலுக்குள் அவன் ஊடுறுவச் செய்தான்...’<br />
நீதியரசரின் ஆறாம் விரல் குறிப்பேட்டில் ஊர்ந்தது. ‘ முதல் துப்பாக்கிச் சூடு அச்சிறுவன் மீதே நடத்தப்பட்டிருக்கிறது...’<br />
‘ ஆமாம், அவன்தான் கலவரத்தைத் தூண்டியவன்..’<br />
‘ யார், அச்சிறுவன்...?’<br />
‘ ஆமாம் , அவனேதான்...’<br />
நீதியரசரால் அதற்கு மேல் கேள்வித் தொடுக்க முடியவில்லை. கலெக்டரை சில நிமிடங்கள் பார்த்தபடியே இருந்தார். மின் விசிறியின் சுற்றும் இரைச்சல் மட்டும் தனியே கேட்டுக்கொண்டிருந்தது. குறிப்பேட்டின் ஒரு பக்கத்தைக் கிழித்து பந்து போல் சுருட்டிக்கொண்டு கேட்டார் ‘ அறவழியில் மட்டுமே போராடத் தெரிந்த மக்களுக்கு கலவரம் செய்யவும் தெரியுமா...?’<br />
‘ இயல்பாகவே அவர்கள் கலவரக்குணம் மிக்கவர்கள்...’<br />
கலெக்டர் உச்சரித்த அதே சொற்களை நீதிபதியின் நா உச்சரித்தது. கலவரக்குணம் மிக்கவர்கள் என்கிற வாக்கியத்தை அவர் இரண்டொரு முறை தொண்டைக்குள் உருட்டினார். ஒரு தனி பக்கத்தில் அதை மட்டும் தனியே எழுதினார்.<br />
‘துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு பிறப்பிக்க தாசில்தாரருக்கு அதிகாரமில்லை. அவரது உத்தரவின் பேரில்தான் துப்பாக்கி சூடு நடந்தேறியிருக்கிறது. உத்தரவு பிறப்பித்தவரே தகவல் தெரிவிக்கவும் செய்திருக்கிறார். அதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார், அப்படித்தானே...?’<br />
‘ ஆமாம் நீதியரசர்...’<br />
‘ வருத்தம் என்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காகவா, இல்லை மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்காகவா...?’<br />
‘ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக...’<br />
‘ அப்படியென்றால் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கான வருத்தம்...?’<br />
‘ வேண்டியதில்லை நீதியரசரே..’<br />
நீதியரசர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ஆனால் முதுகெலும்பிற்கும் தோள் தலைக்கு இடையேயான முடிச்சு குன்றியே இருந்தது. <br />
‘ ஏன்..?’ அவரது இமைகள் நெற்றிக்கு மேல் ஏறி அப்படியே நின்றன.<br />
‘ இப்படியான துப்பாக்கி சூட்டின் மூலம்தான் அவர்களுக்கு சரியான பாடத்தைக் கற்பிக்க முடியும்...’<br />
நீதிபதியின் மேசையில் தண்ணீர்க்குவளை இருந்தது. அதை எடுத்து தொண்டையை நனைத்துகொண்டார். நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டார்.<br />
‘ அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களின் கோரிக்கைக் குறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா...?’<br />
‘ இல்லை...’<br />
‘ காரணம்..?’<br />
‘அவர்கள் போராட்டத்தை போராட்டம் போல் நடத்தவில்லை. திருவிழா போல் கொண்டாடினார்கள்...’<br />
‘ திருவிழா போல் என்றால்...?’<br />
‘கூட்டம் கூட்டமாக களத்திற்கு வருவதும், போராடுவதும், செல்வதும், திரும்பவும் கூடுவதுமாக இருந்தார்கள்..’<br />
‘ இதற்கும் பேச்சுவார்த்தை நடத்த முடியாமைக்கும் என்ன காரணம் இருக்க முடியும்..?’<br />
‘ யாரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென அரசுக்குத் தெரிந்திருக்கவில்லை..’<br />
‘ தெரிந்திருக்கவில்லையா, தெரிந்துகொள்ளவில்லையா...?’<br />
கலெக்டருக்கு இக்கேள்வி குழப்பமாக இருந்தது. இரண்டும் ஒன்று போலவே இருந்தாலும் இரண்டில் எதை தேர்வு செய்வதென தடுமாற்றமிருந்தது. அவரது கை பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைந்தது. கைக்குட்டையைத் தேடி உதடுகளைத் துடைத்தது.<br />
‘ தெரிந்துகொள்ளவில்லை...’<br />
‘ அதான் ஏனென்று கேட்கிறேன்...?’<br />
‘ போராட்டக் களத்தில் கூடியவர்கள் பட்டினி விரதமிருப்பார்கள். பசியெடுத்ததும் கலைந்துவிடுவார்கள் என்று நினைத்து அத்தகைய முயற்சியில் இறங்கிவில்லை..’<br />
நீதிபதி இப்படியொரு பதிலை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் மெல்ல எழுந்து இருக்கையில் நன்றாக உட்கார்ந்துகொண்டார். ‘துப்பாக்கி சூடு பெண்களின் மீதும் நடத்தப்பட்டிருக்கிறதே...’<br />
‘ அவர்கள்தான் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள்...’<br />
‘ முன்னின்று என்றால் தலைமையேற்று என்கிறீர்களா...?’<br />
‘ இல்லை, முன் வரிசையில் நின்று எனச் சொல்ல வருகிறேன்...’<br />
நீதியரசர், குறிப்பேட்டில் குறுக்காக ஒரு கோடு வரைந்தார். கோட்டின் மீது நான்கைந்து வட்டம் வரைந்து அந்த வட்டத்தைத் தொடும்படியாகக் கூட்டல் குறியிட்டார்.<br />
‘ சிறுவர், சிறுமியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட காரணம்...?’<br />
‘ பெரியவர்கள் மீதே லத்தி சார்ஸ் செய்யப்பட்டது. ஆனால் சிறுவர், சிறுமியர் மீது அடி விழுந்தது எதிர்பாராதது...’<br />
‘ துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் முன்னறிவிப்பு பிறப்பிக்கப்பட்டதா...?’<br />
‘ அதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை...’<br />
‘ தண்ணீர் வீச்சு, புகைக்குண்டு...?’<br />
‘ அக்கட்டத்தை கலவரம் தாண்டிவிட்டது’.<br />
‘ துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா...?’<br />
‘ தெரிவிக்கப்பட்டது...’<br />
‘ பின் ஏன் காயமுற்றவர்கள் மரணமுற்றார்கள்...?’<br />
‘ மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை...’<br />
இக்கேள்வியைத் தொடர்ந்து அடுத்தக் கேள்விகளைக் கேட்க நீதியரசருக்கு நேர அவகாசம் தேவைப்பட்டது. ஒரு நிமிடம் எழுந்து நின்று பார்வையைச் சுற்றிக்கொண்டார். போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனையை நினைக்கையில் அவரது நாசிகள் விடைத்தன. நாசியுடன் சேர்ந்து உதடுகளைச் சுழித்தார்.<br />
‘ துப்பாக்கி சூடு குறிபார்த்து சூடப்பட்டதா, இல்லை உத்தேசமாக நிகழ்த்தப்பட்டதா...?’<br />
‘ குறி பார்த்தே சுடப்பட்டது’<br />
‘ குறி என்னவாக இருந்தது....?’<br />
‘ பெண்கள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் இல்லாமலிருக்க பார்த்துக்கொள்ளப்பட்டது’<br />
‘ போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மீது முதல் குறி வைக்கப்பட்டது. அப்படிதானே...?’<br />
‘ அப்படியன்று. ஆனால் குறியில் ஒன்றிரண்டு தலைமையேற்றவர்கள் இருக்கவே செய்தார்கள்...’<br />
நீதியரசர் ஆசனத்தின் முன் அமர்விற்கு வந்தார். அடுத்து மிக முக்கியமானக் கேள்வியொன்றை கேட்கப்போகிற தாகத்தில் நிமிர்ந்தார். ‘ முழங்கால்களுக்கு கீழ்தானே துப்பாக்கி சூடு நடத்தியிருக்க வேணும். மார்பில் , தலையில், குறி வைக்கக் காரணம்...’<br />
‘ அவர்கள் சர்க்கார் வாகனத்தின் மீதும், அலுவலகத்தின் மீதும் தீ வைத்ததால் புகை மூட்டம் எழுந்தது. ஆகவே குறி தவறிவிட்டது’<br />
‘ துப்பாக்கி சூடு நடத்த உடனடி காரணம், அம்மக்கள் மீதிருந்த முன் விரோதம் என நீதிமன்றம் சந்தேகப்படுகிறது. இதற்கு கலெக்டர் சொல்லும் பதில் என்ன...?’<br />
‘ அம்மக்கள் மீது அரசுக்கு ஒரு போதும் முன்விரோதம் இருந்ததில்லை..’<br />
நீதியரசர் அவருடையக் கோப்பிலிருந்து சில ஆதாரங்களை எடுத்தார். தூசிகளைத் தட்டினார். ‘ அம்மக்கள் இதற்கு முன் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கியமானப் போராட்டமாக கூலி உயர்வு போராட்டம், வார விடுமுறை, எட்டு மணி நேரப் போராட்டம்,..’<br />
கலெக்டர், நீதியரசரின் வாசிப்பிற்கிடையில் நுழைந்தார். ‘ கனம் நீதியரசர் அவர்களே, இப்போராட்டங்களை துப்பாக்கி சூட்டுடன் முடிச்சுப்போட வேண்டியதில்லை...’<br />
‘ உங்கள் பதில் திருப்தியளிக்கும்படியாக இல்லை. வ.உ.சிதம்பரனார் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவர். அவர் தலைமையிலான கோரல் பஞ்சாலை தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. அப்போராட்டத்தை வழிநடத்தியவர் சுப்பிரமணிய சிவா. இவரும் மக்களின் தலைவர்தான். அவரின் பேச்சும் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சிம்மச்சொப்பனமாக இருந்திருக்கிறது. அப்போராட்டத்தை ஒடுக்குவதிலும், ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதிலும் ஆளும் பிரிட்டிஸார் அரசு தோல்வியைத் தழுவியிருக்கிறது...’<br />
கலெக்டரால் ஒன்றும் பேச முடிந்திருக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தார்.<br />
மேலும் நீதியரசர் தொடர்ந்தார். ‘ ஆமாம், அப்போராட்டத்தில் ஏற்பட்ட தலைக்குனிவு ஆட்சியாளர்களிடம் புகையும் நெருப்பாக இருந்திருக்கிறது. இதற்கிடையில் வங்கத் தலைவர் பிவின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கிறார். அவரது விடுதலையை தூத்துக்குடி மக்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படியான கொண்டாட்டத்தில்தான் அவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறீர்கள். வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, போன்றவர்களைக் கைது செய்திருக்கிறீர்கள். சுப்பிரமணிய பாரதி என்கிற ஒரு கவிஞர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தப்பித்து பாண்டிசேரியில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். பாண்டிசேரி பிரெஞ்ச் ஆட்சிக்கு கட்டுப்பட்ட பகுதி என்பதால் அவரை உங்களால் கைது செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் கலெக்டர் என்கிறவர் முறையில் என்னச் சொல்ல வருகிறீர்கள்..?..’<br />
கலெக்டர் விஞ்ச் துரை தலையை சற்று நிமிர்த்தினார். நீண்ட சம்பவத்துடன் கூடிய கேள்விக்கு ஓரளவேனும் நேர்த்தியாகப் பதில் சொல்லிவிட வேண்டுமென முயற்சித்தார். ‘ கனம் நீதியரசர் அவர்களே, மக்களின் கொண்டாட்டம் என்பது பிவின் சந்திரபாலின் விடுதலை போராட்டமாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அது ஹிந்துஸ்தான் மக்களின் விடுதலைக்கானப் போராட்டம். அப்போராட்டத்தை துப்பாக்கி சூடு வழியே கட்டுப்படுத்தாவிட்டால் அப்போராட்டம் மதராஸ் மாகாணம் முழுமைக்கும் பரவியிருக்கும். இதனால் ஆளும் நம் பிரிட்டிஸார் ஆட்சிக்கு பெரிய தலைவலியாக அமைந்திருக்கும்...’<br />
நீதியரசரின் கண்கள் சிவந்தன. வார்த்தைகள் அமிலத்துளி போலத் தெரித்தன. ‘ இத்துப்பாக்கி சூடு பிரிட்டிஷ் மகாராணி குடும்பத்தைக் கலங்கப்படுத்தியிருக்கிறது. மேலும் நம் பிரிட்டிஸார் நிர்வாகம் பிரெஞ்சு, டச்சுக்காரர்களின் கேலிக்கு உள்ளாகியிருக்கிறது...’<br />
கலெக்டரின் உதடுகள் துடித்தன. கண்கள் கண்ணீரால் பனித்தன. கைகளைக் கட்டிக்கொண்டு சரணாகதியாக நீதியரசர் முன் நின்றார். அவரது தலை மன்னிப்பு கோரி நின்றது. ‘ கனம் நீதியரசரே, இலண்டன் மாநகர் அனுமதியில்லாமல் இத்துப்பாக்கி சூடு நடத்தியமைக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். அதற்காக கிழக்கிந்திய மகாராணியிடம் மன்னிப்புக் கோருகிறேன்...’<br />
நீதியரசர் ஆசனத்தில் குலுங்கி உட்கார்ந்தார். அவர் மேல் போர்த்தியிருந்த கருப்பு ஆடையை நன்றாக எடுத்துவிட்டுக்கொண்டார். அக்கனமே துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான தீர்ப்பை எழுதினார். <br />
‘ ஹிந்துஸ்தான் காலனி , மதராஸ் மாகாணம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி சரகத்தில் நடந்தேறிய எதிர்பாரா துப்பாக்கி சூடு, அச்சூட்டில் இறந்து போனவர்கள், காயமுற்றவர்கள்,.. என இச்சம்பவத்திற்காக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஞ்ச் துரை தெரிவித்த ஆழ்ந்த வருத்தத்தையும், நமது பிரிட்டிஸ் மகாராணியிடம் கேட்டிருந்த மன்னிப்பையும் இந்த நீதிமாமன்றம் பெரிதென ஏற்கிறது. மேலும் விஞ்ச் துரையின் நிர்வாகத் திறமை, சாதூரியமான பேச்சு இரண்டையும் பெரிதும் மதிக்கிறது. அவரது ஆட்சித்திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் மேலும் இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக பணியாற்ற மாட்சிமை தங்கிய பிரிட்டிஸ் மகாராணியின் அதிகாரத்திற்குட்பட்ட இந்த நீதி மாமன்றம் ஆணை பிறப்பிக்கிறது....’ என தன் தீர்ப்பை வாசித்து எழுந்தார் நீதிபதி ஏ.எஃப். பின்ஹே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjSq5jxy0GZsnjj9rBV4jmUet0oMCMWc01t8cHUtVSNXCJ8A6Lf85Yh2YtrW49CaEBV3jqvOI0r60ZgUqy3CwDZHh0LwhRuC1-auoT2Tn1UCkR9iNYyzYeJUx_Djv_TeAGct0piUhMNMg/s1600/Screenshot_2018-11-07-12-21-42-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="597" data-original-width="408" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjSq5jxy0GZsnjj9rBV4jmUet0oMCMWc01t8cHUtVSNXCJ8A6Lf85Yh2YtrW49CaEBV3jqvOI0r60ZgUqy3CwDZHh0LwhRuC1-auoT2Tn1UCkR9iNYyzYeJUx_Djv_TeAGct0piUhMNMg/s640/Screenshot_2018-11-07-12-21-42-1.png" width="436" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj685CIlmnWZVxbFPm4ITqzL-KW8BFhvde1tktsiNBkYOUtyDwxH1pDfP1E1leYT8gknkTUx9Ck0qMmNchtoYjqpa9JXMEtsk7R5Zy8smZlOAiPdzbKTAjVE4yuFABpYxGaqtdRskINS0w/s1600/Screenshot_2018-11-08-22-00-27-1-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="435" data-original-width="457" height="608" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj685CIlmnWZVxbFPm4ITqzL-KW8BFhvde1tktsiNBkYOUtyDwxH1pDfP1E1leYT8gknkTUx9Ck0qMmNchtoYjqpa9JXMEtsk7R5Zy8smZlOAiPdzbKTAjVE4yuFABpYxGaqtdRskINS0w/s640/Screenshot_2018-11-08-22-00-27-1-1.png" width="640" /></a></div>
<br />
<div>
விமர்சனம் - அருள்ராஜ்</div>
</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-47348193778051138602018-11-04T12:20:00.003+05:302018-11-04T12:20:59.336+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsquaa7OuFx74HTWjOx2ONYnvlYZSflDjUdjW0occaecnEVolYSYeUT2vIoi6RWSSsgZ95wSuFZVleJrBA1ftNrBfS53EHDBq39Kx1W5muXEijmh5TUMX2sXwdY23nC-FVdYI5aD8_dCg/s1600/IMG-20181103-WA0246.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1104" data-original-width="840" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsquaa7OuFx74HTWjOx2ONYnvlYZSflDjUdjW0occaecnEVolYSYeUT2vIoi6RWSSsgZ95wSuFZVleJrBA1ftNrBfS53EHDBq39Kx1W5muXEijmh5TUMX2sXwdY23nC-FVdYI5aD8_dCg/s640/IMG-20181103-WA0246.jpg" width="486" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGWrlXsLj29W4gokee0GfYOCt0QPbYscFcPB5-GhNX8bIM8lZWVoSUQjIE6obZI-9us9ej1W9wTYHp2ZOkb9J-gJKqUGQRfibmm6ypKSzF7iI31YbQ2bepD9Yk0mgnOAXhw0_XJ5D4A6o/s1600/IMG-20181103-WA0247.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1150" data-original-width="974" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGWrlXsLj29W4gokee0GfYOCt0QPbYscFcPB5-GhNX8bIM8lZWVoSUQjIE6obZI-9us9ej1W9wTYHp2ZOkb9J-gJKqUGQRfibmm6ypKSzF7iI31YbQ2bepD9Yk0mgnOAXhw0_XJ5D4A6o/s640/IMG-20181103-WA0247.jpg" width="542" /></a></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-83049125906826137092018-10-25T17:30:00.001+05:302018-10-25T17:30:11.588+05:30வேட்கை இலக்கிய இதழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்றைய தினம் எனக்கு பிடித்தமான கட்டமைப்பில் சிற்றிதழிலும் சிறிய இதழாக சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு இதழ் கைக்கு வந்தது. - வேட்கை -<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh5tnAcT91S7huDSI7jKYnbjt3X5bg6NvWVH2Qf5yiSkgysim6ZU-3iZb4MXUV3iDiE2Dor7awMq1OhH5HeAlAIxRxWBmdcWum95xXJWLuBpbogzQI2pxOhO5-2gv_p0JEjLTxkm1TBwY/s1600/20181025_172514.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh5tnAcT91S7huDSI7jKYnbjt3X5bg6NvWVH2Qf5yiSkgysim6ZU-3iZb4MXUV3iDiE2Dor7awMq1OhH5HeAlAIxRxWBmdcWum95xXJWLuBpbogzQI2pxOhO5-2gv_p0JEjLTxkm1TBwY/s640/20181025_172514.jpg" width="360" /></a></div>
<br />
<br />
நவீன இலக்கியப் படைப்பாளர்களுக்கான களம் என்கிற அடையாளத்தோடு வந்திருந்த இதழைப் பார்க்கையில் எனக்கும் கூட இப்படியாக ஒரு இதழைத் துவங்கிவிடலாம் என்கிற ஆசை வந்துவிட்டது. - Cool down :(<br />
<br />
இதழ் முழுக்கவே மா. அரங்கநாதனின் பேட்டி.<br />
<br />
தூண்டிலாக வீசப்பட்ட கேள்விகள். வலையில் சிக்கிய மீன்களாக பதில்கள். <br />
<br />
#உண்மையோடு உறவு வைத்துக்ககொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. <br />
<br />
#என்னைப் பொறுத்தவரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல சந்தேகங்களுக்கு கவிதை அம்சமே நல்ல பதிலைத் தந்தது.<br />
<br />
#உதைப்பந்து விளையாட்டிற்குக் கூட இலக்கணம் இருக்கிறது. இந்த கவிதைக்கு இல்லையா? என்கிற கேள்விக்கு உதைப்பந்து விளையாட்டிற்கு இலக்கணம் இருக்கிறது. டென்னிஸ் விளையாட்டிற்கு இருக்கிறது. கிரிக்கெட்டிற்கு விளையாட்டிற்கு இருக்கிறது. ஆனால் விளையாட்டிற்கு என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா? <br />
<br />
#நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரிய வருகிறது...இப்படியான பல பதில்கள். <br />
<br />
பதில்களின் பிரமாத வரிசையில் மிக நுட்பமாக ஒரு கேள்வி<br />
<br />
#' உங்கள் வீடு பேறு கதையில் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து திருவல்லிக்கேணிக்கு தன் தாயார் இறந்து போன மாடியறையைப் பார்த்துப் போக வருகிறான். வந்தவன் அங்கே அந்த வீட்டுக்காரரோடு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த அறையைப் பார்க்காமலேயே போகிறான். அந்த வீட்டுக்காரர் ஞாபகப்படுத்தியும் கூட - ஏன் என்று சொல்ல முடியுமா?<br />
<br />
<br />
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ<br />
<br />
மா.அரங்கநாதனுக்கு சாகித்ய விருது கிடைக்கவில்லையென ஆதங்கப்படுகிறார். அட விடுங்க சார் விருதா முக்கியம். திரும்பவும் அவரது படைப்பை வாசிப்பதே முக்கியம்...<br />
<br />
<br />
<br />
இதழ் தொடர்புக்கு..<br />
அ.கார்த்திக்கேயன்<br />
36/14 ஆறாவது குறுக்கு ( கிழக்கு) வித்யா நகர் ,அம்மாபேட்டை ,சேலம் - 636003<br />
- 25.10.2018 * 5.29pm<br />
<br />
<br />
</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-12831992200217562742018-10-23T15:00:00.000+05:302019-02-24T11:20:01.071+05:30தொடர் - புதிய சொல் பழைய தேடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1X7YyHESDOxFRe8FzWcmCUOFi9iDb8yGdj0pTF-fCNttAWrVmzazoxPCHrrR0yKNwKhah2_etHcs_ijl9E4_d5OaHB34Y0z-GLuRt57B12XfObcnksbr5VN4DaV5LWcZf6Qw0M7NuGBI/s1600/Screenshot_2019-02-24-11-16-33.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1X7YyHESDOxFRe8FzWcmCUOFi9iDb8yGdj0pTF-fCNttAWrVmzazoxPCHrrR0yKNwKhah2_etHcs_ijl9E4_d5OaHB34Y0z-GLuRt57B12XfObcnksbr5VN4DaV5LWcZf6Qw0M7NuGBI/s320/Screenshot_2019-02-24-11-16-33.png" width="180" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 25<br />
<br />
பரிநிர்வாணம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம்,<br />
<br />
புத்தரின் போதனைகள் கொண்ட தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார் - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன.<br />
<br />
திரிபிடகம் - புத்தரின் மெய்யியல் திரட்டு. (திரி - மூன்று. பிடகம் - கூடை அல்லது திரட்டு) திரிபிடகம் - சுத்த, வினய, அபிதம்ம. புத்தரின் பரிநிர்வாணத்திற்குப் பிறகு கூடிய பௌத்த சங்கம் திரிபிடகத்தை வரையறுத்து தொகுத்தது என்கிறார் சு.மாதவன்.<br />
<br />
அது என்ன, பரிநிர்வாணம்?<br />
<br />
திசம்பர் 12-2018 முரசொலி இதழ், 'அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்வும் சிந்தனைகளும் ' என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதியது. முதல் பத்தி, '6.12.2018 அண்ணல் அம்பேத்கரின் 62 ஆவது நினைவுதினம் 'மகா பரிநிர்வாண் திவாஸ்' தினமாக கடைபிடிக்கப்பட்டது' .<br />
<br />
தில்லி, அலிப்பூர் சாலை , இலக்கம் 26, அம்பேத்கர் உயிர் துறந்த இல்லத்திற்கு 'டாக்டர் அம்பேத்கர் மஹா பரிநிர்வாண் ஸ்தலம் ' எனப் பெயர்ச்சூட்டி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 2003 , டிசம்பர் 2 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் . <br />
<br />
<br />
அம்பேத்கரின் ஆசான் புத்தர் - ஏ.பி. வள்ளிநாயகம் எழுதிய கட்டுரையில் பரிநிர்வாணம் குறித்து அம்பேத்கர், உடல், உணர்ச்சிகள், மனம், செயல்கள் யாவும் அடங்கச் செய்வது என்கிறார்.<br />
<br />
க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் என்கிற நூலில் நான்காவது அத்யாயம் - பரிநிர்வாணம். அதில்,<br />
'நிர்வாணமென்ப தேதோவென்றெண்ண வேண்டாம். உடலுயிர் சேர்க்கைக்கு வாணமென்றும் உடலுயிர் பிரிவிற்கு நிர்வாணம் என்றும் சொல்லப்படும்'.<br />
<br />
புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிர்வாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன? என்கிற கேள்விக்கு அயோத்திதாஸப் பண்டிதர், துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிர்வாணம் எதிரிடையாயிருக்கின்றது. ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.<br />
<br />
இதிலிருந்து பரிநிர்வாணம் என்பது மரணம் குறித்தச் சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் ஆன்ம ஞானம் அடைதல், இறந்து போகுதல், செத்துப்போகுதல்<br />
சிவஞானம் அடைதல், முக்தி அடைதல், சமாதி அடைதல், இறைவனடி சேர்தல், சாயுஜ்ய பதவி அடைதல், கைலாசப் பதவி அடைதல், வைகுண்டம் சேர்தல், பரமபதம் அடைதல், புத்தராதல், சுவர்க்கம் அடைதல் ,...என பலவாறு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.<br />
<br />
சி.பி.சரவணன் எழுதிய பௌத்த மதப் பிரிவுகள் என்கிற தொடரில் 'பௌத்தம், இருபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டது. அதில் ஹீனயானம் பெரிய பிரிவு. இப்பிரிவுதான் , புத்தரின் நல்லொழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் பரிநிர்வாணம் அடையலாம்' என்கிறது. <br />
<br />
பரிநிர்வாணம் என்பது சமஸ்கிருதச் சொல். இச்சொல் பரிநிப்பாணம் என்கிற பாலி மொழியிலிருந்து வந்தது. அருகதர் ( ஆன்மீக ஞான ஒளி அடைதல்). இதற்கு நிகரான சொற்கள் முத்தி, முக்தி, மோட்சம், ஜீனர். தமிழில் வீடுபேறு என்று சொல்லலாம்.<br />
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் -23</div>
<br />
குஞ்சரம்<br />
<br />
-அண்டனூர் சுரா<br />
<br />
திசம்பர் மாத காக்கைச்சிறகினிலே இதழில் ' ஊர்சுற்றிக் காக்கையாரின் குஞ்சரங்கள்' - பேரா.ந.சண்முகரட்ணம் எழுதி முகுந்தன் தொகுத்த பத்திக் கட்டுரை. நோர்வே , கலாச்சார மையத்தில் 'ஞானரதம்'( பாரதியார் எழுதியது ) கவிதையின் நாட்டிய அஞ்சலி நடந்தேறியது. <br />
<br />
பரம ஏழையாக இருப்பதால் உயர்ந்த இன்பங்கள் எதையும் பெற முடியவில்லையே, என வருந்தும் பாரதிக்கு ஈசன் ஞானம் என்கிற தேய்வீக ரதம் கிடைக்கிறது. அதைக்கொண்டு உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் சென்று பார்க்கிறான். நான்கு லோகத்திலும் கந்தர்வலோகம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அங்கு பர்வதகுமாரி என்கிற கந்தர்வ அழிகையைக் காணுகிறான். அந்த அழகியின் அழகில் சொக்கி,அவளுடன் பரவசத்தில் இருக்கும் கணத்தில் 'படேர்' என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண் விழித்தபோது மீண்டும் பழையபடி தன் ஏழ்மை வீட்டில் இருப்பதை உணர்கிறான். இது ஞானரதத்தின் கதை. இக்கதைக் குறித்த விமர்சன போக்குடன், இன்னும் நான்கு பதிவுகள் கொண்ட பத்தி எழுத்திற்கு அவர் சூட்டியத் தலைப்பு ' குஞ்சரம் '. <br />
<br />
அது என்ன குஞ்சரம்..?<br />
<br />
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் குஞ்சரம் என்றொரு ஊராட்சி இருக்கிறது.<br />
<br />
கலைஞர் தொலைக்காட்சி துவக்கம், ஞாயிறு தோறும் ஒளிப்பரப்பாகும் ஒரு நடன நிகழ்ச்சிக்கு 'மானாட , மயிலாட' என கலைஞர் பெயர்ச்சூட்டினார். சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய நடராஜப்பத்து என்கிற பதிகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட வரி இது. 'மானாட மழுவாட மதியாட புனலாட' என்பதாகத் துவங்கும் இந்த பாடலில் குஞ்சர முகத்தனாட,... என்பதாக ஒரு வரி உண்டு. <br />
<br />
2015 ஆம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்டப் போரில் நடந்தேறிய அத்துமீறல்களை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசுடன் இணைந்து விசாரித்து மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல அறிக்கைகள் வெளிவந்தன. இதற்கிடையில் தமிழ் மிர்ரர் என்கிற பத்திரிகையில் ' இறக்கை இல்லாத அறிக்கை' என்கிற தலைப்பில் ப. தெய்வீகன் ஓர் அறிக்கை வெளியிட்டார். '.....இந்த அறிக்கைக்கு அரிதாரம் பூசி குஞ்சரம் கட்டி அழகு பார்க்கும் தமிழர் தரப்புக்கள் தாம் எதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரியாமலேயே தமது ஆதரவு அறிக்கைகளை ஊடகங்களில் விளாசி வருகின்றனர்'. <br />
<br />
விளக்குமாற்றுக்கு குஞ்சரம் கட்டுவதைப் போல - ஒரு பழமொழி. இங்கு குஞ்சரம் என்பது சுருக்குப்பையில், சிகை அலங்காரத்தில் தொங்கும் உருண்டையான அணிகலன் அதாவது கருப்புக்குழல்.<br />
<br />
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்... ( நாலடியார் )இங்கு குஞ்சி என்பது தலை முடி.<br />
<br />
உச்சி முச்சிக் குஞ்சி - மீனாட்சி பிள்ளைத் தமிழ்<br />
<br />
குஞ்சி ஆண்மயிர் - சூடாமணி நிகண்டு.<br />
<br />
குஞ்சம் - ஆண் உறுப்பை மறைக்கப் பயன்படும் பண்டைய கால துணி. இதிலிருந்தே ஆணின் உறுப்பு குஞ்சு என்றானது. <br />
<br />
சரி, முகுந்தன் குறிப்பிடும் குஞ்சரம் இதுதானா?<br />
<br />
கவி குஞ்சர பாரதியார் என்றொரு கருநாடக இசைக்கலைஞர் இருந்தார். அவரது இயற்பெயர் கோடீஸ்வரன். சிவகங்கை மன்னர் அவரது இசைப்புலமையைப் பாராட்டி 'கவி குஞ்சரம் ' என்றொரு பட்டத்தைச் சூட்டினார். அதன்பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.<br />
<br />
பாலகுமாரன் எழுதிய உடையார் சரித்திர நாவலில் குஞ்சர மன்னன் என்றொரு கதாப்பாத்திரம். இராசராச சோழன் இப்பெயரால் குறிக்கப்படுகிறார்.<br />
<br />
குஞ்சரவொழுகை பூட்டி ( பதிற்றுப்பத்து).<br />
<br />
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை ( தொல்காப்பியம்).<br />
<br />
மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா ' - இன்னா நாற்பது.<br />
<br />
யானையை சங்க இலக்கியங்கள் அறுபது பெயரில் குறிப்பிடுகின்றன. அதிலொன்று குஞ்சரம். <br />
<br />
இங்கு குஞ்சரம் என்பது வளைந்து தொங்கும் தும்பிக்கை உடைய விலங்கு. <br />
<br />
சிவபெருமான், நடனமாடுகையில் இடது பாதத்தை தூக்கி வளைத்து ஆடியதால் அது குஞ்சிதபாதம் என அழைக்கப்படுகிறது. <br />
<br />
குஞ்சரம், இந்திய அனைத்து மொழியிலும் புழக்கத்திலுள்ள ஒரு சொல் என்கிறார் நா.கணேசன். இவரது சொல்லாய்வின் படி, மஞ்ஞை - மஞ்சை ( மயில்) எனத் திரிந்ததைப் போல குன்று போலிருக்கும் யானை குஞ்ஞரம். இச்சொல் குஞ்ஞு - குஞ்சு - குஞ்சர- குஞ்சரம் என திரிந்தது என்கிறார்.<br />
<br />
குஞ்சரம் வடமொழிச்சொல்லாகத் தெரிகிறது. இதன் வேர்ச்சொல் குஞ்ஞு தமிழ்ச்சொல்.<br />
<br />
இதன்படி, குஞ்சரம் என்பது களபம். ஆனை என்றும் சொல்லலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 24</div>
<br />
அபலை<br />
<br />
Letter from an un-known woman என்றொரு குறுநாவல். ஜெர்மன் எழுத்தாளர் ஸ்ரிபன் செவாக் ( Stefan Zweig ) எழுதியது. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளருக்கு எழுதும் கடிதமே இந்நாவல்.<br />
<br />
இரா என்கிற எழுத்தாளரை ஒரு பெண் வாசகர் தனியாக சந்திக்கிறாள். இருவருக்குமிடையே நீளும் உரையாடல் உடலிச்சையில் சென்று முடிகிறது. தவறான உறவால் ஒரு குழந்தை பிறந்து அது இறந்தும் விடுகிறது. குற்றவுணர்விற்குள்ளாகும் அப்பெண் நடந்த சம்பவத்தை தன்பெயர் குறிப்பிடாமல் நாவலாசிரியருக்கு கடிதம் எழுதுகிறாள். அக்கடிதமே நாவல். <br />
<br />
இந்நாவல் வெளியானதும் நாவலாசிரியரிடம் தவறாது கேட்டக் கேள்வி, ' இச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்ததா ? ' என்பதுதான்.<br />
<br />
இந்நாவலை இலங்கை நாவலாசிரியர்<br />
செ.கணேசலிங்கம் 'அபலையின் கடிதம் ' என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தார். <br />
<br />
The fox with the golden tail (பொன்வால் நரி ) - மகாகவி பாரதி எழுதிய ஆங்கில சிறுகதை. இந்திய விடுதலைப் போராட்டம் திலகர், அரவிந்தர்,...தலைமையில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது இவர்களின் போராட்ட முன்னெடுப்பை கடுமையாக எதிர்த்தார் அன்னிபெசன்ட் அம்மையார். இவர் ஹோம் ரூல், தியாசபிகல் சொசைட்டி, ஆன்மீகம்,.. என பல்துறையின் வழியே இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்திருந்தார். இந்தியா முழுவதும் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதிராக தலைவர்கள் களம் கண்டார்கள். தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, பாரதியார் போன்றோர். அவரது கொள்கைகளை எதிர்க்கவும் நையாண்டி செய்யவும் பாரதியாரால் எழுதப்பட்ட கதைதான் பொன்வால் நரி.<br />
<br />
நரிகளின் தேசத்தில் (பிரிட்டன்) ஒரு கிழட்டு பெண் நரி ( அன்னிபெசண்ட்) இருந்தது. அதற்கு கர்வம் அதிகம் என்பதால் அதன் வாலை நறுக்கிவிட்டார்கள். அந்த நரி தங்கமுலாம் பூசப்பட்ட வாலைப் பொருத்திக்கொண்டு கழுதை,குரங்குகளின் தேசத்தில் (இந்தியா)நுழைந்து உங்களை விட நரிகளுக்கு ( பிரிட்டிஷ்காரர்கள்) அறிவு அதிகமென புகழ்பாடி திரிந்தது. தன் பேச்சுத் திறமையால் சில கழுதைகளை தன் நாட்டிற்கு அழைத்துச்சென்றது. அக்கழுதைகள் திரும்பி வர வேண்டுமென வழக்குத் தொடர, பொன்வால் நரி கழுதைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெட்டாமல் பொன் வாலை இழந்து வேறொரு நாட்டிற்குத் தப்பி ஓடுகிறது. <br />
<br />
டிசம்பர் 9-15 ஜனசக்தி இதழில் எல்லை.சிவக்குமார் இதேயே சற்று மாற்றி எழுதியிருந்தார். இங்கு நரிகளின் தேசம் ( அம்பானி, அதானி), பொன் வால் ( பாஜக, சங் பரிவார்), கழுதை ,குரங்குகளின் தேசம் ( ஏமாந்த அபலைகள் ) . முதலில் ஏமாறும் குரங்கு,கழுதைகள் பிறகு சுதாகரித்து பொன் வாலை பறித்துகொண்டு விரட்டி அடிக்கிறது. <br />
<br />
அது என்னதாம் அபலை?<br />
<br />
அபலை (1949), அபலை அஞ்சுகம் ( 1959) - இவை இரண்டும் திரைப்படங்கள்.<br />
<br />
ஓர் அபலையின் டயரி ( சமூக நாவல் ) - ஜரீனா முஸ்தபா ஏ.சி எழுதியது.<br />
<br />
அகநானூறு அதிசயங்கள் - லண்டன் சுவாமிநாதன் எழுதிய ஒரு கட்டுரை. இதில் பெண்பாலின பெயர்கள் வடமொழியில் ' ஆ' கொண்டும் இதுவே தமிழில் ' ஐ ' அல்லது 'இ' கொண்டு முடிவதாக குறிப்பிட்டு உதாரணமாக சீதா - சீதை , கோதா - கோதை , அபலா - அபலை எனக் காட்டியிருக்கிறார். தாவரத்திற்கு உயிருண்டு என நிரூபித்த ஜெகதீஸ் சந்திர போஷின் துணைவியார் பெயர் அபலா போஸ். <br />
<br />
சூத்திரம் என்கிற பத்திரிகை ' நந்தினி - தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை ' என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. இதில் , 'அபலைப்பெண்ணைக் காதலிப்பதைப் போல நடித்து... 'என்பதாக அச்செய்தி விரியும்.<br />
<br />
இச்சொல் குறித்து தேடுகையில் தமிழ்ச்சொல் அகராதிகள் அபலை என்கிற சொல்லிற்கு பெண், துணையற்றவள் எனப் பொருள் தந்துள்ளன. <br />
<br />
கல்கி 'அபலையின் கண்ணீர்' என்றொரு குறுநாவல் எழுதினார் . இக்கதை Tears of a Damsel in Distress என ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இங்கு Damsel என்பது அபலை. காரிகை என்றும் சொல்லலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4lGLUyzroFdPqfmwCEKO8Z0N7iWsx_6YWxeP9uxPZo6A_0T6n4xdGG-HL82YZbtsaz47Y7bOp8MZ1svywltJbyjGGh3bK3ZoCrx4KdtoNqqgjIMY3pUgwD8CuBGp_3rwqsaNlcRjRnv0/s1600/Screenshot_2019-02-22-19-51-22-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="733" data-original-width="325" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4lGLUyzroFdPqfmwCEKO8Z0N7iWsx_6YWxeP9uxPZo6A_0T6n4xdGG-HL82YZbtsaz47Y7bOp8MZ1svywltJbyjGGh3bK3ZoCrx4KdtoNqqgjIMY3pUgwD8CuBGp_3rwqsaNlcRjRnv0/s640/Screenshot_2019-02-22-19-51-22-1.png" width="282" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் </div>
<br />
கோதாட்டம்<br />
<br />
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா குறித்து கருத்துத் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிச்சேர்ந்த ப்ரபுல் படேல் ' இதுவும் ஒருவகை ஜும்லாஸ் ' என்றார்.<br />
<br />
பிஜேபி உடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசக்கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கச்சொல்லி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. வாக்கெடுப்பு நாளன்று உரையாற்றிய ராகுல்காந்தி , 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதம் 'ஜூம்லா தாக்குதல்' என்றவர் இதன் அறிகுறிகள் முதலில் உற்சாகம், அடுத்து மகிழ்ச்சி, கடைசியாக பெரும் அதிர்ச்சி ' என்றார். இச்சொல் இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் தென் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சொல் இதுதான்.<br />
<br />
'மோடியின் நான்காண்டுகால வேதனைகள் ' சீத்தாராம் யெச்சூரி எழுதிய ஒரு கட்டுரையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' நரேந்திர மோடியின் முழக்கங்கள் அனைத்துமே தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ ((‘jumlas’) வாக்குறுதிகளே'. இக்கட்டுரை ' ச.வீரமணி மொழிபெயர்ப்பில் மே 28 2018 , தீக்கதிரில் வெளியானது. டிவிட்டர் இணையதளம் நரேந்திர மோடியை ' பக்கோடா ஜூம்லா மனிதன்' என்றது. காமதேனு ஆகஸ்ட் 31, வார இதழ் ' இந்த மாயமொழிக்காரரை என்ன செய்வது ? ' - பிரசாந்த் பூஷன் சாடல் பேட்டியில் மோடியை ' ஜூமல்மேன் ' என்றிருந்தார்.<br />
<br />
அது என்ன ஜூம்லா?<br />
<br />
ஆக்ஸ்போர்டு அரபிக் சொற்களஞ்சியம் ஜூம்லா என்பது உருதுச் சொல் என்கிறது. இதன் பொருள் ' மொத்தம், மதிப்பீடு , உட்கூறு , ஒரு வாக்கியம் ' என்பதாகும்.<br />
மிர் ஜூம்லா , முகலாய ஷாஜகானுக்கு தளபதியாக இருந்தவன். இவனொரு வைர வியாபாரி. இவன் ஷாஜகானுக்கு கொடுத்த அன்பளிப்பு வைரமே கோஹினூர் வைரம் என்பதாக ஒரு கதை உண்டு.<br />
<br />
' ஜூம்லா - ஒரு செவிலியரின் கதை ' நேபாள எழுத்தாளர் ராதா பவுடல் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இங்கு ஜூம்லா என்பது நேபாளம் நாட்டிலுள்ள ஒரு மாவட்டம். <br />
<br />
இதே சொல் இந்தியிலும் உண்டு. 1500000×1250000000 = 1875000000000000 / - இத்தொகையை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? இதன் பெயரே ஜூம்லா என்கிறார் கியூக்வான் புலு. அதாவது, எந்தவொரு காலத்திலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாத பொய்யான வாக்குறுதிகளே 'ஜூம்லாஸ்' ( Jumlas ). இச்சொல்லிருந்து உருவான புதிய ஆங்கிலச் சொல் Jumlanomics - Jumla - Economocs . <br />
<br />
ஜூம்லா என்பது பித்தலாட்டம் என்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. பித்தல் என்பது முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏமாற்றுவது. இச்சொல் பித்தலாடகம் என்பதின் திரிபாகும். பித்தலை +ஆடகம்=பித்தலாடகம். ஆடகம் என்பது ஹாடகம் எனும் சம்ஸ்கிருத மொழியின் திரிபு; இதன் பொருள் பொன் என்பதாகும். ஆகவே பித்தலாடகம் என்பதற்கு பித்தலையைப் பொன் என ஏமாற்றுதல் என்றாகி பிறகு அது எல்லாவித ஏமாற்றுதலுக்கும் அப்பதமாகிப் போனது. ஒன்றை வேறொன்றாக ஏமாற்றுவது பித்தலாட்டம். அப்படியென்றால் முடியாத ஒன்றை அல்லது இயலாத ஒன்றை என்னால் முடியும் என்று ஏமாற்றுவதை எச்சொல்லால் அழைக்கலாம்...?<br />
<br />
'கோதாட்டம்'<br />
<br />
'கோதாட் டொழி ' என்கிறது ஔவையாரின் ஆத்திசூடி. பேச்சால் ஏமாற்றும் குற்றமுள்ள ஆட்டத்தை தவிர் என்பது இதன் பொருள். பண்டிதர் அயோத்திதாசர் கோது என்பது பிறருக்குத் துன்பத்தைத் தருவிக்கும் படியான சொல்லுதல் என்கிறார்.<br />
<br />
சுன்னாகம் அ.குமாரசுவாமிப்பிள்ளை அகராதி கோது - குற்றம் , உள்ளீடில்லது.<br />
<br />
A Dictionary Of The Tamil And English Languages, Volume1 By Johann Peter Rottler அகராதி கோதாட் டொழி என்பதை cease to play a sinful play என்கிறது.<br />
<br />
கோதாகொடுத்தல் என்பது சென்னை வழக்கு. அதாவது, ஏமாற்றிவிட்டுப் போதல். Chennai Univercity Tamil Lexicon Dictionary - Page 1184.<br />
<br />
கோத்துவிடுதல், கோத்துவாங்குதல், கோத்தல் இதன் தொடர்புடைய பிற சொற்கள். இதன் வேர்ச்சொல் ' கோதல்' . இதன் பொருள் கேடு விளைவித்தல் அல்லது ஏமாற்றுதல்.<br />
<br />
இதலிருந்து ஜூம்லா என்பதை பித்தலாட்டம், வஞ்சிக்கை என பல சொற்களால் விளித்தாலும் கோதாட்டம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3YrqeFp8tH4zafllqwAdl9ELoIbXm-yMxW1CEmOR3vFRMbc8tUvfh-h3lklMf73RmCtRvaYR1_M-baq5FkZHBMg2G3EWASqW_aqL3Nut6iKZcjlN7EpXVZsYmf5XwWmVIQdKXwPOw7qg/s1600/Screenshot_2019-02-03-09-45-03-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="356" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3YrqeFp8tH4zafllqwAdl9ELoIbXm-yMxW1CEmOR3vFRMbc8tUvfh-h3lklMf73RmCtRvaYR1_M-baq5FkZHBMg2G3EWASqW_aqL3Nut6iKZcjlN7EpXVZsYmf5XwWmVIQdKXwPOw7qg/s640/Screenshot_2019-02-03-09-45-03-1.png" width="236" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
3.2.2019</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 21</div>
<br />
நக்கன்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
'சிந்துசமவெளிக்கு ஒளி தந்தவர் ' - 27.11.2018 அன்று தினமணியில் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு குறித்து முனைவர் ம. இராசேந்திரன் எழுதிய கட்டுரை. <br />
<br />
கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு மைசூரிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அது மத்திய அரசு நிறுவனம் என்பதால் பெயர் பலகையில் இந்தி கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். ஆகவே மாற்றுவழியில் யோசித்து பேரா.இராசவேலு உதவியுடன் பெயர் பலகை தமிழ் பிராமி எழுத்தில் எழுதி கலைஞரிடம் கொடுக்க , அவர் அதை ஐராவதம் மகாதேவனிடம் காட்டி சரிப்பார்த்து வர வேண்டுமென கேட்க, அவரது பார்வைக்கு பிறகு பெயர்ப்பலகை தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது.<br />
<br />
ஜேஎன்யூ தலைவரும் காலச்சக்கரம் நாளிதழின் ஆசிரியருமான கா.குமார் எழுதிய இரங்கல் கட்டுரையில் 'பிராமி எழுத்து எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்களை தமிழ் பிராமி எனத் திருத்தியவர் ஐராவதம் மகாதேவன்..'. செம்மொழி மாநாட்டு இலச்சனையில் திருவள்ளுவரைச் சுற்றி இடம் பெற்ற எழுத்துருக்கள் ஐராவதம் சரிபார்த்த தமிழ் பிராமி எழுத்துகளே.<br />
<br />
ம.ரா,கட்டுரையின் தொடர்ச்சியில் "சித்தனவாசல் கல்வெட்டிலிருக்கும் 'நக்கன்' என்கிற சொல் ஆண், பெண் இரு பாலருக்குமான பொதுவானச் சொல் என்கிற அவரது விளக்கம் பலரால் பெரிதும் பாராட்டப்பெற்றது" என்றிருந்தார். இக்கட்டுரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடான வரலாற்று ஆய்விதழ் தொகுதி 12, 13 இல் இடம் பெற்றுள்ளது. <br />
<br />
ஐராவதம் மகாதேவனின் மரணம் தமிழ் உலகிற்கு பேரிழப்பே!.<br />
<br />
சரி, நக்கன் என்பது என்ன?<br />
<br />
எஸ். குலசேகரன் எழுதிய சரித்திர புதினம் - அம்பலவன் பழுவூர் நக்கன். <br />
<br />
முதல் இராசசிம்மனின் குழுமூர்ப்போரில் பராந்தகப் பள்ளி வேளானான நக்கன் புள்ளன் பங்கேற்றுள்ளான்.<br />
<br />
'வெல்வினையறியா நக்கன்' என்கிறது திருவிளையாடல் புராணம். <br />
<br />
இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரியில் குடியமர்த்தப்பட்ட 400 பெண்கள் தன் பெயருக்கு முன்னால் நக்கன் பெயரை சேர்த்துக்கொண்டார்கள் என்பது வரலாற்றுப்பதிவு.<br />
<br />
குலசேகரதேவர் பாண்டியன், நக்கன் நாச்சியார் என்கிற நடன மங்கைக்கு மூவாயிரத் தலைக்கோலி என்கிற பட்டத்தை வழங்கியிருக்கிறான். முதலாம் இராசராசனின் மனைவி நக்கன் பஞ்சமன் மாதேவி.<br />
<br />
சித்தனவாசல் கீழ்குகையில் இச்சொல் வடிக்கப்பட்டுள்ளதால், சமண முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனப் பொருள் கொள்ள முடிகிறது. <br />
<br />
நக்கன் என்கிற சொல்லின் வேர்ச்சொல் - நக்ந. இது வடமொழிச்சொல் என்கிறது பிங்கல நிகண்டு. நக்ந என்றால் நிர்வாணி.<br />
<br />
பிற்கால சோழர்களின் காலத்தில் நக்கன் என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாக மறுவியிருக்கிறது. நக்கன் என்றால் நரியைக் குறிக்கும். சிவன் , நரியை பரியாக மாற்றியதால் அவனுக்கு அப்படியொரு பெயர். நக்கா- நக்கனை வழிபடும் சொல். "நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,<br />
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே - தேவாரம்.<br />
<br />
வீட்டுக்கு வீடு சன், டண்டநக்கா டண் - சன் டிடிஎச் விளம்பரம்.<br />
<br />
டண்டணக்கா நக்கா நக்கா - ஒரு திரைப்பட பாடல்.<br />
<br />
நக்கன் - அன் என்பது ஆண் பாலைக்குறிக்கும் விகுதி என்றாலும் இச்சொல் பெண்ணைக்குறிக்கும், அம்மன் போன்று. <br />
<br />
நக்கன் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டின் படி உறவு முறையைக் குறிக்கும் சொல் என்கிறார் ஐராவதம். உடன்பிறவா சகோதரி நங்கை, நக்கன். இச்சொற்களின் வேர்ச்சொல் அக்கை . <br />
<br />
'நகு +அன் ' எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். நகு என்பது தமிழ்ச்சொல். இதன்படி நக்கன் என்பது இன்முகத்தினன்<br />
<br />
பெரம்பலூர் மாவட்டத்தில் நக்கசேலம் என்கிற சிற்றூர் உண்டு. சைலம் - மலை. நக்கன் - நரி அல்லது சிவன். <br />
<br />
இதன்படி, நக்கன் என்கிற சொல்லிற்கு அருகன், நரி, சிவன், நிர்வாணி எனப் பல பொருள் உண்டு. ஆயினும் தற்காலத்தில் இச்சொல் ஆண், பெண் பாலின வேறுபாடின்றி வதைக்கும் 'ஏழ்மை ' யைக் குறிப்பதாக இருக்கிறது.<br />
<br />
- தொடரும்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJIGwFDX7dArwxXshYNmBSRGBmqxfUQagx-oMg-MTq8kUY4vz0kFxxymvf77acVky_znRpbJ_g3h2SzHv_vl0qNdRUKkhcOdpMXP2VhosZBWHQOt0MUCpKB1ZIOpsJ97W4TID8VWVNIi4/s1600/Screenshot_2019-01-06-08-56-47-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="886" data-original-width="540" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJIGwFDX7dArwxXshYNmBSRGBmqxfUQagx-oMg-MTq8kUY4vz0kFxxymvf77acVky_znRpbJ_g3h2SzHv_vl0qNdRUKkhcOdpMXP2VhosZBWHQOt0MUCpKB1ZIOpsJ97W4TID8VWVNIi4/s400/Screenshot_2019-01-06-08-56-47-1.png" width="243" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRnc0aHW7nffNcHX7-EpuWz94RiITeVWWQQnHV5Q2WocnO0Fiq1hKfE4GVrfgslOv0ynlz2bM6gkHuf-N_3jY2ZhTabA2Mtl9pYIZwPycNeo5ORRhGuI7vPYz76oaoakTxgRYxKhfb26o/s1600/Screenshot_2019-01-06-08-56-58-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="630" data-original-width="540" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRnc0aHW7nffNcHX7-EpuWz94RiITeVWWQQnHV5Q2WocnO0Fiq1hKfE4GVrfgslOv0ynlz2bM6gkHuf-N_3jY2ZhTabA2Mtl9pYIZwPycNeo5ORRhGuI7vPYz76oaoakTxgRYxKhfb26o/s320/Screenshot_2019-01-06-08-56-58-1.png" width="274" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
06.01.2019</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 20</div>
<br />
துறக்கம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
24 ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 'முகமது ரசூல்லா' திரைப்படத்தை திரையிடும் பொருட்டு வந்திருந்த ஈரானிய திரைப்பட கலைஞர் மஜூத் மஜூதிவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'மிகக் கடுமையான தணிக்கை விதிகள் கொண்ட ஒரு நாட்டிலிருந்து எப்படி உங்களால் மிகச் சிறந்த படங்களை வெளிக்கொணர முடிகிறது...?'. அதற்கு அவர் சொன்னப் பதில் ' தணிக்கைத் துறையினர், நிறைய சட்ட விதிகளையும் , கட்டுப்பாடுகளையும் தன் வசம் வைத்திருக்கிறார்கள். என் படைப்பிற்குள்ளாக நுழைந்து துருவிப் பார்க்கும்படியான காட்சிகளை அவர்களுக்கு நான் கொடுப்பதில்லை...'.<br />
<br />
உலக திரைப்பட கலைஞர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவரது அடுத்தடுத்த இரு திரைப்படங்கள் சில்ரன் ஆப் ஹெவன், த கலர் ஆப் பாரடைஸ். ஹெவன் , பாரடைஸ் இரண்டுமே சுவர்க்கம்தான், இரண்டிற்குமான வித்தியாசம் என்ன, மொழியாளர்கள் விளக்கம் தேடத் துவங்கினார்கள் , <br />
<br />
சுவர்க்கத்தை சுவர்க்கம் என்றும் சொர்க்கம் என்றும் இரு சொற்களால் சுட்டுகிறோம். இரண்டில் எது சரி..? <br />
<br />
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...? , சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்...இரண்டும் திரைப்பட பாடல் வரிகள்.<br />
<br />
டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் - சொர்க்கம். 'நான் தேடிய சொர்க்கம் ' என்றொரு திரைப்படம் உண்டு.<br />
<br />
சுஜாதாவின் ஒரு நாவல் 'மூன்று நாள் சொர்க்கம் '. மீண்ட சொர்க்கம் - பானுமதி பார்த்தசாரதியின் நாவல் .<br />
<br />
அபிதா நாவலில் லா.ச.ரா சுவர்க்கம் என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இதே சொல் எச்.முஜீப் ரஹ்மான் எழுதிய தீர்க்கத்தரிசி நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .<br />
<br />
பேரறிஞர் அண்ணாவின் பிரபல மேடை நாடக வசனம் இது. <br />
<br />
' அடேய் முட்டாள் புரூனோ, நீ சொல்வதைப் போல உலகம் உருண்டை என்றால் சுவர்க்கம் எங்கேயடா இருக்கும்...?'' அதைத்தான் நானும் கேட்கிறேன் சுவர்க்கம் எங்கே இருக்கும்..?' <br />
<br />
இச்சொல் குறித்து தேடுகையில் சங்க இலக்கியத்தில் சொர்க்கம் , நரகம் என்கிற இரண்டும் துறக்கம் , நிரயம் என்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. <br />
<br />
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் ( கலித்தொகை )<br />
<br />
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை( அகநானூறு)<br />
<br />
சேர நாட்டு புலவரான ' பாலைக் கௌதமனார் ' துறக்கம் சென்றதாக பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்துப்பதிகம் பேசுகிறது. இலக்கியத்தில் துறக்கத்தைத் சிலரும்,<br />
நிரயத்தைச் சிலரும் பேசியிருக்கிறார்கள். இரண்டையும் பேசிய ஒரே புலவர் பரணர் மட்டுமே. <br />
<br />
துறக்கம் என்கிற தமிழ்ச்சொல்லுடன் ஸ்வர்கம் என்கிற வடசொல் சேர்ந்து உருவான சொல் சுவர்க்கம். அது மெல்லத் திரிந்து சொர்க்கமாகியிருக்கிறது. <br />
<br />
ஆங்கிலத்தில் heaven, paradise இரண்டும் சுவர்க்கம்தான் என்றாலும் ஹெவன் என்பது மேலுலகம். கற்பனையானது. அனைத்து மதங்களும் கட்டமைப்பது. இது பலரால் சொர்க்கம் எனச் சுட்டப்படுகிறது.<br />
<br />
நான்கு புறமும் வேலியால் அமைக்கப்பட்ட மனிதன் வாழ்வதற்கு உகந்த வனம் சுவர்க்கம். ஆங்கிலத்தில் paradise. ஜான் மில்டன் படைத்தது பாரடைஸ் லாஸ்ட் ( இழந்த சுவர்க்கம்). தஞ்சாவூரில் ராணி பாரடைஸ் என்றொரு திரை அரங்கமிருக்கிறது.<br />
<br />
சொர்க்கம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீஜே அளித்த பதில் சமீபத்தில் சர்ச்சையானது. ' சொர்க்கம் என்பது வானத்தில் இல்லை. அது பூமியில் படைக்கப்பட வேண்டும்....' <br />
<br />
சொர்க்கம் என்கிற ஒன்று இல்லைவே இல்லை என்றார் புரூனோ. புரூனோ மட்டுமா அறிவியலும் கூட. சுவர்க்கம் இருக்கிறது என்கிறது மதவியல். துறக்கம் - ஸ்வர்கம் - சுவர்க்கம் - சொர்க்கம் இந்த பரிணாம வளர்ச்சியின் மூலச் சொல் துறக்கம் என்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும். <br />
<br />
அட, ஸ்வர்கமே என்றாலும் நமூர் துறக்கம் போல் வருமா...?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPubxEo3D5Ws8eDY1mrcADGLmdNS4gS5VYdpSqeugaYf402UE_Zcw7w7tTXAyJFF98rybGEPUYH1aaCHMwx44TUN1bm-GqQGDI_9fC1ucRn6Nx7fqBmHdNAspcdNieFy28_d4uKuO8suQ/s1600/Screenshot_2018-12-30-08-29-37-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="926" data-original-width="362" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPubxEo3D5Ws8eDY1mrcADGLmdNS4gS5VYdpSqeugaYf402UE_Zcw7w7tTXAyJFF98rybGEPUYH1aaCHMwx44TUN1bm-GqQGDI_9fC1ucRn6Nx7fqBmHdNAspcdNieFy28_d4uKuO8suQ/s640/Screenshot_2018-12-30-08-29-37-1.png" width="250" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
30.12.2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 26</div>
<br />
அஞரின்பர்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
திசம்பர் 16, சோனியா காந்தி , ராகுல்காந்தி கலந்துகொண்ட அண்ணா அறிவாலய கலைஞர் சிலை திறப்பு விழாவிற்குப் பிறகான பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் நரேந்திர மோடியை 'சேடிஸ்ட் ' பிரதமரென விமர்சனம் செய்தார். இச்சொல் குறித்து தினசரிகள் அவ்வளவாக கண்டுகொள்ளாமல் கடந்து போக முரசொலி இவ்வாறு தலைப்புச் செய்தியாக்கியிருந்தது. 'பரம்பரை மன்னர் போல் செயல்படும் 'சேடிஸ்ட்'மோடியின் நாசிச, பாசிச ஆட்சியை வீழ்த்தி புதிய இந்தியாவை உருவாக்க ராகுலே வருக!நல்லாட்சித் தருக!'.<br />
<br />
இதே சொல்லை அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தின் மீதான அறிக்கையில் 'தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் சேடிஸ்ட் மனப்பான்மையுடன் அதிமுக அரசு செயல்படுகிறது' என்றிருந்தார்.<br />
<br />
தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இதே சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.<br />
ஆந்திரப்பிரதேசம் நந்தியால் தொகுதி எம்.எல்.ஏ பூமா நாகிரெட்டி மரணமடைய அத்தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘ஆந்திரப்பிரதேச மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர் கலியுக ராட்சசனாக இருந்து வருகிறார்’ என குறிப்பிட்டார். இது ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு 'என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறிய கருத்துக்கள் அவரது ’சேடிஸ்ட்’ மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது' என்றிருந்தார்.(மாலைமலர் ஆகஸ்டு -8).<br />
<br />
நடிகர் வடிவேலு ' எலி ' திரைப்படத்தின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தவர்களை ' சைக்கோ, சேடிஸ்ட் ' என்றார்.<br />
<br />
ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் எழுதிய நாவலில் ஓரிடம் ' கடவுளே...நல்லவர்களை மட்டும் ஏன் இந்த சோதனை சோதிக்கிறாய்?' ' கடவுள் ஒரு சேடிஸ்ட்'.<br />
<br />
சேடிஸ்ட் மன்னர்களென சிலரை வரலாறு பட்டியலிட்டுள்ளது. <br />
<br />
அட்டியா, செங்கிஸ்கான், நேரோ, ட்ராகுலா, வ்லாடு டெபெஸ், நான்காம் இவான், கலிகுலா, மாக்ஸிமிலியன், இப்ராஹிம் சுல்தான், தாமஸ் டி டர்குவெமடா,...<br />
<br />
சேடிஸ்ட் - நாசிஸ்ட், பாசிஸ்ட் இவ்விரு சொற்களை விடவும் கடுஞ்சொல் . <br />
<br />
அது என்னது சேடிஸ்ட் ? <br />
<br />
பிரெஞ்ச் சொல் SADISME என்கிற சொல்லிலிருந்து பிறந்தது SADISM - SADIST.<br />
<br />
சேடிஸ்ட் குறித்து தமிழில் தேடுகையில்<br />
<br />
சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம் - வரந்தரு காதையில்<br />
<br />
'ஆற்றாத் தன்மையள் ஆரஞரெய்தி' என்கிறது. அதாவது, மாலதி என்கிற பெண், மாற்றாந்தாய் குழந்தைக்கு முலைப்பாலூட்ட அக்குழந்தை முந்தைய கருமத்தின் பயனாய் இறந்துவிட அதனால் ஏற்படும் துன்பம் என்பது பொருள். <br />
<br />
ஆரஞர் உற்றன் கண் ( குறள் 1179 )<br />
<br />
பிரிந்துசென்ற காதலனுக்காக துஞ்சாத கண், அவன் வந்ததன் பிறகும் துஞ்சாது. இத்துன்பத்தை வள்ளுவன் 'ஆரஞர்' என்கிறான்.<br />
<br />
தடித்தனன் அவனுந் தானும் ஆரஞர் உழந்து ( கந்த புராணம் )<br />
<br />
'ஆரஞர் உற்ற வீரபத்தினி' ( சிலப்பதிகாரம் ) .<br />
<br />
அஞர் - ஆரஞர் இரண்டும் துன்பத்தைக் குறிக்கும் சொற்கள். ஆரஞர் என்பது தான் வரவழைத்துக்கொள்ளும் துன்பம் . அஞர் என்பது அடுத்தவர் ஏற்படுத்தும் துன்பம்.<br />
<br />
'ஆரவுண்டு பேரஞர் போக்கி ' - பொருநராற்றுப்படை.<br />
<br />
'கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ' என்கிற நற்றிணை பாடலில் 'வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே' என்பது கடைசி வரி. <br />
தலைவி மீது பல துன்பங்கள் படர அதிலிருந்து மீண்டெழும் தவிப்பு. <br />
<br />
SADISM ( கொடுமகிழ்வு )இதன் நிகர்சொல் MASOCHISM அதாவது, வலியேற்பு வெறி, துன்பவேட்கை, தாக்கின்பம், வல்லுறவின்பம், சித்திரவதை செய்வதில் இன்பம்,...இத்தகைய துன்பத்தை கைக்கொட்டி ரசிக்கும் மனோபாவம் கொண்டவர்களே சேடிஸ்ட். இவர்களை தமிழில் 'அஞரின்பர்'எனச் சொல்லலாம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHYx_SISXoZmMr2QjERsEbP8UVuC0Ll4m5ZUKWxqiZuA5TT5wNJxpDDiuv5b6zDat0P9L1cDNJqVXvrU_kgmKLfJduDWGt-BxMGklLxESTn3zdbqLHzbV55qVjovdJbcxqEZJQ1i1tr80/s1600/IMG-20181223-WA0023.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="388" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHYx_SISXoZmMr2QjERsEbP8UVuC0Ll4m5ZUKWxqiZuA5TT5wNJxpDDiuv5b6zDat0P9L1cDNJqVXvrU_kgmKLfJduDWGt-BxMGklLxESTn3zdbqLHzbV55qVjovdJbcxqEZJQ1i1tr80/s640/IMG-20181223-WA0023.jpg" width="194" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
23.12.2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 19</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
யக்ஞம் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
16.12.2018</div>
<br />
'இராஜலெட்சுமியும் தீபாவளியைக் கொண்டாடியிருப்பாள்' 06.11.2018, தீக்கதிரில் களப்பிரன் எழுதிய கட்டுரை. சேலம் மாவட்டம் , தளவாய்ப்பட்டி கிராமம் , பதின்மூன்று வயது குழந்தை இராஜலெட்சுமியை , தினேஷ்குமார் என்கிற சாதி வெறியன் தாயின் முன்பாகவே கழுத்தை அறுத்து , கொலை செய்கிறான். அவளுக்காக அவ்வூரில் ஒரு சுவரொட்டி இல்லை, கண்டன அறிக்கையோ, இரங்கல் கூட்டமோ இல்லை. உலகமே, தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்க, இராஜலெட்சுமி வீட்டில் 15 ஆம் நாள் காரியம் நடந்துகொண்டிருக்கிறது...இச்சம்பவத்தை வாசிக்கையில் யாருக்குத்தான் நெஞ்சு பதைக்காது.<br />
<br />
தமிழ், இனம், திராவிடம், பாரதம், தேசியம்...என்கிற பெயரால் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் தலைவர்களின் திருவாய் சட்டென மௌனித்துப் போனதை என்னவென்று சொல்வது..! இவர்களின் மௌனம் தலித்களை ' யக்ஞம் ' என்கிற சிறுகதையில் சீதாராமுடு எடுத்த முடிவை நோக்கித் தள்ளுவதாக இருக்கிறது. <br />
<br />
தெலுங்கு இலக்கிய உலகில் 'காளீபட்னம் ராமாராவ் ' எழுதிய ' யக்ஞம்'என்கிற சிறுகதை, இந்திய இலக்கியத்தை மட்டுமல்ல, சனாதன கட்டமைப்பை ஒரு அசைவு அசைக்கவே செய்தது.<br />
<br />
'கோபண்ணா என்கிற வியாபாரியிடம் அப்பல்ராமுடு என்கிற தலித் கடன் வாங்குகிறார். அவரால் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. ஸ்ரீராமுலு நாயுடு என்கிற மேற்சாதிக்காரனிடம் பஞ்சாயத்து செல்கிறது. அவன் , கடனைத் தீர்க்க அப்பல்ராமுடமிருந்து நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிகொள்கிறான். இது அப்பல்ராமுடுவின் மகன் சீதாராமுடுக்கு தெரியவருகிறது. அவன், விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனைத் தேடிப்பிடித்து பஞ்சாயத்து மண்டபத்திற்கு அழைத்துச்சென்று , அவர்கள் பார்க்க மகனின் கழுத்தை அறுத்து, தலை வேறு, உடம்பு வேறாகக் கிடத்துவிட்டு சொல்கிறான். 'என் அப்பன் உங்களுக்கு அடிமை. அவருக்குப் பின் நானும் அடிமை. எனக்குப்பிறகு என் மகன் அடிமையாக இருக்கமாட்டான்...'. <br />
<br />
யக்ஞம்...? <br />
<br />
கமலாதேவி அரவிந்தன் எழுதிய எங்கேயும் மனிதர்கள் என்கிற சிறுகதையில் இச்சொல் இடம்பெற்றுள்ளது. <br />
<br />
ஜெயகாந்தனின் ஒரு நாவல் - மஹா யக்ஞம். <br />
மலையாள எழுத்தாளர் கே.பி.ஸ்ரீதேவியின் ஒரு நாவல் - யக்ஞம்<br />
<br />
தமிழை ஆண்டாள் - வைரமுத்து எழுதிய கட்டுரையில் ' யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டு கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்படுகின்ற...' என்பதாக ஒரு பத்தி. <br />
<br />
மரக்கால் - சோலை சுந்தரபெருமாள் எழுதிய ஒரு வரலாற்று நாவல். இந்நாவலுக்கு அவர் எழுதிய முன்னுரையில்<br />
' களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமணர்களிடமிருந்து பிரமதேயங்களும் பட்டமங்களங்களும் பறிக்கப்பட்டன. பிறகு ஆட்சிக்கு வந்த பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வேள்விக்குடி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. வேதம் என்பது ஸ்மிருதியைக் குறிக்கிறது. ஸ்மிருதி என்பது அருவவழிபாடு. நெருப்பில் ஆகிருதிப் பெய்து கடவுளை வழிபடுவது. கடவுளுக்கும் மனிதனுக்குமான சாதனம் நெருப்பு. இந்த நெருப்பிற்குப் பயன்படும் ஓமகுண்டலம் யக்ஞம்...<br />
<br />
இச்சொல் குறித்து தேடுகையில் ரிக் வேதகால சொல்லாக இருக்கிறது. இச்சொல்லுக்கு வேள்வி, தியாகம், யாகம் என பல பொருள்கள் தருகின்றன. ஆங்கிலத்தில் sacrifice. தமிழில் நரபலி என்றும் சொல்லலாம்.
<br />
- தொடரும்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvaQVbgSJOpi4U1JXwyQ6ZohFr3ybrSnO_TXwoRaLhloIwm0tDiozxzDatqJSlGlzb6GeBfjw-9rkIeovaMYkUj220FCqBgi_PoNSV-3Tara3o58ql1fPLFCz9j0mDgeRFZOUtIt_xf6c/s1600/Screenshot_2018-12-17-12-41-21.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="540" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvaQVbgSJOpi4U1JXwyQ6ZohFr3ybrSnO_TXwoRaLhloIwm0tDiozxzDatqJSlGlzb6GeBfjw-9rkIeovaMYkUj220FCqBgi_PoNSV-3Tara3o58ql1fPLFCz9j0mDgeRFZOUtIt_xf6c/s400/Screenshot_2018-12-17-12-41-21.png" width="225" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல், பழைய தேடல் -18</div>
<br />
காலதர்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
மனத்தின் தோற்றம் - பேரா.சுந்தர சண்முகனார் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் 'தொழுது பேசுதல்' என்றொரு தலைப்பு. அதற்கு மணிமேகலை காப்பியத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். எட்டி குமரன் என்பவன் யாழ் வாசிக்கிறான். அவன் வாசிக்கும் யாழின் சுதி மாறுகிறது. ஏன் மாறுகிறது, என உதயக்குமாரன் கேட்க , எட்டிகுமரன் உதயக்குமாரனை தொழுது வணங்கிவிட்டு சொல்கிறான். ' மணிமேகலை நடந்து செல்வது காலதர் வழியில் தெரிந்தது. அவளைப் பார்த்ததும் சுதி மாறிவிட்டது'.<br />
<br />
அம்மாவின் ரகசியம் - சுநேத்ரா ராஜகருணாநாயக, ஆங்கிலம், சிங்களம் இரு மொழிகளில் எழுதப்பட்ட குறுநாவல். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் எம்.ரிஷான் ஷெரிப். இந்நாவலின் களம் ஒரு சிற்றூர். அவ்வூரை சிங்கள இராணுவ படையினர் சுற்றி வளைக்கிறார்கள். அதற்குள் ஒரு ஏழை சிங்களக் குடும்பமும் அடங்குகிறது. அப்படையினரிடம் அக்குடும்பம் படும்பாடுதான் கதை. கதையின் நாயகி முத்துலதா, மனதிற்குள் நீண்ட நாள் வைத்திருந்த ஒரு ரகசியத்தை கடைசியில் அவிழ்க்கிறாள். <br />
<br />
<br />
இந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கு முன்னுரை தந்திருப்பவர் அம்பை. ' சுநேத்ராவின் படைப்புலகை எட்டிப்பார்க்க அமைந்த ஒரு காலதர்தான் இந்த மொழிப்பெயர்ப்பு. இதன்பின் அப்படைப்புலகின் பெருஞ்சன்னல்கள், கதவுகள் திறக்கப்படும் வாய்ப்புகள் உண்டு என்று கட்டியம் கூறும் மொழியாக்கக் காலதர் ..' என்பதாக ஓரிடம். <br />
<br />
அது என்ன, காலதர்...?.<br />
<br />
இச்சொல்லை தமிழ்க்கவிதைகளில் நிறைய காண முடிகிறது. கவிஞர்கள், காதலர் என்பதை அவசரத்தில் காலதர் என மாற்றி எழுதிவிடும் சொல்லாக அது இருக்கிறது. <br />
<br />
கவிஞர் மகுடேசுவரன், இச்சொல்லை பல இடங்களில் விரும்பி பயன்படுத்தியிருக்கிறார். இவர் எழுதித் தொகுத்த ஒரு கட்டுரை நூலின் தலைப்பு ' காலதர் '.<br />
<br />
'மான்கள் காலதர் மாளிகை ' என்கிறது சிலப்பதிகாரம். மானின் கண்களைப் போல வழிகள் கொண்ட மாளிகை என்பது அதன் பொருள்.<br />
<br />
காலதர் அருகே காதலர் - என்கிறது ஒரு கவிதை. காலதர், ஒரு<br />
<br />
எழுத்தாளரின் புனைப்பெயராகவும் கூட இருக்கிறது.<br />
<br />
சரி, காலதர் என்பது என்ன...?<br />
<br />
அகநானூறில் கானமானதர் என்றொரு சொல் உண்டு. காட்டு விலங்குகள் செல்லும் வழி என்று அதற்குப் பொருள். இதே போன்று, கல்லதர் - கல்லினாலான வழி. <br />
<br />
ஆக்கம் அதர் வினாய் என்கிறது ஒரு குறள். <br />
<br />
கால் என்பதற்கு செல்லுதல், ஓர் உறுப்பு, காலம், காற்று என பல பொருள் உண்டு. <br />
<br />
<br />
இங்கு ,<br />
காலதர் என்பதை கால் ( காற்று ), அதர் ( வழி ) எனப் பிரித்து பொருள் கொள்ளலாம். அதாவது காற்று வரும் வழி.<br />
<br />
ஆர்.சி.சம்பத், தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் என்கிற நூலில் போர்த்துகீசியர்கள் வருகைக்கு முன்பு வரைக்கும் இச்சொல் புழக்கத்திலிருந்தாக சொல்கிறார். <br />
<br />
இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் சாளரம், சாலேகம்,ஜன்னல் என பல பொருள் தருகின்றன.<br />
<br />
ரா.பி.சேதுப்பிள்ளை 'தமிழ்விருந்து' என்கிற நூலில் ஜன்னல் என்பது போர்த்துகீசிய சொல் என்கிறார். <br />
<br />
கணினி உலகிற்கு, 2014 சூலை 29, மிக முக்கியமான நாள். அன்றைய தினம்தான் விண்டோசு 7,8,8.1 ஆகிய மென்பொருளுக்கு மாற்றாக விண்டோசு 10 அறிமுகம் செய்யப்பட்டது. இதை இணையத்தமிழ் 'காலதர் 10 ' என தமிழ்படுத்தியது. <br />
<br />
<br />
இதிலிருந்து நாமொரு முடிவிற்கு வரலாம். இனி ஜன்னல், சன்னல், விண்டோ, சாளரம் என்பதை காலதர் எனச் சொல்லி பழகலாம்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7N7zlxW7N8Ya2uvEJ2XyiZYfaMUve5Zt2K9HCt4xAy0Hop6if_j4rjR2kGz0UByzqkkD-Sn4ZNsICoCn7re2VKPBStzbBDB8OnU59cMyypSUOE3t4BlwnTxfQ2FAPk2RulEz8ZGD1T7s/s1600/20181202_065247-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1125" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7N7zlxW7N8Ya2uvEJ2XyiZYfaMUve5Zt2K9HCt4xAy0Hop6if_j4rjR2kGz0UByzqkkD-Sn4ZNsICoCn7re2VKPBStzbBDB8OnU59cMyypSUOE3t4BlwnTxfQ2FAPk2RulEz8ZGD1T7s/s320/20181202_065247-1.jpg" width="224" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivnzPRSr3gDl2AJ1DMCh1ZjhahggE6BZU1jaJxL_Eb6seYpBwf8Lcfj0vKfil1lbOV4U2Mm4AxeuEmXupGsYj376dqKRhLkwb2Np1fV2OF9GSt4aDsxnyqPtmNaYBPs5Gss07FDQtrcqc/s1600/20181125_073813-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1166" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivnzPRSr3gDl2AJ1DMCh1ZjhahggE6BZU1jaJxL_Eb6seYpBwf8Lcfj0vKfil1lbOV4U2Mm4AxeuEmXupGsYj376dqKRhLkwb2Np1fV2OF9GSt4aDsxnyqPtmNaYBPs5Gss07FDQtrcqc/s320/20181125_073813-1.jpg" width="233" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsSQz1x877-A4xiy3CeI_6kNqOmkQd-KYEJBb9e0uRhDeu1Mpt-3cI6m_4jvgZcbhRY2mVFNYlPT_UY8HzT6epAOeGmfvWVtjpA0NzvEGHCZv-l21aAs3WGRdJFKef8GlI3lAoe4Y6J8A/s1600/20181125_073829-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="986" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsSQz1x877-A4xiy3CeI_6kNqOmkQd-KYEJBb9e0uRhDeu1Mpt-3cI6m_4jvgZcbhRY2mVFNYlPT_UY8HzT6epAOeGmfvWVtjpA0NzvEGHCZv-l21aAs3WGRdJFKef8GlI3lAoe4Y6J8A/s320/20181125_073829-1.jpg" width="197" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
25.11.2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 17</div>
<br />
காந்தர்வம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
திருமண வயது - ஆண்களுக்கு அநியாயம் நடக்கிறதா? யுவகிருஷ்ணா எழுதிய ஒரு கட்டுரை. ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது உச்சநீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவை மையமாகக் கொண்ட கட்டுரை இது.<br />
<br />
1927 ஆம் ஆண்டு ராய்சாகிப் ஹர்பிலாஸ் சர்தா, குழந்தைத் திருமணத் தடுப்பு மசோதாவை பிரிட்டிஷ் இந்திய மத்திய சட்டமன்றத்தில் முன் வைத்தார். அதன்படி பெண்ணுக்கு திருமண வயது 14,ஆணுக்கு 18. இதுவே பிறகு 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் மூலம் 18 மற்றும் 21 என்றானது.<br />
<br />
இக்கட்டுரையில் இப்படியாக ஓரிடம், காதல், கத்தரிக்காய், காந்தர்வ விவாகம் போன்ற அடாத செயல்பாடுகளால் குடும்ப மானம் என்கிற வேலியைக் காக்கும் பொருட்டு குழந்தைத் திருமணங்கள் நடந்தேறின.<br />
<br />
அது என்னதாம் காந்தர்வம்?<br />
<br />
திருத்தக்கத்தேவர் இயற்றிய சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களாலானது. இலம்பகம் என்பதற்கு மாலை என்று பொருள். பதின்மூன்றில் ஒன்று காந்தருவதத்தையார் இலம்பகம்.<br />
<br />
சாவி எழுதிய ஆப்பிள் பசி என்கிற நாவலில் இச்சொல் இடம் பெறுகிறது. டெல்லி தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் காந்தர்வ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.<br />
<br />
பாரதி இயற்றிய ஞானரதத்தில் ' காந்தர்வ பாஷை ' என்பதாக ஓரிடம் வருகிறது. கும்ப ராசி, தனுசு நட்சத்திரத்தை காந்தர்வம் என்கிறது ஜோதிடம்.<br />
<br />
காந்தர்வம் என்பது வேதச்சொல். நான்கு வகை வேதங்களில் சாம வேதத்தின் உபவேதம் காந்தர்வம். அதாவது நுண் கலைகள் குறித்த அறிவியல்.<br />
<br />
பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை - எட்டுவகை திருமணங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறது. அதில் ஒன்று காந்தர்வம். இதையே ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியும் பட்டியலிடுகிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் புரிந்து, மணம் செய்து கொள்வது. <br />
<br />
பிலிகணீயம் என்கிற வட நூலினைத் தழுவி பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிக்கவி என்றொரு இலக்கியம் படைத்தார். பிறகு அதுவே அவருக்கு புரட்சிக்கவிஞர் என அடைமொழிக்கு காரணமும் ஆனது. இதில் அமுதவல்லி என்கிற அரசனின் மகளுக்கு, உதாரன் என்கிற இளைஞன் மீது காதல் வர, இருவரும் காந்தர்வ மணம் புரிய போராடுகிறார்கள். அரசனின் மகளை ஒரு சாமானியன் மணம் முடிப்பதா..? அவனுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனால் மக்களிடம் புரட்சி வெடிக்க மன்னராட்சி , மக்களாட்சியாக மலர்கிறது. தமிழ்நாட்டில் சங்கர், இளவரசன்கள் படுகொலை செய்யப்பட காரணம் காந்தர்வமே. ஆனால் புரட்சியைத்தான் காணோம்.<br />
<br />
காந்த துருவம் எதிர் துருவத்தை கவர்ந்திழுப்பதைப் போல இரு பாலினங்கள் ஒன்றையொன்று கவர்ந்துகொள்வது காந்தர்வம்.<br />
காந்தர்வ திருமணத்தை பெரியார் சாதி மறுப்பு திருமணமாக நடத்தி வைத்தார்.<br />
<br />
காந்தர்வம் குறித்து சங்கப்பாடல்களில் தேடுகையில் அகப்பாடல்கள் களவு, களவொழுக்கம் என்கின்றன. இனி நாம் அப்படியே சொல்லலாமே....?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் -16</div>
<br />
சம்பாசனை<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
எங்கே போகிறோம் ? கே.எஸ்.சுதாகர் எழுதிய ஈழ சிறுகதை. <br />
செல்வராசா, சந்திரன் இருவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்கிறார்கள். சந்திரன் துபாயில் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து நாடு திரும்பியவன். விதவையான தங்கைக்கு வரன் தேடுகையில் சகபயணி செல்வராசாவைப் பார்க்கிறான். வெண்முடி தரித்த வயது. அவனுக்கே தங்கையை முடித்துவிடலாமென நினைக்கிறான். இதற்கிடையில் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கும் கீழே ஒருவர் வாழை இலைக்கட்டை வைத்துவிட்டு செல்கிறார். அதற்குள் புலிகளின் இலட்சணையுடன் கூடிய நோட்டிஸ் இருக்கிறது. அது சிங்கள சிப்பாய்களின் பார்வைக்கு வர, நோட்டிஸ் வைத்தவர்களைத் தேடுகிறார்கள். பேருந்திற்குளிருந்த ஆறு தமிழக பயணிகளைக் கைது செய்து வதைக்கிறார்கள். இதை யார் வைத்ததென சொல்லவில்லையென்றால் ஆறு பேரையும் சுடுவேன் என்கிறார்கள். ஐந்து பேர்களைக் காப்பாற்ற சந்திரன் செய்யாத ஒன்றைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறான்.<br />
<br />
இக்கதையில் செல்வராசா, சந்திரன் இருவரும் உரையாடுகிறார்கள். ' உங்களுடைய பிள்ளையா, எதுவரை போறீங்க?' ' ஆச்சிக்கு சுகமில்லை' . சந்திரனின் பதில் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சம்பாசனை வாழைக்குருத்து போல் மளமளவென தொடர்ந்தது. <br />
<br />
அது என்ன சம்பாசனை?<br />
<br />
சிங்கப்பூர் அப்பொழுது மலேயா நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1888 ஆம் ஆண்டு மகுதூம் சாய்பு , 'சிங்கை நேசன்' என்றொரு நாளிதழைத் துவங்கினார். <br />
அதில் வாரம் ஒரு சிறுகதை எழுதினார். இக்கதைகளே சிங்கைத் தமிழின் முதல் சிறுகதை முயற்சி என்கிறார்கள். இக்கதைகளை எழுத சாய்பு பயன்படுத்திய புனைப்பெயர் ' வினோத சம்பாசனை '. <br />
<br />
வ.ரா எழுதிய ஒரு நூல் 'சுவர்கத்தில் சம்பாசனை'<br />
<br />
ஜெ'வின் உடைத்தேர்வுகள் அவரது ஆழ்மனதின் வெளிப்பாடா ? திசம்பர் 09, 2016 நாளிட்ட தினமணியில் கார்த்திகா வாசுதேவன் ஒரு கட்டுரை எழுதினார். ஜெயலலிதா உடை தேர்விற்கும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அக்கட்டுரை. ' நேற்று என் வீட்டருகே இருந்த குடியிருப்பு பெண்களுக்கிடையே நிகழ்ந்த சம்பாசனையே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது' என்கிறார் அவர்.<br />
<br />
சம் என்கிற உரிச்சொல்லுடன் பாசனை என்கிற நிலைச்சொல் இணைந்து உருவாகும் சொல்லாக சம்பாசனை இருக்கிறது. சம் என்பதற்கு கலப்பு , கூட்டு , கூட, பிறப்பு எனப் பொருளிருக்கிறது. இரு வேறின இனங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மநு சாஸ்திரம் சம்கரர் என்கிற சாதியின் கீழ் வகைப்படுத்தியிருக்கிறது என்பது இது தொடர்பான கூடுதல் செய்தி . <br />
<br />
பாசனை குறித்து தேடுகையில் சோலை சுந்தரபெருமாள் எழுதிய பெருந்திணை நாவலில் ' இவரோட யோசனை பாசனை இல்லாமல் வேலை செய்தது இல்லை ' என்பதாக ஓரிடம் வருகிறது. <br />
<br />
உஜ்ஜைன் நாட்டு மன்னர் சூத்திரகன், வடமொழியில் ' மிருச்சகடிகம்' என்றொரு நாடக நூலை இயற்றினார். அதை பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ' மண்ணியல் சிறுதேர் ' என தமிழில் மொழிப்பெயர்த்தார். இதை 'மண்ணியல் சிறு தேர் - ஒரு மதிப்பீடு' என மீரா அவர்கள் இந்நூலினை மதிப்பாய்வு செய்தார். இந்த ஆய்வு நூலுக்கு முன்னுரை எழுதிய பேரா.இராமாநுசன் ' இந்நூலுக்கு பாசனை ஆசானாக்குவது தகுமா? ' என்கிற கேள்விக்கு விடை தேடுவதாக மீராவின் ஆய்வு இருக்கிறது என்கிறார். அதாவது 'இந்நாடகத்தின் உரையாடலே வாசகனுக்கான ஆசான்'. <br />
<br />
இதைக்கொண்டு பார்க்கையில் சம் + பாசனை என்பதை கலந்துரையாடுதல் எனப் பொருள் கொள்வோமே<br />
<br />
- தொடரும்...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1XeYCf-kZo8jKzdq00puMXpoUb_rbiuv_ccewCt6s0dwJvOg8ceNtBW4V9LOJKPMgHURF8W7b52m3hdcpns7jm485Z86XjsFbmDGDACswz2FBqJNmFM8PJT8jyQyodVAkgHcKxwVBigo/s1600/20181123_080340-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1078" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1XeYCf-kZo8jKzdq00puMXpoUb_rbiuv_ccewCt6s0dwJvOg8ceNtBW4V9LOJKPMgHURF8W7b52m3hdcpns7jm485Z86XjsFbmDGDACswz2FBqJNmFM8PJT8jyQyodVAkgHcKxwVBigo/s320/20181123_080340-1.jpg" width="215" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3FCz1VGqErlCjUroD-69Qbf9anANgkBIAeNvqffVd4j2I6mvp93ufCkdltIP2AKsvj_YKzox0LG5OwyEG8fdVWUn5Fk9AuVz9HHR9PNvAJWk7IcfKF0isje7vKMqo_XRCcnPaiYgB7nw/s1600/20181123_080427-1-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1096" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3FCz1VGqErlCjUroD-69Qbf9anANgkBIAeNvqffVd4j2I6mvp93ufCkdltIP2AKsvj_YKzox0LG5OwyEG8fdVWUn5Fk9AuVz9HHR9PNvAJWk7IcfKF0isje7vKMqo_XRCcnPaiYgB7nw/s320/20181123_080427-1-1.jpg" width="219" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
-18.11.2018 தீக்கதிரில்...</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் - 15</div>
<br />
வகிபாகம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
'தமிழகத்தில் புரத வண்ணார்கள்' - த.தனஞ்செயன் எழுதிய ஒர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள் ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக் (கி.பி 6 - 12 ) காலத்திற்கு<br />
முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ; செய்யும் தொழிலைக் கொண்டு சாதி, சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் பேரா.வீ.அரசு. ' தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ' குடித்தொழில் பெறும் வகிபாகம் ' . <br />
<br />
அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ' ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் " சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது ". <br />
<br />
இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய நாளிதழ் 'வீரகேசரி'. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ' கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் '. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் 'வகிபாகம்' ?<br />
<br />
பேரா.கார்த்திகேசு சிவதம்பி - தமிழ்நல்லுலகு அறிந்த அறிஞர். இவர் பத்திரிகைத் துறையில் பயன்பாட்டிலிருக்கும்<br />
பொருத்தமற்ற சில சொற்களைத் திருத்தி பயன்பாட்டிற்கேற்ப புதிய சொற்களாகப் பயன்படுத்தத் துவங்கினார். அதன்படி உதவி ஆசிரியர் என்பதை செம்மைப்படுத்துனர் என மாற்றினார். பிரதம ஆசிரியர் எழுதும் அல்லது தரும் கட்டுரைகளைத் திருத்தம் செய்து செம்மைப்படுத்துவதால் அதற்கு அப்படியொரு பெயர். அதேப்போன்று காப்பி எடிட்டிங் என்பதை செம்மைப்படுத்துதல் என்றார். அந்த வரிசையில் அவர் பயன்படுத்திய ஒரு சொல்தான் வகிபாகம்.<br />
<br />
கொழும்பு இதழியல் கல்லூரி - ஊடகத்துறை தொடர்பான ஒரு நூலுக்கு அவர் எழுதிய ஒர் அணிந்துரையில் 'ஏதேனும் ஒரு துறையில் யாரேனும் ஒருவர் முக்கிய பங்களிப்பு செய்தால் அல்லது வரலாற்று ரீதியாக ஒன்றை குறிப்பிடுவதாக இருந்தால் அதனை வகிபாகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் ' என்றார். <br />
<br />
இச்சொல் குறித்து தேடுகையில் தற்கால தமிழ் அகராதிகளும், ஈழத்தமிழ் அகராதிகளும் இச்சொல்லை சொற்களஞ்சியத்தில் சேர்க்கவில்லை எனத் தெரியவருகிறது. ஆனால் ஆங்கில அகராதி இச்சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. Role allocation - வகிபாகம் ஒதுக்குதல்<br />
Role of environment - சூழல் வகிபாகம்...இப்படியாக. <br />
இதிலிருந்து வகிபாகம் என்பதை இப்படியாகப் பொருள் கொள்ளலாம். ஒரு பாத்திரமாக பங்கு வகித்தல்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf7nshGfeYHjShtcuj4cBAiQ10lkfk02SA1MX3Llxi5JgkPOgJwxjv7wlaIQDeGR_b10K7AIYWQg76IAZUjwjQ4kWVaLRzDOPMASn5YUSoQtGTHBXL-oT6YzuC-5yMqJYHVT-gN70dEac/s1600/20181111_070648-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="971" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf7nshGfeYHjShtcuj4cBAiQ10lkfk02SA1MX3Llxi5JgkPOgJwxjv7wlaIQDeGR_b10K7AIYWQg76IAZUjwjQ4kWVaLRzDOPMASn5YUSoQtGTHBXL-oT6YzuC-5yMqJYHVT-gN70dEac/s320/20181111_070648-1.jpg" width="194" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல்- பழைய தேடல் -14</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஏகன்</div>
<br />
சிறுபான்மையினரின் பாதுகாவலர்களே பெரும்பான்மையினர் - முனைவர் செபாஸ்டியன் பால் அக்டோபர் -10, தீக்கதிரில் எழுதிய கட்டுரை இது. மொழிபெயர்ப்பு கே.சதாசிவன். <br />
<br />
‘ஒரு மனிதன் ஏகனாக இருப்பது நன்றல்ல. அவனுக்குப் பொருத்தமான இணையை நான் கொடுப்பேன் ’ (ஆதியாகமம்) வாசகத்தோடு கட்டுரை துவங்குகிறது. குற்றத்தண்டனைச் சட்டம் 377 பற்றிய இக்கட்டுரையில் ‘ தன்பாலின உறவு அறநெறி அடிப்படையில் சரியானதோ, ஏற்றுக்கொள்ளத் தகுந்ததாகவோ உள்ளதல்ல’ என்று கேரளா கத்தோலிக்க ஆயர்கள் சபையும் ;அதையொற்றியே ஜமா - அத்தே - இஸ்லாமி அமைப்பும் கருத்துத்தெரிவிக்கின்றன. பிரான்சிசின் திருச்சபை ‘ பாலியல் உறவுகளில் உள்ள மாறுபட்ட தன்மைகளை பாவமாகக் கருதவில்லை' என்றும் இதுகுறித்த மற்றொரு கேள்விக்கு ‘ அவர்களைத் தண்டிக்க நான் யார்?’ என்கிறது. தன்பாலின உறவு செல்லும் என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்பட வேண்டும். தன்பாலின உறவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவில்லை என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. <br />
<br />
சரி, ஏகன் என்பது என்ன...?<br />
<br />
சிவபுராணம் ‘ ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்கிறது.<br />
ஏகன் வருவானா? ஞானம் சஞ்சிகையில் எஸ்.முத்துமீரான் எழுதிய ஒரு சிறுகதை. <br />
<br />
'பெர்டிடுர்கே ( FERDYDURKE )' என்றொரு நாவல். போலந்து நாட்டு 'விடோல்டு கோம்ப்ரோவிச் ( Witold Gombroqicz )' 1937 ஆம் ஆண்டு எழுதியது. இந்நாவலின் படி, 30 வயது வாலிபன் திடீரென பள்ளி வயது மாணவனாக உருவம் மாற பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அங்கு அவன் வயதுடைய மாணவர்களிடம் படும்பாடுதான் கதை. இக்கதையை தழுவி ஹாலிவுட் படம் எடுத்தார்கள். படத்தின் பெயர் 'நெவர் பீன் கிஸ்டு'. வாலிப பெண் மாணவப் பருவமாக மாறி பத்திரிகை பெண்ணாக பள்ளிக்குள் நுழைகிறாள். இதே கதையை 'மெயின் ஹீன் னா' என்று ஷாருகானை வைத்து இந்தியில் எடுத்தார்கள். தமிழிலும் எடுக்கப்பட்டது. கதாநாயகன் அஜித். படத்தின் பெயர் ஏகன்.<br />
<br />
அன்றைய எகிப்திய நாட்டில் ஏகநாதன் (Akhenaton ) என்றொரு மன்னன் இருந்தான். அவனது ஒரே கடவுள் ஏதேன். இச்சொல்தான் இவ்வாறாக மறுவுகிறது ஏதன் - ஏகன் - ஏக் - ஏகம் - ஒரு - ஒருமை - ஒரே இறைவன். தமிழும் இத்தாலியும் - மத வழிபாடுகளில் தொடர்புடைய சொற்கள் என சொற்களை ஆய்வு செய்திருக்கும் தமிழ்செல்வா, ஏகன் என்கிற சொல்லின் மூலம் தமிழின் 'ஏகத்துவம்' என்கிறார்.<br />
<br />
இதன் தொடர்புடைய சொற்களாக ஏகம், ஏகாதிபதி, ஏகாதி , ஏகபத்தினிவிரதம், ஏகபாதம் ...என நிறைய சொல்லலாம். <br />
<br />
ஏகன் சொல் குறித்து தேடுகையில் அபிதான சிந்தாமணி இரேயன் குமரன் என்கிறது. தமிழ் அகராதிகள் - ஒருவன், இறைவன், இணையற்றவன், சிறப்புடையவன்,..என்கின்றன. <br />
<br />
கட்டுரையின் துவக்க வரியிலிருந்து அதன் பொருளைத் தேடுகையில் ஏகன் என்பதை 'தனி ஒருவன்' எனப் பொருள் கொள்ளலாம்.<br />
-நவம்பர் 04, 2018<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3yU_KtSdhTDE0GmW3Rp_Hqvnenpq6URfR2QEZSLnsK0sdMW1YUucJ5uZWBpHbURRVEJrviVlLl93vhdZ9ph2kqltCDsUOIA1QTaVn-YUrP2z1qmcgHdFnv81Ftz-0MifRMELhQ-sOk0k/s1600/20181104_075954-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1049" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3yU_KtSdhTDE0GmW3Rp_Hqvnenpq6URfR2QEZSLnsK0sdMW1YUucJ5uZWBpHbURRVEJrviVlLl93vhdZ9ph2kqltCDsUOIA1QTaVn-YUrP2z1qmcgHdFnv81Ftz-0MifRMELhQ-sOk0k/s640/20181104_075954-1.jpg" width="418" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjdADwuNt0qeAoNZAO7gG1KCq6iK90D3HnJkfDYRp5ud_Ihd4fISaqzPiH496ivle4G7OQfPnzNtJtrsmmCFKMgHfJgdD7RZEjWivIGsPIIwHw5HqT2r-BdUBlqXi4ksmugOtScvGHpAo/s1600/20181104_080225-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="941" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjdADwuNt0qeAoNZAO7gG1KCq6iK90D3HnJkfDYRp5ud_Ihd4fISaqzPiH496ivle4G7OQfPnzNtJtrsmmCFKMgHfJgdD7RZEjWivIGsPIIwHw5HqT2r-BdUBlqXi4ksmugOtScvGHpAo/s640/20181104_080225-1.jpg" width="376" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் - பழைய தேடல் 13</div>
<br />
பிலாக்கணம்<br />
<br />
கு. சின்னப்ப பாரதி எழுதிய நாவல்களில் 'தாகம்' மிக முக்கியமானது. நாவலின் மைய பாத்திரம் மாரப்பன். இவர் வளர்க்கும் எருமை , கன்று ஈனப்போவது தெரிந்து நடு சாமத்தில் கை பக்குவ கிழவரை அழைத்து வருகிறார். எருமை கன்று ஈனும் வலியை நாவலாசிரியர் அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதற்கிடையில் நடு சாமத்தின் காட்சி இவ்வாறு விரியும். ' ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தது. எங்கும் நிசப்தம். இடையிடையே மனிதர்களின் இருமல் சத்தமும் மாடுகளின் அசை போடும் அரவமும், எதையாவது கண்டுவிட்டுக் குரைக்கும் நாய்களின் குரைப்பும், வறண்ட மண்ணில் குழி தோண்டிப் படுத்திருக்கும் தவளைகளின் செவியைப் பிளக்கும் பிலாக்கணமும் கேட்டுக்கொண்டிருந்தன'.<br />
<br />
அது என்னது பிலாக்கணம்? <br />
<br />
ரவிச்சந்திரன் என்கிற கவிஞர் 'அசல் தேடும் நகலின் பிலாக்கணம்' என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் அவர் அடிக்கடி ரோம் நகரிலுள்ள மரியா டெஜிலி ஆஞ்சியோலி என்கிற தேவாலயத்திற்கு சென்று வருபவராக இருந்தார். காரணம் அங்கு அவரது ஆழ்மனதை சாந்தப்படுத்தும் ஓவியமொன்று இருந்தது. இயேசுவின் பிலாக்கணம் என்கிற ஓவியம் அது. இதைத் தீட்டியவர் பெர்னார்டினோவ் லியூனி. இதுக்குறித்து பேரா.கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஒரு கட்டுரை பேசுகிறது.<br />
<br />
எஸ்.பொன்னுத்துரை 'குழி ' என்கிற சிறுகதையை மனிதன் பிலாக்கணம் வைத்துக்கொண்டே வாழ்கிறான் என முடித்திருப்பார். <br />
யுவன் சந்திரசேகரின் ஒரு சிறுகதை 'முடிவற்று நீளும் கோடை'. இக்கதையில் சமகால வயதுடைய இரு வயோதீக பாடகர்களின் கதையுடன்; கதைசொல்லி அவர் ஊரில் சிறந்த பாடகராக இருக்கும் பானு அக்காள் என்கிற பாத்திரத்தின் குரல் வளத்தைப் பேசியிருப்பார். துக்கவீட்டில் பானு இராமாயணம் பாடுகையில் ' அந்த தெய்வீகமான பிலாக்கணம் எப்படா முடியும் எனக்காத்திருப்போம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பானு அக்காள் இறந்து போக அந்த கானமும் இறந்து போனது ' என்பதாக அக்கதை நீளும்.<br />
<br />
புதுமைப்பித்தன் ' எப்போதும் முடிவிலே இன்பம் ' என்கிற சிறுகதையில் ' ஓய், என் வீட்டு வாசலில் உட்கார்ந்து பிலாக்கணம் வைக்காதேயும் ' என்பதாக ஓரிடம் வரும். விலங்குகள் பேசிக்கொள்ளும் கதை இது.<br />
<br />
பேரா.மு.இளங்கோவன் 'தமிழில் ஒப்பாரி இலக்கியம் ' என்கிற ஆய்வு நூல் பிலாக்கணம் என்பது பிணக்கானம் என்பதன் திரிபு என்கிறார்.<br />
'கி.வ.ஜா பதில்கள் ' என்கிற நூலில் இப்படியாக ஒரு கேள்வி - பதில் . பிலாக்கணம் எப்படி வந்தது?. அதற்கான பதில், பிணக்கானம் என்பதே பிலாக்கணம் என்றானது. <br />
<br />
இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் நர்மதா அகராதி துக்க வீட்டில் பெண்கள் பாடும் பாடல் என்கிறது. ஆங்கிலத்தில் lementation.<br />
நாம் ஒப்பாரி எனப் பொருள் கொள்ளலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தீக்கதிர் - வண்ணக்கதிர் அக்டோ28, 2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjnWaB4xV5V0G9JcgW3FTB0oIZBxPxD5LRfgTBhgZs6B0wKGz4WE9Vr1KXs_NCIfI5BMogfli4RWd9k1_bAWRdrdNfHoKFXb4jZPzyjw2eWEU2duNbI5S9E6hovIkb0tJhWcR7xsv5uRA/s1600/20181028_065955-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="550" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjnWaB4xV5V0G9JcgW3FTB0oIZBxPxD5LRfgTBhgZs6B0wKGz4WE9Vr1KXs_NCIfI5BMogfli4RWd9k1_bAWRdrdNfHoKFXb4jZPzyjw2eWEU2duNbI5S9E6hovIkb0tJhWcR7xsv5uRA/s640/20181028_065955-1.jpg" width="218" /></a></div>
<br />
<br />
<br />
<br />
புதிய சொல் , பழைய தேடல் - 12<br />
<br />
தினவு<br />
<br />
அண்டனூர் சுரா<br />
<br />
வேள்வித் தீ, எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இந்நாவல் , சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை பின்னணி,நெசவு தொழிலின் நலிவு குறித்து பேசியிருக்கிறது. இந்நாவலின் நாயகன் கண்ணன் நெசவு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர உழைக்கிறவன். பணமே வாழ்க்கையெனக் கொண்ட உறவுகள், பணத்திற்காக அல்லாடும் மனைவி கௌசலை, பணம் உதவி செய்ய முன்வரும் ஹேமாவுடன் நெருங்கி மனைவியிடமிருந்து விலகும் கண்ணன்,...என நெசவுத்தொழில் சிக்கலுடன் உறவுச் சிக்கலையும் இந்நாவல் பேசியிருக்கிறது.<br />
<br />
நெசவு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் குதிக்கிறார்கள். இரு தொழிலாளர்கள் பேசிக் கொள்ளும்படியாக ஓரிடம் வருகிறது. ' இப்படி எல்லாரும் பொறுப்பில்லாமப் பேசிதான், காளை மாட்டுக்குத் தினவு கொடுத்து சண்டித்தனம் செய்யுது. சாட்டையைச் சொடுக்கி, ரெண்டு வச்சாத்தான், காளை மாட்டுக்கு ரோசம் பிறக்கும்!'<br />
<br />
இவ்விடத்தில் காளை மாடு என்பது ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பதைக் கொண்டு இந்நாவலின் காலத்தை நாம் கணித்துக்கொள்ளலாம். சரி, அது என்னதாம் தினவு ?<br />
<br />
வயிறு என்கிற சிறுகதையில் ஹரன் பிரசன்னா இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' மெல்ல எடுப்பான அவளது பல் மறைய அவள் உடலின் தினவு தெரிய ஆரம்பித்தது'. அப்படியென்றால் தினவு என்பது உடலுடன் தொடர்புடைய ஒரு சொல் என்பதாக ஒரு புரிதலுக்கு வரலாம். <br />
<br />
உயிர்த்தலம் என்றொரு சிறுகதை. ஆபிதீன் எழுதியது. அதில் இப்படியாக ஒரு வரி ' பசி போன்றதொரு தினவு ' இங்கு தினவு என்பது அரிப்பைக் குறிக்கிறது . நெஞ்சுக்கொம்பு என்கிற கதையில் ம.நவீன் இதே சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். <br />
<br />
இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் திவான் பஹதூர் ச.பவானந்தம் பிள்ளை தொகுத்த தற்கால தமிழ்ச்சொல் அகராதி , தினவு என்பதற்கு சொறி என்கிற ஒற்றைப் பொருளை மட்டுமே தந்துள்ளது. மேலும் சில அகராதிகள் அரிப்பு, அதீத உணர்ச்சி என்பதாக பொருள் தந்துள்ளன.<br />
<br />
'சொறிந்து தீர்வுறு தினவினர்' என்கிறது கம்பராமாயணம். <br />
<br />
வாசந்தி , இந்தியா டுடே இதழில் தினவு என்றொரு சிறுகதை எழுதினார். அக்கதை அன்றைக்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருந்தது. இக்கதை அன்றைய உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதியை முக்கிய பாத்திரமாக வைத்து பேசியிருந்தது. ' அவர் குருட்டு அதிர்ஷ்டத்தில் பதவிக்கு வந்தவரென்றும் மேலும்.....' என்பதாக கதை விரிய, இக்கதை அவரது புகழுக்கு களங்கத்தை விளைவிக்கிறதென எதிர்ப்புகள் கிளம்ப, வேறு வழியில்லாமல் எழுத்தாளரும் இதழாசிரியரும் அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள். <br />
<br />
' என்னைக் கொன்று விட்டார்கள்' என்கிற சிறுகதையில் கோ.புண்ணியவான் ' ஆண் தினவு நொறுங்கிவிட்டது ' என்பதாக ஒரு வரியைப் பயன்படுத்துகிறார். <br />
<br />
க்ரியா தற்கால தமிழ் அகராதி தினவு என்கிற சொல்லுக்கு மூன்று விதமான பொருளைத் தந்துள்ளன. 1. சொறி , அரிப்பு 2. தீவிர உந்துதல் 3. திமிர் .<br />
<br />
வேள்வித்தீ நாவலில் இடம்பெற்ற தினவு என்கிற சொல்லுக்கு திமிர் எனப் பொருள் கொள்ளலாமே...<br />
<br />
- தீக்கதிர் வண்ணக்கதிர் ( அக்டோ,20 -2018)<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuW3f4QGM1qt6wmff3xXubIDdmjMIo_EYVolO5WUCuBaPVxaWVu5Eze6Udfsh75P_CJIbdNUnKP8r_4c6xXJwgFknelUYDZsr8M2CDcsjBOjGxLJuv7bBMQX515PlwXDLmd70ZBHq8wag/s1600/20181021_071828-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="560" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuW3f4QGM1qt6wmff3xXubIDdmjMIo_EYVolO5WUCuBaPVxaWVu5Eze6Udfsh75P_CJIbdNUnKP8r_4c6xXJwgFknelUYDZsr8M2CDcsjBOjGxLJuv7bBMQX515PlwXDLmd70ZBHq8wag/s640/20181021_071828-1.jpg" width="220" /></a></div>
<br />
<br />
<br />
புதிய சொல் , பழைய தேடல் - 11<br />
<br />
சண்டமாருதம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
எஸ்.ராமகிருஷ்ணனின் ' முடிவற்ற சாலை' தொடரில் காந்தியெனும் நெருப்பு என்கிற தலைப்பில் காந்தியின் சமாதி குறித்தக் கட்டுரை வாசித்தேன். ராஜ்கோட்டிலுள்ள காந்தி சமாதி குறித்து பேசும் அவர் , காந்தியின் குரல் குறித்தும் எழுதியிருந்தார். அவரது உரைகள் இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. அவரது குரல் மென்மையானது. சண்டமாருதம் போல மேடையில் அவர் பேசவில்லை. ஒரு தந்தை மகனிடம் பேசுவதைப்போல, ஒரு தாய் பிள்ளைகளிடம் பேசுவது போல பேசுகிறார்....<br />
<br />
அது என்ன சண்டமாருதம் ? <br />
<br />
தமிழின் முதல் சிறுகதை என சொல்லக்கூடிய குளத்தங்கரை அரசமரம் ( வ.வே.சு ஐயர் ) கதையில் ஓரிடம் 'ஆகாயத்தில் சந்திரன்,நட்சத்திரங்கள் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் அந்தகாரம். பூமியெங்கும் கிடுகிடு என்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்க, காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக்கொண்டிருந்தது'.<br />
<br />
சேலம் வேலுச்சாமி கவிராயர் ' சண்டமாருதம் ' என்கிற பெயரில் ஒரு இதழ் நடத்தியிருக்கிறார். அதே பெயரில் மற்றொரு பத்திரிகை துவக்கப்பட்டச் செய்தியை 04.01.1931 தேதியிட்ட குடிஅரசு இதழ் அ.பொன்னம்பலனார் துவங்கும் சண்டமாருதம் வார பத்திரிகை என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. இதே பெயரில் சுயமரியாதைக்காரர்களுக்கான தினசரி இதழ் என்கிற அடைமொழியுடன் சொ.முருகப்பா ஒரு இதழ் துவங்கியிருக்கிறார். இந்த இதழில்தான் தேசிக விநாயகம் பிள்ளையின் முதல் கவிதை வெளியானதாக ஒரு குறிப்பு இருக்கிறது. 1940 களில் திரை ஒளி என்கிற பத்திரிகை திரைத்துறை சார்ந்த செய்தியைப் பேசுவதற்கென்று துவக்கப்பட்டது. இதற்கு போட்டியாக மாடர்ன் தியேட்டர்சார் சண்டமாருதம் என்கிற பெயரில் ஒரு பத்திரிகை துவங்க , அதன் ஆசிரியராக கண்ணதாசன் பொறுப்பேற்றிருக்கிறார். ஆக , சண்டமாருதம் என்கிற சொல் பத்திரிகைத்துறையில் அதிகம் புழங்கிய பெயராக இருந்திருக்கிறது என்பது உண்மை. <br />
<br />
புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை 'பயம்'. ஒரு நள்ளிரவில் ஒரு கிழவர் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார். ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வருகையில் கொலை செய்யப்பட்டவன் வருகிறானென துப்பாக்கி எடுத்து சுடும் மனப் பிராந்திக்கு ஆட்பட்டவனின் கதை இது. ' கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்து உறங்குகிறது. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?' வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சட சடா' என்று ஒரு இடி முழக்கம்...<br />
<br />
இதலிருந்து சண்டமாருதம் என்பது வானிலையுடன் தொடர்புடைய சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. <br />
<br />
இச்சொல் குறித்துத் தேடுகையில் சண்டம் + மாருதம் எனப் பிரித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சண்டம் என்பது கொடுமை அல்லது விரைவு என்றும் மாருதம் என்பது காற்று அல்லது வாயு எனவும் பொருள் கொள்ள வேண்டும். இதிலிருந்து பார்க்கையில் சண்டமாருதம் என்பது சூறாவளி, பெருங்காற்று எனலாம். நாம் ஊழிக்காற்று எனப் பொருள் கொள்வோமே...<br />
<br />
தீக்கதிர் வண்ணக்கதிர் அக்டோ 13, 2018<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiIXLclIsjN4-tUeTxoDNG8shlbPVwKVhx1CjmDKtaDnej-yILStr1vy-vJKfwkxKwoQDvMwwXQqeIs0sBW0c7EoXbuBMdmfqwufsGjr3BmaafLYcVpRabJT-CpnL0tWV6WbND9Qv1K68/s1600/Screenshot_2018-10-23-15-04-09-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="329" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiIXLclIsjN4-tUeTxoDNG8shlbPVwKVhx1CjmDKtaDnej-yILStr1vy-vJKfwkxKwoQDvMwwXQqeIs0sBW0c7EoXbuBMdmfqwufsGjr3BmaafLYcVpRabJT-CpnL0tWV6WbND9Qv1K68/s640/Screenshot_2018-10-23-15-04-09-1.png" width="218" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் ,பழைய தேடல் - 10</div>
<br />
துவாய்<br />
<br />
அண்டனூர் சுரா<br />
<br />
தளம் ஆகஸ்ட் இதழில் தவிப்பு என்றொரு சிறுகதை இலங்கை எழுத்தாளர் ச. இராகவன் எழுதியது. <br />
<br />
மலர்விழி குழந்தையாக இருக்கையில் சிங்கள ஆர்மிக்காரர்கள் தந்தையைக் கொன்று விடுகிறார்கள். தாய், தம்பியுடன் வாழும் மலர்விழி தாயின் ஆசைப்படி மேற்படிப்பு பயிலாமல் இயக்கத்தில் சேர்கிறாள். இயக்கத்திலிருந்த மாறனை கயல்விழி காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். மலர்விழி ஒரு குழந்தைக்கு தாயாகையில் இறுதி கட்டப் போர் மூழ்கிறது. அவளுக்கு இயக்கத்திடமிருந்து அழைப்பு வருகிறது. அவளுக்கு பதில் அவளுடைய கணவன் போருக்குச் செல்கிறான். அவள் வசிக்கும் பகுதி ஆர்மி வசம் வர அவள் குழந்தை, தாயுடன் இடம் பெயர்கிறாள். அவள் கண் முன்னாலேயே தாயின் தலை துண்டிக்கப்படுகிறது. நிலை குலையும் மலர்விழி குழந்தையைத் துவாயால் போர்த்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி அலைகிறாள். விடுதலைப்புலி இயக்கத்தில் ஒரு நாளேனும் இயங்கியவர்கள் சோதனை சாவடியில் பெயர் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு சிங்கள இராணுவம் அறிவிக்கிறது. அவள் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு பெயரைப் பதிவு செய்கிறாள். அதற்கு பிறகு அவள் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. <br />
<br />
ஈழத் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதையில் 'துவாய்' என்கிற சொல் வாசிக்கப் புதிதாக இருந்தது. புலம்பெயர் எழுத்தாளர் தாமரைச்செல்வி 'யாரோடு நோவோம்? ' என்கிற சிறுகதையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.<br />
'துவாயால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்'. அகரமுதல்வன் எழுதிய கோமா சக்தி என்கிற சிறுகதையில் ' ரோஸ் நிற துவாயில் ' என்பதாக ஓரிடம் வருகிறது. ஜீவகுமாரன், நவீன் போன்றவர்களின் கதைகளில் இச்சொல்லை நிறைய இடங்களில் காணமுடிகிறது.<br />
<br />
தமிழ் இலக்கணத்தில் , சீர் மோனை வகைகளில் கீழ்க்கதுவாய் , மேற்கதுவாய் என இரு வகைகள் இருக்கின்றன. வியட்நாம் நாட்டில் பின்ஹ் துவாய் என்றொரு மாகாணம் இருக்கிறது. <br />
<br />
சில நாட்களுக்கு முன்பு நுகே கோட நகரில் 'துவாய் மட்டும் அணிந்து பேருந்தில் ஏறிய வாலிபன்' என்கிற செய்தி பரபரப்பிற்கு உள்ளானது. அது என்னதாம் துவாய்?<br />
<br />
துண்டு , டவல் இரு சொற்களின் சேர்க்கை துவால் - துவாய் என மறுவி வந்திருப்பதாக மயூர்நாதன் ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும் அவர், கொழும்பில் வாழும் தமிழர்கள் பகுதியில் துண்டு என்றால் பெண்களை கேலி செய்யும் சொல்லாக இருக்கிறது. ஆகவே அவர்கள் முகம் துடைக்கும் துண்டை துவாய் எனப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார். துண்டு , துவாய் இரண்டும் ஒன்றுதான் என்றாலும் இவ்விரு சொற்களையும் பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க அவர்கள் தேடுவது துவாயைத் தான்.<br />
<br />
இதிலிருந்து நாமொரு முடிவுக்கு வர முடியும், துவாய் என்பது பெரிய துண்டு எனலாமே!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அக்டோ,7- 2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFoL_BVrpf_3hEGxRZBuj0rSwHD5CfaHqfZSAjRFxBQP3LU8fO-VGdWPCE5g0trBC3CjJWL9zHDOiWZxbli1EwDaGpD8b0HB4cuiV0cOjznnPypymLw_BeWQPPRhDwMCXUBEtMZ64AyrI/s1600/Screenshot_2018-10-23-15-13-24-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="919" data-original-width="335" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFoL_BVrpf_3hEGxRZBuj0rSwHD5CfaHqfZSAjRFxBQP3LU8fO-VGdWPCE5g0trBC3CjJWL9zHDOiWZxbli1EwDaGpD8b0HB4cuiV0cOjznnPypymLw_BeWQPPRhDwMCXUBEtMZ64AyrI/s640/Screenshot_2018-10-23-15-13-24-1.png" width="232" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
புதிய சொல் - பழைய தேடல் - 9<br />
<br />
வியர்த்தம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
தூக்கு மேடைக்குறிப்பு , ஜூலியஸ் பூசிக் ஆங்கில மொழியில் எழுதி தமிழில் எம்.இஸ்மத் பாஷா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல். கம்யூனிஸ்ட்டுகள் எனத் தெரிந்தாலே அவர்களை கைது செய்து விஷவாயு கொடுத்தும், துப்பாக்கியால் சுட்டும் அழித்தொழிப்பு செய்கிறது ஹிட்லரின் நாஜிக் படை. சிலரை விசாரணைக்காக அடைத்து வைக்கிறது. அப்படியாக அடைத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஜூலியஸ் பூசிக். அவர் சிறையிலிருக்கையில் இரகசியமாக எழுதிய குறிப்புகளின் தொகுப்பு இந்நூல்.<br />
<br />
நாஜிக் படையினர் , ஜூலியஸ் பூசிக்கை விசாரிக்கிறார்கள். ' உன் முயற்சியில் நீ தோற்றுவிட்டாய்'<br />
' நான் ஒருவன் மட்டுமே தோற்றிருக்கிறேன் '<br />
'பொதுவுடைமை வெற்றியில் இன்னுமா நம்பிக்கை வைத்திருக்கிறாய்?'<br />
' நிச்சயமாக'<br />
' உன் திட்டத்தில் மண் விழுந்து உன் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகி விட்டன'<br />
<br />
இப்படியாக நீள்கிறது விசாரணை.அது என்னதாம் 'வியர்த்தம்' ?<br />
<br />
புதுமைப்பித்தன், தான் மொழிபெயர்த்த 57 சிறுகதைகள் தொகுப்பில் மார்க்ஹீம் கதையில் இச்சொல்லைப் பயன்படுத்திருக்கிறார். <br />
<br />
தமிழ்நேசன் , வியர்த்தம் என்றொரு கதை எழுதியிருக்கிறார். பிரபல எழுத்தாளர் தேசிகனும் வளரும் எழுத்தாளர் சிட்டியும் கதாப்பாத்திரங்களாக இருந்து பேசும் கதை இது. இக்கதையில் தமிழின் முதல் நாவல் எது என்பது குறித்து விவாதம் நடக்கிறது. பிரதாப முதலியார் சரித்திரமே முதல் நாவல் என்று தேசிகன் சொல்ல சிட்டி அதை மறுக்கிறான். லண்டன் லைப்ரரியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சேஷய்யங்கார் எழுதிய அதியூர் அவதானி சரிதமே முதல் நாவல் என்கிறான். கதையின்படி, சிட்டி தொடர்ந்து எழுதுபவனாக இருக்கிறான். தேசிகன் அவனை வழி நடத்துகிறார். ஒரு கட்டத்தில் மூச்சு மூச்சென எழுதுவதெல்லாம் வியர்த்தம் என்கிற முடிவிற்கு வருகிறான் சிட்டி. அவனை அத்தகைய அதிருப்தியில் மீட்டெடுப்பதே பிற்பகுதி கதை.<br />
<br />
மனோன்மணீயம் நாடகத்தில் இச்சொல், ' முடிவிலாப் புரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல வியர்த்தம் ஆக்குவேன் ' எனப் பாடப்பட்டுள்ளது. <br />
<br />
தமிழின் முதல் நாவல் எனச் சொல்லப்படுகின்ற பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில், இத்தனை ஸ்திரீகளுடையவும், பாலகர்களுடையவும் பிராத்தனை வியர்த்தம் ஆகாதென்று நினைக்கிறேன்.<br />
<br />
'பாற்கடல்' பாடல் திரட்டில் ஒரு பாடல் இப்படியாக இருக்கிறது.<br />
<br />
' பேச்சின் வியர்த்தம் அறிந்தபின் பேச்சு கீச் கீச்சுதான் ' <br />
<br />
திவான் பஹதூர் ச. பவானந்தம்பிள்ளை தொகுத்த <br />
தற்கால தமிழ்ச்சொல்லகராதியில் இச்சொல்லுக்கான பொருள் ' பயனின்மை ' என்கிறது.நாம் ' வீண் 'என்று பொருள் கொள்ளலாம்.<br />
<br />
- அக்டோ,1 - 2018<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheHnSwJXfUfvHu7t58lBMVYgD_cPdOih_D2L9pKoTgcBmN9BuQBp3MtPnOlN7ZGBQWupoxZrA7AyoQaXd1_2hS4AwF_Hsg4nk4QU3tCXJUVi7f4yAtthYSi4owQ047IF9ECO-3WJOC3YQ/s1600/Screenshot_2018-10-23-15-22-41-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="342" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheHnSwJXfUfvHu7t58lBMVYgD_cPdOih_D2L9pKoTgcBmN9BuQBp3MtPnOlN7ZGBQWupoxZrA7AyoQaXd1_2hS4AwF_Hsg4nk4QU3tCXJUVi7f4yAtthYSi4owQ047IF9ECO-3WJOC3YQ/s640/Screenshot_2018-10-23-15-22-41-1.png" width="228" /></a> </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் பழைய தேடல் - 8</div>
<br />
ஐவரி<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
நடிகர் சிவக்குமார் ஆனந்த விகடனில் 'கருணாநிதி கும்பிட்ட கடவுள் ' என்கிற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் கலைஞர் உடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதிலொரு அனுபவம் : சிவக்குமார், தான் எழுதித் தொகுத்த ' ராஜபாட்டை' என்கிற கட்டுரை நூலுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டி கலைஞரிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கி வைத்துகொண்ட கலைஞர் இரண்டு நாட்கள் கழித்து போன் செய்து வீட்டுக்கு வரச்சொல்லி அவர் எழுதிய அணிந்துரையை சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அவர் எழுதிய அணிந்துரை இவ்வாறு இருந்தது. ' தம்பி சிவக்குமார், இந்த ' ராஜபாட்டை 'நூலைக்கொடுத்து ஒரு வரி அணிந்துரை எழுதித் தரச்சொன்னார். இதிலுள்ள அத்தனை வரிகளும் ஐவரி '.<br />
<br />
அது என்னதாம் ' ஐவரி '?<br />
<br />
ஆப்பிரிக்க கண்டத்தில் ஐவரி கோஸ்ட் என்றொரு நாடு இருக்கிறது. இந்நாடு சாக்லெட்டின் தாயகம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு பலரால் ஐவரி என்றே அழைக்கப்படுகிறது. சிவக்குமாரின் கட்டுரைகள் சாக்லெட் அளவிற்கு தித்திப்பாக இருக்கிறது என அந்த அணிந்துரையின் வாயிலாக சொல்ல வருகிறாரா கலைஞர்? <br />
<br />
மனு.எஸ்.பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் ஐவரி த்ரோன் என்றொரு சுயசரிதை நூல் எழுதினார். அந்நூலுக்குக்கூட 2017 ஆம் ஆண்டு யுவ புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இச்செய்தி ஐவரியுடன் தொடர்புடைய ஒன்று அவ்வளவே<br />
<br />
கலைஞர் சுட்டிக்காட்டிக்கும் ஐவரி பெயர்ச்சொல் தொடர்பானது அல்ல. இலக்க வடிவத்துடன் தொடர்புடைய காரணப் பெயரினாலான ஒன்று, அப்படியாகவே அவரது அணிந்துரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.<br />
<br />
திரைப்பட பாடல் ஆசிரியர் மதன்கார்க்கி ஏப்ரல் 22, காமதேனு இதழில் இதன் தொடர்பாக ஒரு பத்தி எழுதியிருக்கிறார்.வெண்பா, வஞ்சிப்பா, ஹைக்கூ வடிவம் போல ஐந்து வரிகளைக் கொண்ட ஒரு புதுக்கவிதை ஐவரி. லிமரிக்கூ என்றொரு கவி வடிவமுண்டு. அதே போன்ற வரி வடிவம்தான் ஐவரி. அதாவது ஐந்து வரிகள் கொண்ட ஒரு கவிதையில் முதல் இரண்டு வரிகள் ஒத்த அசை அமைப்பைக் கொண்டும் மூன்றாம்,நான்காம் வரிகள் ஒத்த அசை அமைப்பைக் கொண்டும் ஐந்தாம் வரி இரண்டு சொற்களில் முடிந்தால் அக்கவிதை ஐவரி என்பதாக கார்க்கி வரையறை செய்துள்ளார். <br />
<br />
இந்த வரையறையை வைத்துகொண்டு தேடுகையில் தேவிவேலு என்கிற கவிஞர் எழுதிய கவிதை ஐவரி இலக்கணத்துடன் பொருந்தி போயிருந்தது<br />
<br />
மயிலாட மேகங்கள் இருக்கு<br />
உறவாட மோகங்கள் இருக்கு<br />
சொன்னாலென்ன நேரேதான்<br />
வந்தாலென்ன கூடத்தான்<br />
அழகே அழகே<br />
<br />
<br />
ஐவரி என்கிற கவி வடிவம் இன்னும் பெயரால் பெரிய அளவில் புலக்கத்திற்கு வரவில்லை. ஆயினும் கலைஞர் இருபது வருடங்களுக்கு முன்பே அவர் எழுதிய அணிந்துரையில் இச்சொல்லை கையாண்டிருப்பது வியப்பளிக்கவே செய்கிறது.<br />
<br />
ஐவரி என்பது ஐந்து வரி இலக்கணக் கவிதை எனலாமே!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தீக்கதிர் - வண்ணக்கதிர் செப்டமபர் 23- 2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9J_e-utvlCz21t4DrhetGJ5EmaEUhIiYmdLqSuDRmYiRtuo7JL-zq63b1PS1SXFz0um59ymw21Hun4SoHl3WZGqAkBwAMLa2EwN1-zY75Ml-swOnKv1IntxE-iR7_bOxWZHt4YfDWte8/s1600/Screenshot_2018-10-23-15-28-45-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="901" data-original-width="331" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9J_e-utvlCz21t4DrhetGJ5EmaEUhIiYmdLqSuDRmYiRtuo7JL-zq63b1PS1SXFz0um59ymw21Hun4SoHl3WZGqAkBwAMLa2EwN1-zY75Ml-swOnKv1IntxE-iR7_bOxWZHt4YfDWte8/s640/Screenshot_2018-10-23-15-28-45-1.png" width="234" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் - பழைய தேடல் -7</div>
<br />
'ஆகிருதி' <br />
- அண்டனூர் சுரா<br />
<br />
எழுத்தாளர் பிரபஞ்சன் , உடல் நலிந்து புதுச்சேரி மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க கவிஞர் லீனா மணிமேகலை சென்றிருந்தார். அப்பொழுது பிரபஞ்சன் நண்பர்கள் குறித்து விசாரித்துவிட்டு சொன்னார் ' ஒருத்தனுக்கு வாழும்போது ஆகிருதி சிறுத்துப்போறது துயரம் மணி' . மணிமேகலை கண்ணீரை அடக்கிக்கொண்டு சொன்னார் ' உங்களுக்கென்ன, அதே கம்பீரமும் மிடுக்குமாத்தான் இருக்கிறீங்க'<br />
<br />
பிரபஞ்சன் அவரது எழுத்தைப் போலவே அத்தனை கம்பீரமானவர். அவர் தமிழுக்காக இன்னும் ஒரு நூற்றாண்டு வாழத்தான் வேண்டும். <br />
<br />
அது என்னதாம் ஆகிருதி?<br />
<br />
மாலன் அடிமைகள் சிறுகதையில் இசசொல்லை பயன்படுத்தியிருக்கிறார். ' அறைக்குள் நுழைந்த போது அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் - முன்பின் அறிந்திராத நபர்கள். நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி'<br />
<br />
க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி ஆகிருதி என்பது ஆண்களுடன் தொடர்புடைய சொல் என்கிறது. ஆனால் சொல்லை பெண் பாலுக்கு பயன்படுத்தியிருக்கிறார் ' ஆத்தா' சிறுகதையில் ஜி.கோமளா . கண்களை மூடி சம்மணமிட்டு குலவை கொட்டிக்கொண்டிருந்தாள் கூரியாயி. ஆறடிக்கு அரையடி குறைவு உயரம். அதற்கேற்ற சதைப்பிடிப்பு. ஓங்கு தாங்கான ஆகிருதி.<br />
<br />
மதுரைத் தமிழ் பேரகராதி அடிதோறும் இருபத்திரண்டு அசை கொண்டு நான்கடியாய் ஒற்றற்ற சந்தமாய் முடியும் பாட்டை ஆகிருதி என வகைப்படுத்தியுள்ளது கூடுதல் தகவல்.<br />
<br />
பிரபஞ்சன் பயன்படுத்திய ஆகிருதி என்பது உடல் குறித்தது. இதை ஆங்கிலத்தில் physique என குறிக்கப்படுகிறது. உடம்பு என்றும் , வடிவம் என்றும் , உடல்வாகு என்றும் அகராதிகள் பல பொருளைத் தந்துள்ளன. <br />
<br />
ஆகிருதி என்பது 'உடம்பின் வடிவம்' எனப் பொருள் கொள்ளலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் , பழைய தேடல் -6</div>
<br />
கிரமம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
'அனொனிமா ( முகம் மறைந்தவள் ) ' இரண்டாம் உலகப் போரின் போது தனது கற்பை தற்காத்துக்கொள்ள தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் நாட்குறிப்பு பதிவுகள் . இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் ஆதவன் தீட்சண்யா. மொழிப்பெயர்ப்பு சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் தேவா.<br />
<br />
'ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் வேறு பாதையில் செல்லவும்' என்பது ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கும் முன்னுரையின் தலைப்பு. முன்னுரையின் நடுப்பகுதியில் இப்படியாக ஓரிடம்.<br />
<br />
"தங்களில் இன்னும் கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு ( அனோனிமா) சிரிப்பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24 முறை வல்லுறவுக் காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும் , இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் கிரமமாக எண்ணுகிறார்களோ என்று கேலி செய்கிறாள்...''<br />
<br />
வாசிக்கும் பொழுதே இதயத்தை நடுங்கச் செய்யும் வரிகள் இவை. அது என்னதாம் ' கிரமம்..? '<br />
<br />
யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' என்கிற நூலில் பாரதி செல்லம்மாள் உரையாடல் வருகிறது. செல்லம்மாள் சொல்கிறார் ' வீட்டின் ஓடுகள் உடைந்து கூரை ஒழுகுகிறது. வேறொரு வீடு பாருங்கள் ' என்கிறார். அதற்கு பாரதி "செல்லம்மா, நீ அவ்வளவு தூரம் அலுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதை பேசி முடித்துவிட்டேன். நல்ல நாள் பார்த்துகொண்டு நாம் அங்கே போக வேண்டியதுதான் பாக்கி. இனி மாதத்தில் சில நாள் மௌன விரதம் என்று கிரகம் செய்து விடுகிறேன். புதிய சொல், அதாவது ஓம் எனபதைப் போல தமிழில் ஒரு பதம் கண்டுபிடித்தாக வேண்டும்...."<br />
<br />
இதே சொல் இயற்கணிதத்தில் குலம் , கிரமம் என்கிற பதமாக வருகிறது. அக்கிரமம், ஆக்கிரமம், அபக்கிரமம், அனுக்கிரமம்,பராக்கிரமம்,...இவை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள். <br />
<br />
வை. சுந்தரேச வாண்டையார் தொகுத்த '30 கல்வெட்டுகள்' என்கிற நூல் , கிரமம் என்பது வேதம் ஓதும் வகைகளில் ஒரு வகை என்கிறது. சம்ஹிதா, பதம், கிரமம்,கனம்,ஜடா . இதில் கிரமம் என்பது முறைப்படி வேதத்தை ஓதுதல். கி.ரா தொகுத்த வழக்குச் சொல்லகராதி கிரமம் என்பது இயற்கையாகக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறை என்றும் சீட்டாட்டத்தில் பயன்படும் சொல் என்றும் விளக்கம் தந்திருக்கிறது. <br />
<br />
இதிலிருந்து நாமொரு முடிவிற்கு வரலாம். கிரமம் என்கிற சொல்லிற்கு 'ஒழுங்கு' எனப் பொருள் கொள்ளலாமே.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் - பழைய தேடல் - 5</div>
<br />
வியஞ்சனம்<br />
<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
'என் ராஜா' அபிராமி துர்காதாஸ் எழுதிய சிறுகதை . தாய் இட்டலி, வடை சுட்டுத் தருவதை மகன் தலையில் சுமந்துபோய் விற்று வருகிறான். அவனின் ஆசிரியர் மாணவர்களை அழைத்துகொண்டு சுற்றுலா செல்கிறார். தாயிடம் நாலணா காசு வாங்கிக்கொண்டு அவனும் செல்கிறான். அங்கு பலரும் பலதை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அவன் அக்காசை பத்திரமாக வைத்திருக்கிறான் ' இந்த நாலாணாவைக் கொண்டு தேங்காயும், பொட்டுக்கடலையும் வாங்கினால் நாளைக்கு இட்டலிக்கு வியஞ்சனம் ஆகுமே ' என்று.<br />
<br />
அது என்னதாம் வியஞ்சனம்...?<br />
<br />
உ.வே.சா எழுதிய 'என் சரித்திரம்' சுய சரிதத்தில் இச்சொல் இடம் பெற்றிருக்கிறது. 'ஆகாரத்திற்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதையும் சாப்பிடுவதுண்டு'.<br />
<br />
'மனோமணியம் ' நாடகத்தில் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த.... பாடலின் நீட்சியில்<br />
<br />
"தக்கவழி விரிந்து இலகும்<br />
சங்கத்தார் சிறுபலகை <br />
மிக்க நலம் சிறந்த உன்றன்<br />
மெய்ச்சரித வியஞ்சனமே"<br />
<br />
இவ்விடத்தில் வியஞ்சனம் என்பது குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம் எனப் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. <br />
<br />
ஸ்ரீ சர்வஞானோத்தரம் பக்தி பாடலில் இச்சொல் நிறைய இடங்களில் வருகிறது. திருப்புவனம் மன்னன் வீரபாண்டியன் கல்வெட்டில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து வியஞ்சனம் என்பது ஒரு வடமொழி சொல் என்கிற தெளிவிற்கு வந்துவிடலாம். <br />
<br />
காரைக்குடி பகுதிகளில் இதே சொல் சற்று திரிந்து வெஞ்சனம் என்றும் வெஞ்சினம் என்றும் வட்டார வழக்காகியிருகிறது. நத்தை வெஞ்சனம், பருப்பு வெஞ்சனம், மோர் வெஞ்சனம்... என்று இன்றைக்கும் சொல்வதைக் கேட்கலாம். இதைக் கொண்டு பார்க்கையில் வியஞ்சனம் என்பது சில இடங்களில் குழம்பாகவும், சில இடங்களில் கூட்டுப் பொரியலாகவும், சில இடங்களில் கறி வகைகளையும் குறிப்பதாக பொருள் கொள்ள முடிகிறது.<br />
<br />
இராஜம் கிருஷ்ணன் எழுதிய 'பாதையில் பதிந்த அடிகள்' நாவலில் இப்படியாக ஓரிடம்.<br />
<br />
' உன் மாமா மக தானே உன் பொஞ்சாதி , அவளைப் போய் ஏன் அடிச்சே?'<br />
<br />
'காலாம கஞ்சி கொண்டாந்தா, தொட்டுக்க ஒரு வியஞ்சனம், உப்பு மொளவா வச்சி அரச்சிக் கொண்டாந்தா என்னவாம்? '<br />
<br />
இதிலிருந்து ஒரு முடிவிற்கு வரலாம். பல பொருட்கள் சேர்ந்த குழம்பு அல்லது கூட்டுப் பொரியல் செய்கையில் எப்பெயரில் அது அழைக்கப்படுகிறதோ அதுவே வியஞ்சனம். உதாரணமாக, என் அம்மா சமையலில் எனக்கு பிடித்தது வெண்டைக்காய் வியஞ்சனம். உங்களுக்கு தக்காளி வியஞ்சனமாகக் கூட இருக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆகஸ்ட் - 26, 2018</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLDOwSTIsdzaspno06XH4iZInrl3oPC6LGKegdLFZNdwVTFtRtVUpAH2YkT_4FUmKFladRAgBdIbyEZSHGt3uoieZisbiNMRSlJUc29UM5yS9aOjFH7EUgmyZvP8-U12u7-AewkSjyFPQ/s1600/Screenshot_2018-10-23-15-47-52-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="924" data-original-width="306" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLDOwSTIsdzaspno06XH4iZInrl3oPC6LGKegdLFZNdwVTFtRtVUpAH2YkT_4FUmKFladRAgBdIbyEZSHGt3uoieZisbiNMRSlJUc29UM5yS9aOjFH7EUgmyZvP8-U12u7-AewkSjyFPQ/s640/Screenshot_2018-10-23-15-47-52-1.png" width="210" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதிய சொல் - பழைய தேடல் -4</div>
<br />
'தூக்காய்'<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
<br />
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு இயந்திர தனத்துடன் துவங்குகையில் நீல. பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம் நாவலில் இடம்பெற்ற ஒரு கதை நினைவிற்கு வந்தது. <br />
<br />
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக டி.ஆர். பார்த்தசாரதி ஐயங்கார் இருக்கையில், திடீரென்று ஒரு நாள் இந்த சாலை பஜாரின் இருபக்கங்களிலுமுள்ள கடைகளை எல்லாம் இடித்து நீக்கி அகலப்படுத்தப் போவதாக அவர் விட்ட அறிக்கையைக் கண்டு , சாலைக்கடை முதலாளிமார்கள் எல்லோரும் பதறிப் பரபரத்து விழுந்தடித்துகொண்டு திவானிடம் ஓடிச்சென்று , பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கியதாகவும் , இறுதியில்தான், சர்க்கார் கஜானா காலியாக இருப்பதை அறிந்து அதை நிரப்ப திவான் கையாண்ட ராஜதந்திரமெனவும் தெரியவந்தது' <br />
<br />
நீல. பத்மநாபன் இக்கதையை சொல்வதற்கு முன்பு நாவலின் கதை மாந்தரான அனந்தன் நாயர் கோட்டை வாசலில் நின்று கோட்டையைப் பார்க்கிறார். அவரது பார்வையில் கோட்டையின் வாசல், கிழக்கு மேற்காக தூக்காய் நீண்டு செல்வது தெரிகிறது. <br />
<br />
<br />
அது என்னது 'தூக்காய்..?'.<br />
<br />
தூக்காய் என்கிற சொல்லின் வேர்ச்சொல் தூக்கு. தூக்கு என்பதற்கு காய்கறிக் கூட்டு என்றொரு பொருளுண்டு. ஒரே தட்டு கொண்ட தராசும் தூக்குதான். அபிதான சிந்தாமணி தூக்கு என்பது தாளங்களின் மேல் வரும் பேதம் என்கிறது. தூக்குத் தண்டனை இதே சொல்லில் குறிக்கப்படுகிறது. தூக்கு என்றால் மேலே என்கிற பொருளும் உண்டு.<br />
<br />
அத்தூக்கு, அத்தூக்காய் என்கிற சொல் இன்றும் நாஞ்சில் பகுதியில் வழக்கத்திலிருக்கிறது. பார்வைக்கு அல்லது மனித புழக்கத்திற்கு அப்பால் எனப் பொருள் கொள்ளலாம். அத்தூக்காய் என்கிற சொல்லின் சுருங்கிய வடிவமே தூக்காய். அதாவது மனித புழக்கத்திற்கு அப்பால் எனப் பொருள் கொள்வோமே...<br />
<br />
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை தூக்காய் இத்தனை அவசரத்தில் நிறைவேற்ற என்ன ராஜதந்திரமோ...?<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தொடர் - 3</div>
<br />
புதிய சொல் , பழைய தேடல்<br />
<br />
கோவில்<br />
<br />
# அண்டனூர் சுரா<br />
<br />
எல்.கே. அத்வானியின் சுயசரிதை ' என் தேசம் என் வாழ்க்கை ' . ஒரு பக்கத்தில் சிந்தி கவிஞர் தான்சேன் என்று புகழப்படும் பகத் கன்வர் ராம்(1885-1938) பற்றி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார். 'கன்வர் ராம் எழுதி இசையமைத்து பாடிய பாடல்களுக்கு இந்து, முஸ்லீம்கள் மெய் மறந்து நடனமிடுவார்கள் . அத்தகையவரை 1938 ஆம் ஆண்டு ஒரு முஸ்லீம் மத வெறியன் சுட்டு கொலை செய்தான்'. <br />
<br />
இதற்கும் முந்தைய பக்கங்களில் இந்திய பிரிவினை குறித்தும், அதன் பேரில் நடத்தி முடித்த காந்திஜியின் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் பெரிதாக பேசாமல் அத்தனை எச்சரிக்கையாக கடந்து செல்லும் அவர் , பகத் கன்வர் ராம் சம்பவத்தை திட்டமிட்டு எழுதுவதன் காரணம் நமக்கு புரியாததில்லை. . <br />
<br />
சரி, நான் தலைப்பினூடே விடயத்திற்கு வருகிறேன். பகத் கன்வர் ராமின் பாடலைக் கேட்பவர்கள் இன்றும் மெய் மறவாமல் இருக்க முடியாது. அவரது பாடலில்தான் என்னவொரு காந்தம்! என்னே வரிகள் !. ' நான் முஸ்லிமா இருந்து தொழட்டுமா? அல்லது ஹிந்துவாக இருந்து கோயிலுக்கு செல்லட்டுமா? அல்லது துடிதுடிப்பான இசைக்கு நடனமாடி ,எனது பக்தியை காட்டட்டுமா? எது உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது? ' ஒரு பக்தன் கடவுளைப் பார்த்து கேட்கும் பாடல் இது. <br />
<br />
இந்துகளால் தூக்கிப்பிடிக்கப்படும் மகா கவிஞராக இன்று போற்றப்படுகிறார் பகத் கன்வர் ராம். மதம் கடந்த எவரும் இப்பாடலுக்கு ஆட்படாமல் இருக்க முடியாது. இதே பாடலை கவிஞர் இப்படியாக எழுதியிருந்தால் இந்துத்துவவாதிகள் அவரைத் தூக்கிப்பிடித்திருப்பார்களா? எல்.கே. அத்வானியும் தன் சுய சரிதைக்குள் இதைக் கொண்டு வந்திருப்பாரா..? சற்றே யோசியுங்கள்...<br />
<br />
'நான் முஸ்லிமாக இருந்து தொழட்டுமா? அல்லது இந்துவாக இருந்து கோயிலுக்குள் செல்லட்டுமா?'.<br />
<br />
கோயிலுக்கு, கோயிலுக்குள் இரண்டில் பின்னதை இந்துத்துவவாதிகள் ஏற்க மாட்டார்கள். கோயில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத இடமாகவே இருந்திட்டு போகட்டும். கோயில் என்பது சரியா...? <br />
<br />
<br />
கோயில் என்பதை கோ + இல் எனப் பிரிக்கலாம். இதில் நிலைமொழி ஈற்றும் வருமொழி முதலும் இணையாது. ஆகவே இரண்டையும் இணைக்க உடம்படு மெய் என்கிற ய்,வ் தேவைப்படுகிறது. <br />
<br />
அ,ஆ,உ,ஊ,ஓ உயிரொலிகளுள் ஒன்று கடைசியிலிருக்க முதலில் உயிர் எழுத்துகளில் ஒன்று வருமொழியாக வந்தால் ' வகர மெய் ' தோன்றும்.<br />
<br />
இதன்படி, நா + இல் = நா + வ் + இல் = நாவில்<br />
<br />
திரு + ஆரூர் = திரு + வ் + ஆரூர் = திருவாரூர்<br />
<br />
கோ + இல் = கோ + வ் + இல் = கோவில்<br />
<br />
நா.வானமாமலை திரட்டிய 'கான் சாகிபு சண்டை 'கதைப்பாடலில் மனைவி மாஷாவிடம் கான்சாகிபு இவ்வாறு கூறுகிறான்.<br />
<br />
அடிபெண்ணே துரைமகளே மாசா<br />
ஆண்பிள்ளையொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு<br />
மலையாளம் பார்த்து வர வேணும்<br />
மன்னாரு கோவிலும் பார்த்து வரவேணும்<br />
<br />
என்ன நண்பர்களே , இனி கோயில் என்பதை இனி கோவில் எனத் திருத்தி எழுதுவோமே....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
தொடர் -2</div>
<br />
புதிய சொல் - பழைய தேடல் <br />
<br />
'ஆரோகணித்து '<br />
- அண்டனூர் சுரா<br />
<br />
<br />
ஆனந்த விகடன் 18.7.18 தேதியிட்ட இதழுக்கு எழுத்தாளர் பொன்னீலன் ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் கடைசி கேள்வியும் அவரது பதிலும்.<br />
<br />
கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த எழுத்தாளராக இருப்பதை எப்போதாவது அசௌகரியமாக உணர்ந்துள்ளீர்களா?<br />
<br />
" எழுத்தாளர் , எந்த கட்சிக்குள்ளும் தன்னை அடைத்துகொள்ளக்கூடாது என்று என் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. அது , எழுத்தாளனின் சுதந்திரத்தை ஒடுக்கிவிடும். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் சொல்வார், ' எழுத்தாளர்கள் கொள்கையைக் குதிரையாக்கி அதன் மீது ஆரோகணித்துச் சுதந்திரமாகத் தன் படைப்புலகில் வலம் வர வேண்டும். குதிரையைத் தோளில் ஏற்றிச் சுமக்கக்கூடாது' என்று. இதன் பொருள் என்ன?".<br />
<br />
இதை வாசிக்கையில் 'ஆரோகணித்து ' என்கிற சொல் வாசிப்பில் இடறியது. இது குறித்து தேடுகையில் இச்சொல்லை கல்கி, 'பார்த்திபன் கனவு' நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். நரசிம்ம சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்து ராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகச் சென்றார்.<br />
<br />
கோகுல சேஷாத்ரி ' இராஜகேசரி' என்கிற நாவலில் ஓரிடத்தில் ' மழடியாருக்கு வேறு வழியில்லை. ஒரே ஓட்டமாக ஓடி அவருடைய புரவியை அடைந்து, அதன் கடிவாளத்தை மரத்திடமிருந்து விடுவித்துகொண்டு நொடியில் ஆரோகணித்து அவர் சென்ற திசையில் முடிந்த வரை வேகமாக புரவியைச் செலுத்திக்கொண்டு போனார்.<br />
<br />
G.M.பாலசுப்பிரமணியன் எழுதிய சிறுகதை ' விளிம்புகளில் தொடரும் கதை ' . ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தன்னுடன் குடும்பம் நடத்திய கணவர் மரணப்படுக்கையில் கிடக்க அவருடைய மனைவி கணவர் தூங்குகிறாரா, இறந்துவிட்டாரா என தவிக்கும் பாட்டை இக்கதை பேசியிருக்கும். ஓரிடத்தில் மனைவி கணவரின் இளமைப்பருவத்தை நினைத்து பார்க்கிறார். ' என்ன தைரியம் இவருக்கு? சம்யுக்தையை குதிரையில் கவர்ந்து போன பிருதிவிராஜா என்ற நினைப்பு. இருந்தாலும் அவர் சைக்கிளில் ஆரோகணித்து வருவது கம்பீரமாய் குதிரையில் வருவது போலிருந்தது'<br />
<br />
சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்ற கிர்கீஸிய எழுத்தாளர் எழுதிய ஜமீலா நாவலில் ( மொழிபெயர்ப்பு - பூ.சோமசுந்தரம்) ஓஸ்மோன் குதிரையின் மேல் ஆரோகணித்து இங்குமங்குமாக நகர்ந்து சென்றார்.<br />
<br />
ஆரோகணித்து - இச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், இச்சொல் குதிரையுடன் தொடர்புடையது. ஆங்கிலத்தில் Arrow என்றால் அம்பு. இச்சொல் ஸ்பானிய மொழியின் திரிபு. அம்பு என்கிற ஒன்று குதிரையில் பயணம் செய்யும் ஒரு வீரனின் உருவத்தை ஒத்தது. அம்பின் தலைதான் வீரனின் தலை. பின்னாலிருக்கும் இரு விளிம்புகள் வீரனின் இரு கால்கள். ஓர் அம்பின் வேகத்தில் குதிரையில் சவாரி செய்வதுதான் ஆரோகணித்து என பொருள் கொள்ளலாம்.<br />
<br />
இச்சொல்லை G.M பாலசுப்பிரமணியன் தன் கதையில் சைக்கிள் ஓட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார். இன்று, விரைவாக பைக் ஓட்டுபவர்கள் இச்சொல்லை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்....<br />
தொடர் <br />
<br />
புது சொல் ; பழைய தேடல் - 1<br />
<br />
கறள்<br />
<br />
அண்டனூர் சுரா<br />
<br />
<br />
ஜூலை 22, 2018 காமதேனு இதழில் இரண்டு டொலர் என்கிற சிறுகதை வாசித்தேன். கதையின் ஆசிரியர் அ.முத்துலிங்கம் .<br />
<br />
அவரது வழக்கமான சிறுகதையைப் போலவே இக்கதையும் கனடாவில் பயணிக்கிறது. ஒரு இளைஞன் வேலை தேடி அவசரமாக ஒரு பேருந்தைப் பிடித்து பயணிக்கிறான். அவனது அவசரத்திற்கு ஏற்ப பேருந்தின் வேகமிருக்கவில்லை. ஓரிடத்தில் பேருந்து நின்று ஒரு மாற்றுத்திறனாளியை சக்கர நாற்காலியுடன் உள்வாங்கிக்கொள்கிறது. பேருந்து திரும்பவும் பழையபடி பயணிக்கிறது. பயணச்சீட்டு வாங்க மாற்றுத்திறனாளி பாக்கெட்டுக்குள் துழாவுகிறார். அவரிடமிருக்கும் பாக்கெட் ஒன்றா, இரண்டா,... எட்டு இருக்கின்றன. ஒவ்வொரு பாக்கெட்டாகத் தேடுகிறார். இரண்டு டொலர் கிடைக்கவில்லை. வேலை தேடும் வாலிபன் உதவி செய்யலாமென்று இரண்டு டொலரை எடுத்து கையில் வைத்திருக்கிறான். அதற்குள் பேருந்து நிற்க மாற்றுத்திறனாளியை இடையில் இறக்கி விடுகிறது. சக்கர நாற்காலியுடன் கீழே இறக்கிவிடப்படும் அவருக்கு இரண்டு டொலர் கிடைத்துவிடுகிறது. அதை உயர்த்தி காட்டுகிறார். பேருந்து பின் வந்து மாற்றுத்திறனாளியை ஏற்றிக்கொண்டு திரும்பவும் விரைகிறது. இதுதான் கதை. <br />
<br />
<br />
இக்கதையில் பேருந்து ஓட்டுநரை அவர் சாரதி எனச் சொல்லியிருப்பார். நாம் ட்ரைவர் என தூய தமிழில் அழைப்போம் ஹிஹி.. அல்லது ஓட்டுநரை ஓட்டுனர் என்போம். ஓட்டுநர் பெண்ணாக இருப்பார். அவரை வர்ணனை செய்யும் அ.முத்துலிங்கம் கறள் நிறம் என்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-4938555107399254482018-10-07T11:39:00.001+05:302018-10-07T11:39:38.495+05:302018 விருது பெற்ற புகைப்படம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அவர் பெயர் Nikhil Tembekar . புத்தகக் கடை நடத்துபவராக இருக்கிறார். வன உயிர் புகைப்பட கலைஞரும் கூட. டிசம்பர் மாதம் ஒரு நாள் NH 930 காரில் பயணம் செய்திருக்கிறார். கிழக்கு மஹாராஷ்ரா மாநிலம் Chandrapur - Mul சாலை அது. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் சாலை அது.<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxJNk7LhBY7poURxUnejkI2-Cx4_zoBH_9YLPH5g-lLjgS2Qe37IKtswgyPBEjQsKs4rpxvK79BojyuCFrXBLC5hErU_TutJf0Uf4Q8HoISh0PrEiJ5BT6bS_fwgnT-5SuUboCp1FBOAU/s1600/unnamed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="384" data-original-width="384" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxJNk7LhBY7poURxUnejkI2-Cx4_zoBH_9YLPH5g-lLjgS2Qe37IKtswgyPBEjQsKs4rpxvK79BojyuCFrXBLC5hErU_TutJf0Uf4Q8HoISh0PrEiJ5BT6bS_fwgnT-5SuUboCp1FBOAU/s320/unnamed.jpg" width="320" /></a></div>
<div>
<br />
அதிகாலை 4.00 மணி. வாகனத்தின் விளக்கு மின்னுகிறது. வாகனத்தை சட்டென நிறுத்துகிறார். அவருக்கு அப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. வன விலங்குகளின் நடமாட்ட பகுதி இதுவென்று. <br />
<br />
சாலையின் ஓரத்தில் ஒரு பசு இறந்து கிடக்கிறது. தாயும் குட்டியுமாக இரண்டு வரிப்புலிகள் உக்கிர பசியைத் தணித்துக்கொள்ளும் பொருட்டு கறியை பிய்த்துத் தின்னுகிறது. <br />
<br />
இவர் தனது கேமராவை எடுக்கிறார். இப்படியும் அப்படியுமாக புகைப்பாடம் எடுக்கிறார். அவர் எடுக்கும் புகைப்படங்கள் அவருக்கு திருப்தியளிக்கும்படியாக இல்லை. அவருக்கு பிடிக்கும்படியாக ஒரு புகைப்படத்தை எடுக்க ஐந்து மணி நேரம் வரைக்குமாகிறது. கடைசியில் அவர் எடுத்த புகைப்படம் அவருக்கு பிடித்துப்போய்கிறது. அப்புகைப்படம் ' Nature in focus photography awards - 2018 ' விருது பெறுகிறது. அந்தப் புகைப்படம்தான் இது.<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2AjQqCc8FoRpA4MlcOz3LkxbmYlMOSPc4swnnsEDbkS2Cmz7u0I-LSQrnVftHksQzGlfIC_u63YQ3xg65cUM22x4ZDEJsHujWe3z7cn68OQrsrEAmRCXcRbF9e_BNMoZ54yqZ8n9Wrqc/s1600/07SMleopardjpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="410" data-original-width="615" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2AjQqCc8FoRpA4MlcOz3LkxbmYlMOSPc4swnnsEDbkS2Cmz7u0I-LSQrnVftHksQzGlfIC_u63YQ3xg65cUM22x4ZDEJsHujWe3z7cn68OQrsrEAmRCXcRbF9e_BNMoZ54yqZ8n9Wrqc/s640/07SMleopardjpg.jpg" width="640" /></a></div>
</div>
</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-23403670507719874962018-09-18T18:05:00.001+05:302018-09-18T18:06:47.875+05:30வேள்வித்தீ - நாவல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வேள்வித்தீயும் சில வேள்விகளும்<br />
<br />
வேள்வித்தீ - நாவலை முன் வைத்து<br />
<br />
இதற்கு முன்பு தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் வாசித்திருக்கிறேன். தமிழின் முதல் கம்யூனிச நாவல் என்கிற அடையாளம் அதற்கு உண்டு. அந்நாவல் பேசும் அதே நெசவாளர்களின் பிரச்சனையைத்தான் வேள்வித்தீ என்கிற நாவலும் பேசுகிறது. பஞ்சும் பசியும் நாவலில் பஞ்சாலை தொழிலாளர்கள், முதலாளிகள் இருவரும் உழைக்கும் வர்க்கத்தினரின் எதிரும் புதிருமான பாத்திரங்களாக படைத்திருப்பார் ரகுநாதன். தொழிலாளர்களின் உழைப்பையும் , அவர்களின் சார் உரிமைகளையும் , அதை நோக்கி முன்னெடுக்கும் போராட்டக்களத்தையும் அந்நாவல் பேசும். மேலும் அந்நாவலில் சாதி, இனக் கூறுகளை எப்படித் துருவிப் பார்த்தாலும் கண்டடைய முடியாது. ஆனால் வேள்வித்தீ அப்படியன்று. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw_dtAJdKX7RpXDdiWLreoII7lbosB5Bc3_F77nD6qz5FWi0oiLgvwjyxjSnkWDKasHWUpH3dmdIQkDtaFjVOSM9Akn0UYN1BWGUnG2UJuwFNtpt5CoVmJxvxRMMKufHr-JqwNqyRXalI/s1600/1537274037056-1747631224.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw_dtAJdKX7RpXDdiWLreoII7lbosB5Bc3_F77nD6qz5FWi0oiLgvwjyxjSnkWDKasHWUpH3dmdIQkDtaFjVOSM9Akn0UYN1BWGUnG2UJuwFNtpt5CoVmJxvxRMMKufHr-JqwNqyRXalI/s320/1537274037056-1747631224.jpg" width="180" /></a></div>
<br />
<br />
வேள்வித்தீ சௌராஷ்டிரா மக்கள் , அவர்களின் வாழ்வியல் பின்னணி, உறவு முறைச் சிக்கல், அவர்களின் வாழ்வாதார நெசவுத்தொழில், அத்தொழில் மீது எழுப்பப்படும் கடன் , தொழிலாளி முதலாளியாகத் துடிக்கும் தொழிற்சார் முன்னேற்றம், காதல் , விதவை, காதல் காமம் சார்ந்த நெருக்கம் , பிணக்கம் , அரசுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக சம்பள உயர்வு பிரச்சனை என பலதையும் இந்நாவலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எம்.வி.வெங்கட்ராம். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
இந்நாவலின் கதைக்காலம் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் திமுக எழுச்சிக்கும் இடைப்பட்ட காலம். ' இப்படி எல்லாம் பொறுப்பில்லாமப் பேசித்தான் , காளை மாட்டுக்குத் தினவு கொடுத்து சண்டித் தனம் செய்யுது. சாட்டையைச் சொடுக்கி, ரெண்டு வச்சாத்தான் காளை மாட்டுக்கு ரோசம் பிறக்கும்!'<br />
' மழையிலே உதயசூரியன் கரைஞ்சுபோயிட்டுது!காளை மாட்டைப்பத்தி இவர் புகார் செய்ய வந்துட்டாரு. எதுக்கு வீண் பேச்சு ' சுப்பையா , சாரநாதன் என்கிற இரு கிளை பாத்திரங்கள் பேசிக்கொள்வதைக்கொண்டு காலத்தை தீர்மானிக்க முடிகிறது. <br />
<br />
சௌராஷ்டிரர்கள் தொன்று தொட்டு தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் அல்ல. அவர்களது ஆதித் தாயகம் சௌராஷ்டிரா. கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து, ஆலயங்களை இடித்தும், விக்கிரகங்களை உடைத்தும் ஹிந்து மதத்தையே ஒழிக்க முனைந்தான் அல்லவா? அச்சமயத்தில், சௌராஷ்டிரத்தில் இருந்த பல குடும்பங்கள் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறந்த மண்ணைத் துறந்து பிழைப்பைத் தேடித் தெற்கே குடிபெயர்ந்தார்கள். அவர்கள் சாதியில் பிராமணர்கள். ஆயினும் நெசவுத் தொழிலில் வல்லவர்கள்...என்பதாக நாவல் அவர்களின் இடம்பெயர்வைக் குறிப்பிடுகிறது.<br />
இந்நாவலின் நாயகன் கண்ணன் நெசவு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர உழைக்கிறவன். பணமே வாழ்க்கையெனக் கொண்ட உறவுகள், பணத்திற்காக அல்லாடும் மனைவி கௌசலை, பணம் உதவி செய்ய முன்வரும் ஹேமாவுடன் நெருங்கி மனைவியிடமிருந்து விலகும் கண்ணன்,...என நெசவுத்தொழில் சிக்கலுடன் உறவுச் சிக்கலையும் இந்நாவல் பேசியிருக்கிறது.<br />
<br />
மனைவி கௌசலை செய்து கொண்டது சரியா, அவளது இறப்பிற்குப்பிறகு கண்ணன் ஹேமாவுடன் இணைந்தது சரியா என்பதெல்லாம் சமூகத்தின் நீட்சிக்கொண்டுதான் பார்க்க வேண்டுமே தவிர வாசிப்பின் நீட்சியால் அதை அளந்துவிட முடியாது.</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-60284819001166424612018-08-29T15:30:00.001+05:302018-08-29T15:32:05.897+05:30சத்ரபதி தாஜ்மகால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
சிறுகதை <span style="font-size: 15px; white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக வகுப்பறையின் கதவை இறுக அடைத்துகொண்டேன். மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். இத்தகைய இறுக அடைத்தல் எனக்குத் தேவையென இருந்தது. அருகாமை வகுப்புகளின் இரைச்சலிலிருந்து என் வகுப்பு மீளவும், என் சரித்திரப் போதனை அடுத்த வகுப்பிற்குக் கேட்காமல் இருக்கவும் இந்த கதவடைத்தலும் தாழ்ப்பாழ்கள் இடுதலும் எனக்கு தேவைப்பட்டிருந்தது.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான் எந்த வகுப்பையும், எந்தப் பாடவேளையையும் யோகா இல்லாமல் தொடங்குவதில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் என் வகுப்பு மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், நூறு சதம் தேர்ச்சி பெறுவதற்கும் காரணம் இந்த யோகாதான். நான் என்றேனும் ஒரு நாள் பாடம் நடத்தாமல் கூட இருந்துவிடுவதுண்டு. ஆனால் யோகா வகுப்பு நடத்தாமல் இருந்ததில்லை. நான், என் வகுப்பிற்குள் நுழைகையில் என் வகுப்பு மாணவர்கள் தாமாகவே முன் வந்து யோகா செய்யத் தொடங்கிவிடுவார்கள். யோகாவிற்கு நான் ஒதுக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள். அவ்வளவே! யோகா முடிந்ததும் அடுத்து தேச நல உறுதிமொழி. நான் கண்கள் திறந்துவைத்துகொண்டு சொல்வதை மாணவர்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்வார்கள்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>‘ மாணவர்களாகிய நாங்கள்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>‘ தேச நலனைக் கருத்தில் கொண்டு..’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>‘ ஆசிரியர் சொல்லித்தரும் சரித்திரப் பாடத்தை கூர்ந்துக் கவனித்து...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>‘ அவருக்கு எந்தவொரு இடையூறும் கொடுக்காமல்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>‘ சரித்திரத்தை ஏற்போம்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>மாணவர்கள் கையை நெஞ்சில் வைத்தபடி சொல்லி முடித்ததும் கை, கால்களை உதறிக்கொண்டு எழுந்துவிடுவார்கள். அவர்கள் அவரவர் இருக்கையில் உட்கார இரண்டொரு நிமிடங்கள் பிடிக்கும். அதன்பிறகே நான் சரித்திரப் பாடத்தைத் தொடங்கிவேன். அன்றைய தினம் அப்படியாகத்தான் பாடத்தைத் தொடங்கியிருந்தேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVLpNxcG7soBa74xbKiknP6Xp6P3qTiuwd1lXldu4iWrjmHazEgNbDVUY7-Af-oLnZDD5A4B97JV24g2Pnc3U4o8cBVzUJcXRYp3sUyB0yyiiCe1KusUk1rz2lMBMk-bWFNDr88olvu3Y/s1600/1535536657210-441419086.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVLpNxcG7soBa74xbKiknP6Xp6P3qTiuwd1lXldu4iWrjmHazEgNbDVUY7-Af-oLnZDD5A4B97JV24g2Pnc3U4o8cBVzUJcXRYp3sUyB0yyiiCe1KusUk1rz2lMBMk-bWFNDr88olvu3Y/s200/1535536657210-441419086.jpg" width="112" /></a></div>
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
கடந்த வாரம் சரித்திரப் பாடத்திட்டத்தின் வழியே அகிலஇந்திய சுற்றுலா சென்று திரும்பியிருந்தோம். இந்தியாவின் மிக முக்கியமான இடங்களை நேரில் கண்டு திரும்பியதற்குப்பிறகு நான் எடுக்கும் முதல் சரித்திரப் பாடம் இது என்பதால் மாணவர்களுக்கு என் பாடத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. சரித்திர</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
ஆசிரியர் இன்றைய வகுப்பில் என்ன நடத்தப்போகிறார்...? சரித்திர வகுப்பில் இடம் பெறக்கூடிய சரித்திர நாயகன் யார்... என்கிற ஆவல் அவர்களிடம் கூடிவிட்டிருந்தது. </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான் அன்றையத் தினம் வகுப்பை சுற்றுலா சென்று பார்த்து திரும்பியதிலிருந்து தொடங்கியிருந்தேன். ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து கரும்பலகையில் தடித்த எழுத்துகளால் எழுதினேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நாள், தினம், வகுப்பு, வருகை, பதிவு...என எதுவும் எழுதப்படாமல் இருந்த வகுப்பறையின் கறுப்பு நெற்றியில் இதை எழுதியதும் மாணவர்களின் மத்தியில் சலசலப்பானது. மாணவர்கள் ஒருவரையொருவர் திரும்பிப்பார்த்துகொண்டனர். சத்ரபதி சிவாஜி என்பதை சற்று பெரிய, தடித்த எழுத்துகளால் எழுதி அதை அலங்கரிக்கத் தக்கதாக மாற்றினேன். சத்ரபதி சிவாஜிக்கும் கீழ் அடிக்கோடிட்டு அதன் மேல் இரட்டை மேற்கோள் குறியிட்டேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இன்றைக்கு நான் நடத்தப்போகிற பாடம் மாவீரன் சத்ரபதி சிவாஜி...’ என்றதும் மாணவர்கள் அதை பின்தொடர்ந்து சொல்லத்தொடங்கினார்கள். ஒவ்வொரு மாணவனாக எழுந்து கரும்பலகையில் தடித்த எழுத்துகளால் எழுதியிருந்த ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’ என்பதை வாசிக்கச் சொன்னேன். அவர்கள்எழுந்து கையை இறுகக் கட்டிக்கொண்டு அதை வாசித்தார்கள்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
ஒரு மாணவன் கையைத் தூக்கினான். எழுந்து நிற்கவும் செய்தான். ‘ என்ன...?’ என்றவாறு அவனை நான் நிமிர்ந்து பார்த்தேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ குரு..நீங்கள் எழுதியதில் பிழை இருக்கிறது...’ என்றான். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
எனக்கு வந்ததே கோபம்! இதுநாள் வரைக்கும் என் வகுப்பில் வந்திராத எதிர்வினை அன்றைய தின வகுப்பில் வந்திருந்தது. நான் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக அது இருந்தது. நான் கேட்டேன் ‘ எழுத்துப் பிழையா, சொற்பிழையா, பொருள் பிழையா...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் சொன்னான் ‘ சரித்திரப்பிழை’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
என் பாடத்தில் பிழைக் கண்டுப்பிடித்துவிட்ட கொண்டாட்டத்தில் அவன் இருந்தான். அந்த வகுப்பின் கடைசி இருக்கையில் அவன் உட்கார்ந்தவனாக இருந்தான். அவன் அப்படிச் சொன்னதும் மற்ற மாணவர்கள் என்னை ஒருவிதமான பார்வையில் பார்க்கத் தொடங்கினார்கள். நான் அவனிடம் கேட்டேன். ‘ என்ன பிழை...? எங்கே சுட்டிக்காட்டு பார்க்கலாம்....?’. </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் சொன்னான். ‘ வசந்த மாளிகையைக் கட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி என இருக்க வேண்டும்’.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் அப்படிச் சொன்னதும் மற்ற மாணவர்கள் ‘கொல்’லெனச் சிரித்தார்கள். என் வகுப்பில் நான் யாரையும் சிரிக்க அனுமதிப்பதில்லை. சரித்திரப்பாடத்தில் போருக்கும், படையெடுப்பிற்கும்தான் இடம். சிரிப்புக்கு ஏது இடம்...? நான் என் ஆட்காட்டி விரலை உதட்டிற்குக் கொண்டுச்சென்று ‘உஷ்!’ என்றவாறு அவர்களின் சிரிப்பை மிரட்டலில் குவித்தேன். அப்படியும் அவர்கள் சிரிக்கவே செய்தார்கள். என் கையிலிருந்த பிரம்புக்கம்பின் வழியே அவர்களை அமைதிக்கு கொண்டு வந்திருந்தேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span> </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆக்ரா யமுனை ஆற்றாங்கரையில் இருக்கும் தாஜ்மகாலைத்தான் சொல்கிறேன். அதைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி. அதைத்தான் கரும்பலகையில் எழுதியிருக்கிறேன் ’ என்றேன். மாணவர்கள் என்னையும் கேள்விக்கேட்ட மாணவனையும் மாறிமாறி பார்த்தார்கள். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான் கையில் வைத்திருந்த பிரம்புக் கம்பை கரும்பலகைக்கு கொண்டுச்சென்று எழுத்துகளைச் சொல்லி வாசித்துக்</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
காட்டினேன். ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவர்களும் அதைப் பின்தொடர்ந்து சொல்பவர்களாக இருந்தார்கள். கேள்விக் கேட்ட அந்த ஒரு மாணவன் மட்டும் என்னை பின்தொடர்ந்து சொல்லாமல் வெறுமென நின்றுகொண்டிருந்தான்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ குரு...எனக்கொரு சந்தேகம்..’ என்றவாறு அவன் திரும்பவும் கைத்தூக்கினான். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ என்ன சந்தேகம்...?’ என்றேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ நேற்றைக்கு வரைக்கும் தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான்.. இன்றைக்கு எப்படி அது சத்ரபதி சிவாஜி ஆனது...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
மாணவர்கள் அவனது கேள்வியில் அர்த்தம் பொதிந்திருப்பதைப் போல பார்த்தார்கள். என் கட்டமைத்திருந்த வகுப்பின் மொத்த அமைதியும் அந்த ஒரு கணத்தில் நொறுங்கிவிட்டிருந்தது. மாணவர்களின் மொத்தப் பார்வையும் என்னிடமிருந்து விலகி அவன் பக்கமாகத் திரும்பியது. நான் அவனை என் அருகினில் அழைத்தேன். ஒரு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச பயமுமில்லாமல் அவன் என் அருகே வந்து நின்றான். கையைக் கட்டச் சொன்னேன். இறுகக் கட்டினான். அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்தது. அக்கேள்வியின் வழியே தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான் என அவன் வாயால் அவனே சொல்ல வைக்க வேண்டியிருந்தது. அவனுக்கான கேள்விகளுடன் என் சரித்திர பாடத்தைத் தொடர்ந்தேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் இல்லையா....?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஆமாம்..குரு....’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளியில் ஒரு சிலை இருக்கிறது இல்லையா...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஆமாம்...குரு. இருக்கிறது.’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ யாருடைய சிலை அது...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இராசராச சோழன் சிலை '</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அவருடைய சிலையை ஏன் அங்கு நிறுத்தியிருக்கிறார்கள்...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தஞ்சாவூர் பெரிய கோவில் அவரால் கட்டப்பட்டது '</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ யாரால் கட்டப்பட்டது...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இராசராச சோழனால்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ சரியாகச் சொன்னாய்...! அடுத்து, முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றிருந்தோம். இல்லையா...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஆமாம்..குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அணைக்கு வெளியே ஒரு சிலை இருந்ததா...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஆம் இருந்தது குரு’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ யாருடைய சிலை அது...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ பென்னி குயிக் சிலை...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ முல்லை பெரியாறு அணையைக் கட்டியது யார்...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அவர்தான் குரு..’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அந்த அணையைக் கட்டியது அவர் என்பதால் அவருடையச் சிலை அங்கே நிறுவப்பட்டிருக்கிறது...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஆமாம் குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அடுத்து நாம் புதுக்கோட்டை கோர்ட் வளாகத்திற்கு சென்றோம் இல்லையா...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ சென்றோம் குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ வெளியே யாருடைய சிலை இருந்தது..?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘விஜய ரெகுநாத தொண்டைமான் சிலை ’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அக்கோட்டையைக் கட்டியது யார்...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அவர்தான் குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அடுத்து கல்லணைக்குச் சென்றோம்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ சென்றோம் குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ வெளியில் கரிகாலன் சோழன் சிலை இருந்தது’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இருந்தது குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ கல்லணையைக் கட்டியவர் கரிகாலன் சோழன்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ நிச்சயமாக குரு..’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அடுத்து நாம் எங்கே சென்றோம்...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ டெல்லிக்கு சென்றோம் ...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு யாருடைய ஆட்சிக்காலத்தில் மாற்றப்பட்டது?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ வெல்லிங்டன் காலத்தில் குரு’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அதற்கான அடிக்கல் நாட்டும் விழா டெல்லியில் எங்கே நடந்தேறியது..?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ கொரோனஷன் பார்க்கில் குரு...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘அந்த பார்க்கில் யாருடைய சிலை இருக்கிறது...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ வெல்லிங்டன் சிலை குரு’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அடுத்து நாம் எங்கே சென்றோம்....?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தாஜ்மகால்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தாஜ்மகாலுக்கு வெளியே யாருடைய சிலை இருக்கிறது...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ சத்ரபதி சிவாஜி’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ அப்படியானால் தாஜ்மகாலைக் கட்டியது யார்...?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
என் கேள்விகளால் அவன் மட்டுமல்ல. பலரும் மிரண்டு போயிருந்தார்கள். அத்தனை நேரம் அவன் பக்கமாக இருந்த மாணவர்கள் என் பக்கத்திற்கு வந்திருந்தார்கள். என் கடைசிக்கு கேள்விக்கு என் வகுப்பில் குற்றம் கண்டுப்பிடித்தவனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் கையறு நிலையில் ஆயுதத்தை இழந்து சத்ரபதி சிவாஜி முன் ஔரங்கசிப் நின்றதைப்போல நின்றுகொண்டிருந்தான். அவனது நிலையைப் பார்த்து மாணவர்கள் கைக்கொட்டி சிரிப்பதாக இருந்தார்கள். நானும் அவனைப் பார்த்து சிரிக்கவே செய்தேன். அவன் எந்தவொரு சலனமுமில்லாமல் நின்றுகொண்டிருந்தான். நான் அதேக் கேள்வியை பிற மாணவர்களைப் பார்த்து கேட்டேன். ‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்...?’ அவர்கள் ஒரு சேரச் சொன்னார்கள். ‘சத்ரபதி சிவாஜி’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான், கேள்விக்கேட்ட மாணவனின் முகவாய்கட்டையை உயர்த்தி விழிகளால் கேட்டேன். ‘ இப்ப என்னச் சொல்கிறாய்...தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதானே...?’<span style="white-space: pre-wrap;"> </span>அவன் என்னை ஒரு கணம் துலாவிப்பார்த்தான். ‘ அப்படியானால் ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு முன்னால் ஈ.வெ.ரா பெரியார் சிலை இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோயிலைக் கட்டியது அவரா குரு....?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு ஒன்றும் நடக்காததைப்போல நின்றுகொண்டிருந்தான். மாணவர்கள் நம் சரித்திர ஆசிரியரைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்டுவிட்டானே என்பதைப்போல பார்த்தார்கள். ஒன்றிரண்டு பேர் சிரிக்கச் செய்தார்கள். எனக்கு கோபம்தான் வந்தது. சரித்திரத்தில் கையை வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது...! நான் அவனது காதைப் பிடித்து திருகியவாறு கேட்டேன். ‘ அடேய்....எதைக் கொண்டுபோய் எதனுடன் முடிச்சிப்போடுகிறாய்....நான் சொல்வது டெல்லி, டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியை...’ </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இந்திய பாராளுமன்றத்திற்கு முன் காந்தியும், அம்பேத்கரும் சிலையாக நிற்கிறார்கள். அப்படியானால் பாராளுமன்றத்தைக் கட்டியது காந்தியும் அம்பேத்கரருமா குரு....?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் ஒரு பயமுமில்லாமல் இக்கேள்விகளைக் கேட்டிருந்தான். எனக்கு வந்திருந்த கோபத்திற்கு அவனது வாயைப் பிடித்து ஊசி நூலால் தைத்திருக்க வேண்டும். அவனது தலையில் ‘நங்’கென்று ஒரு கொட்டு வைத்தேன். ‘ என்ன சொல்ல வருகிறாய் நீ....?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ குரு, எனக்கு நன்றாகத் தெரியும். நான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். பல சரித்திரக் கதைகள் கேட்டிருக்கிறேன். யமுனா ஆற்றாங்கரை தரிசு நிலத்தில் தன் காதலி மும்தாஜ் </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நினைவாக ஷாஜகானால் கட்டப்பட்டதுதான் தாஜ்மகால். அதை கட்டியவர் சத்ரபதி சிவாஜியாக இருக்க வாய்ப்பில்லை. '</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் அதைச் சொல்லிவிட்டு என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான் என் கருத்திலிருந்து விலகப்போவதில்லை என்பதைப்போல அவன் நின்றுகொண்டிருந்தான். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இல்லை...! நான் சரித்திர ஆசிரியர். நான் சரித்திர பாடத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றவன். நான் சொல்வதில் ஒரு தவறும் இருக்க முடியாது. நான் சொல்வதை ஒப்புக்கொள். தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ நிரூபியுங்கள்...’ என்பதைப் போல அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்தான். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ நிரூபித்தால்...?’ நான் கேட்டிருந்தேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஏற்றுக்கொள்கிறேன்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ என்னவென்று..?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான் என்று...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ திரும்பவும் அதேயேதானே சொல்கிறாய்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ உங்களால் நிரூபிக்க முடியாது...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ நிரூபித்துகாட்டுகிறேன் பார்....’ என்றவாறு நான் வகுப்பை விட்டு வெளியேறினேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான் வகுப்பறையை விட்டு வெளியேறியதற்கு பிறகு அவர்கள் என்னப் பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். கேள்விக்கேட்டவன் ஓர் அச்சமுமில்லாமல் உட்கார்ந்திருந்தான். மற்ற மாணவர்கள் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். ‘ டேய் இப்பவெல்லாம் அனைவரும் தேர்ச்சி என்பது கிடையாது. தேவையில்லாமல் நீ சரித்திர ஆசிரியரிடம் முரண்டுப்பிடித்துகொண்டிருக்கி<wbr></wbr>றாய். நீ இந்த வருடம் இதே வகுப்பில் தேங்கத்தான் போகிறாய்...உன் நன்மைக்காகச் சொல்றோம். அவரிடம் முரண்டுப்பிடிக்காதே. அவர் சொல்வதை ஏற்றுக்கொள். அவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும். ஒவ்வொரு வருடமும் அவரது பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துகொண்டிருக்கிறார். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கிறார். அவர் நினைத்தால் யாரையும் தேர்ச்சி பெறவும், இதே வகுப்பில் தேக்கவும் முடியும். உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். அவரிடம் மன்னிப்பு கேள். அவர் வந்ததும் தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான் என்று ஒப்புக்கொள்.....’ </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான் ஐந்து மாணவர்களுடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
வகுப்பு பழையபடி அமைதிக்கு வந்திருந்தது. கதவுகளை இறுக அடைத்து மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். மாணவர்கள் பெஞ்சின் விளிம்பிற்கு வந்திருந்தார்கள். நான் வெளி வகுப்பிலிருந்து அழைத்து வந்திருந்த ஐந்து மாணவர்களை என் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
'இவர்கள் ஐந்து பேரும் என் முந்நாள் மாணவர்கள். இவர்கள் கடந்த வருடங்களில் நூற்றுக்கு நூறும், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள். இவர்களை வைத்துதான் நான் தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என் நிரூபிக்க இருக்கிறேன்...’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
மாணவர்கள் என் நிரூபணத்தை ஆமோதிப்பதைப்போல பெரிதாக தலையாட்டினார்கள். அவன் மட்டும் என்னிடமிருந்து பார்வையை எடுத்து அவர்களின் மீது குவிக்கத் தொடங்கினான். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ நிரூபிக்கலாமா....?’ அவனைப்பார்த்து கேட்டேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ ஆம்...’ என்றான்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
நான் அழைத்து வந்திருந்த மாணவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டேன். ‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்.....?’. அவர்கள் சற்றும் யோசிக்காமல் ஒரு சேரப் பதில் சொன்னார்கள். ‘ சத்ரபதி சிவாஜி’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ இப்ப என்னச் சொல்கிறாய். ஏற்றுக்கொள்கிறாய் தானே..?</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவன் அப்பொழுதும் சிவாஜியை ஏற்றுக்கொள்ளாதவனைப்போல நின்றுகொண்டிருந்தான். கரும்பலகையை சுத்தமாக அழித்து அதில் ‘தாஜ்மகாலைக் கட்டியவர்’ என எழுதி அதற்கும் அருகில் கோடிட்ட இடத்தை நிரப்பும் கோட்டை இட்டிருந்தேன். அவன் என் அருகினில் வந்தான். அவனிடம் சுண்ணாம்புக் கட்டியைக் கொடுத்தேன். அவன் அதை வாங்கினான். ‘ கோடிட்ட இடத்தில் நிரப்பு’ என்றேன். அவன் மெல்ல கரும்பலகைக்கு அருகில் சென்றான். ஒரு பதிலும் எழுதாமல் நின்றுகொண்டிருந்தான். என் கையில் பிரம்பு இருந்தது. அதனால் அவனுடைய முகவாய்க்கட்டையை உயர்த்தி அதற்கானப் பதிலை சத்ரபதி சிவாஜி என்று எழுது என்றேன். அவன் அதில் ஷாஜகான் என்றே எழுதினான். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
எனக்கு வந்தக் கோபத்தில் அவனை முட்டிக்கால் போடச்சொல்லி நான்கு அடிகள் கொடுத்தேன். என்னை அவன் இத்தனைப் பேருக்கும் முன்னால் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். அவனுடைய பெற்றோரை வரச்சொல்லி இவன் எதற்கும் இலாயக்கு அற்றவன் . ஆசிரியரை மதிக்கத் தெரியாதவன். நான் சொல்லிக்கொடுக்கும் எதையும் காதுக்கொடுத்து கேட்க மாட்டேங்கிறான். அவன் போக்கில் தான்தோன்றித் தனமாகச் செயல்படுகிறான். இவன் கலகக்காரன். தேசப்பற்று அற்றவன். தேசத்தின் துரோகி. இவனை இப்பள்ளியில் வைத்திருந்தால் இப்பள்ளி விலங்காது. வீட்டில் வைத்திருந்தால் வீடு விடியாது. இவனை வைத்துகொண்டு எப்படியாம் நாட்டை நல்லரசாகவும், வல்லரசாகவும் மாற்றுவது...இவனது மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு இப்பொழுதே இப்பவே இந்த வினாடியே இந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள்...என்றவாறு அவனது மாற்றுச்சான்றிதழை எடுத்து இவன் ஒழுங்கீனவன் என்று பச்சை மையில் எழுதி அவனது முகத்தில் எறிந்தேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
அவனது பெற்றோர்கள் அவனுக்காக கண்ணீர் சொரிந்து மன்னிப்புக் கேட்டார்கள். எங்களுக்காக அவனை இந்த ஒரு முறை மட்டும் மன்னியுங்கள் என்றார்கள். அவனை மன்னித்தேன். ‘இனி நான் சொல்வதைக் கேட்டு ஒழுங்காகப் படிக்க வேண்டும்...’ என்றவாறு அவனைக் கண்டித்து திரும்பவும் வகுப்பில் சேர்த்துகொண்டேன்.</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
மறுநாள் வகுப்பிற்கு சென்றேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
தேர்வு நடத்தினேன். சரித்திர</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
வகுப்பில் நான் நடத்தியது ஒரே ஒரு செய்திதான். அந்த ஒன்றை மட்டும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது வகைக் கேள்வியாகக் கேட்டிருந்தேன். </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்....?’</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
1. சிவாஜி</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
2. சத்ரபதி சிவாஜி </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
3. மராட்டிய வீரன் சிவாஜி </div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
4. சிவாஜி ராஜே போஸ்லே</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
வகுப்பின் அத்தனை மாணவர்களும் நான்கில் ஒரு விடையைத் தேர்வு செய்திருந்தார்கள். அவன் ஒருவன் மட்டும் 5 என்கிற எண்ணுருடன் ‘ஷாஜகான்’ என்று எழுதியிருந்தான்.<br />
<br />
நன்றி - தளம் ஆகஸ்ட் 2018</div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span></div>
<div style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;">
<span style="white-space: pre-wrap;"> </span>- </div>
</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-48948543047655328522018-08-29T15:08:00.000+05:302018-11-07T12:42:48.797+05:302018 இல் நான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">சிறந்த எழுத்தாளர் விருது</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3DwnOb-fcDkHXX49-sea8iDoDWVmw9wwxzxuIJCRKjJpLKPDOSJN1CyUx88_TqMF3iLTvUUfoFAEOSo_JySO2ohvpk_uKhHGJGU-qdD1wsjCntI3I-hZCCpTDDxF12wOQCMHOXdZF1f4/s1600/IMG_1801+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1067" data-original-width="1600" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3DwnOb-fcDkHXX49-sea8iDoDWVmw9wwxzxuIJCRKjJpLKPDOSJN1CyUx88_TqMF3iLTvUUfoFAEOSo_JySO2ohvpk_uKhHGJGU-qdD1wsjCntI3I-hZCCpTDDxF12wOQCMHOXdZF1f4/s640/IMG_1801+copy.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDRNiop0FBMqbx3LPrM1kExtgEVirBDHSQkOKxTcvL7U3AJsIeVCiFJPSsN_JBIVkDylaebjGOQG31f0JqEICsVK8H8fxaNdcGlzIlbP2b2iedBwZE0-jaR1NzP_QSjd0fsJYoEcREnsE/s1600/IMG_1802+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1067" data-original-width="1600" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDRNiop0FBMqbx3LPrM1kExtgEVirBDHSQkOKxTcvL7U3AJsIeVCiFJPSsN_JBIVkDylaebjGOQG31f0JqEICsVK8H8fxaNdcGlzIlbP2b2iedBwZE0-jaR1NzP_QSjd0fsJYoEcREnsE/s640/IMG_1802+copy.jpg" width="640" /></a></div>
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"> 29 ஆவது ஆண்டாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் பாரம்பரியமிக்க புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நடந்துவருகிறது. இக்கண்காட்சியில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் , பதிப்பாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்குவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு முத்தன் பள்ளம் நாவலாசிரியர் அண்டனூர் சுரா அவர்கள் சிறந்த எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. </span><br />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"><br /></span>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"><br /></span>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"><br /></span>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"><br /></span>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">18.08.2017</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxeDxP33bAOfqW0Op-YqNXH6Bzi5xFMkqkTcZCf38b64qBoxvP-WXKobStFfQ3BJz8pkmHJ2tG-3Z9m78bh7_zKuQTNjRpYTp49pejkitMW05ZjJvHpufVPfcZs5cBIq8vfLjclFKoiLg/s1600/IMG_20180818_184226.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxeDxP33bAOfqW0Op-YqNXH6Bzi5xFMkqkTcZCf38b64qBoxvP-WXKobStFfQ3BJz8pkmHJ2tG-3Z9m78bh7_zKuQTNjRpYTp49pejkitMW05ZjJvHpufVPfcZs5cBIq8vfLjclFKoiLg/s320/IMG_20180818_184226.jpg" width="180" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQn0Fh5sT5INNqzEj6RTsVCy-j9irv5WyaXQ_uy61iW1RFLBFm_3eLO9dU2doR9PY4SKzfGZejwxN0vP-uSsiWBXcAeH9OsoIDX-pQy3O-JZfxTF2Hr-GPNPPkgt7kGidkK_VDPmGQjms/s1600/IMG_20180818_202449.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQn0Fh5sT5INNqzEj6RTsVCy-j9irv5WyaXQ_uy61iW1RFLBFm_3eLO9dU2doR9PY4SKzfGZejwxN0vP-uSsiWBXcAeH9OsoIDX-pQy3O-JZfxTF2Hr-GPNPPkgt7kGidkK_VDPmGQjms/s320/IMG_20180818_202449.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpqnLIODEwTwI4pukcSU935jU61_UvAIqEX1cDSuOCQg2hMT9njvGV9qtmZGzHDIUJGgtE9QWoNc1_oI1giog58iP1h-ISgZ_6YkMWa7LD7QqmtnAEjC1ef5Sro9wfKK2wKIegeZJnc70/s1600/IMG_20180818_202455.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpqnLIODEwTwI4pukcSU935jU61_UvAIqEX1cDSuOCQg2hMT9njvGV9qtmZGzHDIUJGgtE9QWoNc1_oI1giog58iP1h-ISgZ_6YkMWa7LD7QqmtnAEjC1ef5Sro9wfKK2wKIegeZJnc70/s320/IMG_20180818_202455.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj16RBElZJ6xrQMu_5BSrrupSHJc2TP1rcwnL1bufXXG05jFrTX-fUW0jPxONBL9_YRypzba7ytOkc1ZQq072tA5aKBbsTtsm5TmyeafEW3REVXVhY0FVmds4ZIpeYfk8PA65iNAFWSvMw/s1600/IMG_20180818_202501.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj16RBElZJ6xrQMu_5BSrrupSHJc2TP1rcwnL1bufXXG05jFrTX-fUW0jPxONBL9_YRypzba7ytOkc1ZQq072tA5aKBbsTtsm5TmyeafEW3REVXVhY0FVmds4ZIpeYfk8PA65iNAFWSvMw/s320/IMG_20180818_202501.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJTAjQT4RtK6w-M7RqUIzlDarTqgejp7BSTfeYiCiA5uWQ8GJQ6wlpS9jV9wrXE6TfTm5-znmZG0QoTmTTjkKyqUcnGvsGhGAtI8TcDumZUYxN3Jm1ltft-afP4eHEAVRMfllDxprf0v4/s1600/IMG_20180818_202532.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJTAjQT4RtK6w-M7RqUIzlDarTqgejp7BSTfeYiCiA5uWQ8GJQ6wlpS9jV9wrXE6TfTm5-znmZG0QoTmTTjkKyqUcnGvsGhGAtI8TcDumZUYxN3Jm1ltft-afP4eHEAVRMfllDxprf0v4/s640/IMG_20180818_202532.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVfUj0r-TNo8j7FbzJKZfN9Y7Rz6W6sZQ5KK-4ZmQM8zv3NkZDdqP4tTG44egmCxG6Fs6zezPMNVZjOWFYirq_kAPiuR2K9Mkd73N4CykbF-AzX9jmshGicbfJysIsUMUVoi9lXmjXJ4E/s1600/IMG_20180818_202553.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVfUj0r-TNo8j7FbzJKZfN9Y7Rz6W6sZQ5KK-4ZmQM8zv3NkZDdqP4tTG44egmCxG6Fs6zezPMNVZjOWFYirq_kAPiuR2K9Mkd73N4CykbF-AzX9jmshGicbfJysIsUMUVoi9lXmjXJ4E/s320/IMG_20180818_202553.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWfKjSGwXRq6aFDWo7D8GtvCLlV3D1awyQ0xf6zlfyOkih7lOJQ7W1oY89dbHxXmMuqXSMnf5ibYzGH-mUFK_rnEIlHBXOt0vS3bA-c0OTnThYotOI_gTcVnWVWvVQCPuby5cfI4jjnag/s1600/IMG_20180818_202711.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWfKjSGwXRq6aFDWo7D8GtvCLlV3D1awyQ0xf6zlfyOkih7lOJQ7W1oY89dbHxXmMuqXSMnf5ibYzGH-mUFK_rnEIlHBXOt0vS3bA-c0OTnThYotOI_gTcVnWVWvVQCPuby5cfI4jjnag/s320/IMG_20180818_202711.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKN3Bbn0wmCdx0CNcGD-30osZ7NcJ_BVTNUhhZvICWxabWfn0ooIAxEs-7TiwkKsqkd27DQx6-ekfE0Ys8NR8gIUhgZAs0Mh3ssIUT02YKTgMmTgQtMenTi_XectFc0NxhkPHn2uY2WlA/s1600/IMG_20180818_202741.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKN3Bbn0wmCdx0CNcGD-30osZ7NcJ_BVTNUhhZvICWxabWfn0ooIAxEs-7TiwkKsqkd27DQx6-ekfE0Ys8NR8gIUhgZAs0Mh3ssIUT02YKTgMmTgQtMenTi_XectFc0NxhkPHn2uY2WlA/s320/IMG_20180818_202741.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDYolTTPaxhxJse6Rrr2A3uJuEeJRHl4JbIxQWXyhOC40bk6d03z_um5n17g3rF9mGUsKd3b-yD_oITK0I62IQsdlcII-sX46DLYztXmenSK9pjLcd8ViG7-F0jT_aUXzj_NuCC7_CwE8/s1600/IMG_20180818_202836.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDYolTTPaxhxJse6Rrr2A3uJuEeJRHl4JbIxQWXyhOC40bk6d03z_um5n17g3rF9mGUsKd3b-yD_oITK0I62IQsdlcII-sX46DLYztXmenSK9pjLcd8ViG7-F0jT_aUXzj_NuCC7_CwE8/s320/IMG_20180818_202836.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"><br /></span>
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;">சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.எ அரங்கில் நடைபெறும் புத்தகக் கணகாட்சியில் பாரதி புத்தகலாயம் அரங்கில் அண்டனூர் சுராவின் கொங்கை நாவல் வெளியிடப்பட்டது.<br />
முதல் பிரதியை நடிகரும் முற்போக்கு செயற்பாட்டாளருமான தோழர் ரோகிணி வெளியிட , மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் க.சு.சங்கீதா பெற்றுகொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் ஆர்.நீலா, வெய்யில், மு.கீதா, விஜயலெட்சுமி, உமா மோகன் , மனுஷி, பெருமாள் ஆச்சி, வடுவூர் சிவ. முரளி எனப் பலரும் பெற்றுகொண்டார்கள்.<br />
<br />
நூல் குறித்து உரையாற்றிய பேராசிரியர் க.சு.சங்கீதா , நாவலின் தலைப்பே அதிரும்படியாக இருக்கிறது, இந்நாவல் குறித்து இரு விதமாக விமர்சனம் வர வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் கொங்கை குறித்து பேச வேண்டிய காலத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என உரையாற்றினார். இவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் மு.கீதா, நாவல் வாசிக்க இலகுமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பெண்சார் பார்வையில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்றார். ஆர்.நீலா, குட்டி ரேவதி எழுதிய முலைகள் நூல் குறித்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் தற்போது கொங்கை வெளிவந்துள்ளது என்றார். வெய்யில், முலை என்று நாவலுக்கு பெயர் வைக்கப்பட்டு கொங்கை என மாற்றியதைச் சுட்டிக்காட்டினார். இந்நாவல் ஆவனப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றார். இந்நாவலை வெளியிட்ட ரோகிணி அவர்கள் , ' இதுபோன்ற விடயங்கள் பேசப்பட வேண்டிய ஒன்று. ஆண்களின் பார்வையில் கொங்கை என்பது மட்டுமல்ல, பெண்களின் பார்வையில் கொங்கை எப்படியாக இருக்கிறது என்பதையும் இந்நாவலை வாசித்து தெரிந்துக்கொள்ள முடியும் ' என்றார். இறுதியாக , ஏற்புரையாற்றிய நூலாசிரியர் அண்டனூர் சுரா , கொங்கை , முலை இரண்டும் ஒன்றைக் குறிக்கும் ஒத்தச் சொல் என்றாலும் வர்க்க வேறுபாடும், அதன் பொருளும் , பார்க்கும் பார்வையால் வித்தியாசம் அடைகிறது என்றவர், இந்நாவல் குறித்து பெண்களின் விமர்சனங்களை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார். வெளியிட்ட அன்றைய தினம் முதலே பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்நாவல் கி.பி அரவிந்தன் நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.</span><br />
<span style="text-align: center;"><br /></span>
<span style="text-align: center;"><br /></span>
<span style="text-align: center;">நவம்பர் ஞானம் இதழில் - சிறுகதைப்போட்டி முடிவு அறிவிப்பு - வீழ்வேனொன்றோ நினைத்தாய்? என்கிற எனது சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றது.</span><br />
<span style="text-align: center;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Hu_IGJTmO3ym_iUPzCMQaflPJe9b6mvemVmejnkUxoTZMCICeuJvMtq9DvUl91ef_KrrcgRB1Y1puduPRcjT0322Wv5vWNGZZA-RNLyy5Nxvol8JoJmIIAg1xIfY146db53V3rpplk4/s1600/Screenshot_2018-11-02-12-17-30-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="397" data-original-width="499" height="508" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Hu_IGJTmO3ym_iUPzCMQaflPJe9b6mvemVmejnkUxoTZMCICeuJvMtq9DvUl91ef_KrrcgRB1Y1puduPRcjT0322Wv5vWNGZZA-RNLyy5Nxvol8JoJmIIAg1xIfY146db53V3rpplk4/s640/Screenshot_2018-11-02-12-17-30-1.png" width="640" /></a></div>
<br />
<span style="background-color: white; font-family: "helvetica neue" , "helvetica" , "arial" , sans-serif; font-size: 15px;"><br />
<br />
</span><br />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" />
<br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px;" /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-39420531031500771872018-08-21T15:45:00.002+05:302018-08-21T15:45:32.103+05:30ஆண் எழுதிய பெண் புத்தகம்! | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories http://www.noolveli.com/detail.php?id=932<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆண் எழுதிய பெண் புத்தகம்! | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories http://www.noolveli.com/detail.php?id=932</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-69999605945212311532018-08-01T20:34:00.002+05:302018-08-01T20:37:47.929+05:30சிறுகதை - வீட்டில் யாருமில்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தான் தங்கியிருக்கும் ஓட்டலின் கீழ்த்தளத்தில் நடிகை சுஷ்மிதா தங்கியிருக்கிறச் செய்தியை தன் அதீதமான மோப்பச் சக்தியால் கண்டறிந்தார் அமைச்சர் சுந்தரலிங்கம்.<br />
அவர், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும் இங்கு யார், யாரெல்லாம் தங்கியிருக்கிறார்கள் என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக கண்டுப்பிடித்துவிடும் அசாத்திய திறமைமிக்கவர். அன்றைய தினம் நட்சத்திர ஓட்டல் இருந்த படபடப்பு, சுறுசுறுப்பு,,. இதை வைத்துப் பார்க்கையில் ஒரு நடிகர் அல்லது நடிகை இவர்களில் யாரேனும் ஒருவர்தான் தங்கியிருக்க வேண்டும் என்பதாக ஊகித்தார். அவரது ஊகத்தின் படியே திரைத்துறையைச் சார்ந்தவர்களின் நடமாட்டம் ஓட்டலில் அதிகமாக இருந்தது. ஒரு இளைஞனைக் கூப்பிட்டு கேட்டார் ‘ தம்பி , பக்கத்தில் படம் சூட்டிங்க் எதுவும் நடக்குதா..?’<br />
‘ இம்...’ என்றவாறு அவன் பூரித்தான்.<br />
‘ ஹீரோ, ஹீரோயின்...?’<br />
‘ வினோத், சுஷ்மிதா’<br />
சுந்தரலிங்கம் இருவரையும் மனதிற்குள் ஓடவிட்டு பார்த்தார். சுஷ்மிதா சினிமா துறையில் உச்சத்தில் இருக்கின்ற நடிகை. அதை நினைக்கையில் அவருக்கு பெருமிதமாக இருந்தது. நேராக அவர் வரவேற்பு அறைக்குச் சென்று தானொரு அமைச்சர் என்பதைக் காட்டிக்கொள்ளாதவராகக் கேட்டார்‘ ஹீரோயின் சுஷ்மிதாவிற்கு எல்லா வசதியும் செய்து கொடுத்திருக்கிறீங்களா...?’<br />
‘ ஆம், கொடுத்திருக்கோம் சார்...’<br />
‘ கீழ்த்தளத்தில்தானே ரூம்...?’<br />
‘ ஆமாம் சார்...ரூம் நம்பர் 107...’<br />
பலே! சிரித்துகொண்டார் சுந்தரலிங்கம்.<br />
அவர் அமைச்சராகிய நாட்கள் கொண்டே அவருக்கொரு கனவு இருந்து வந்தது. யாரேனும் ஒரு நடிகையுடன் நெருங்கிப்பழகி சினேகம் கொள்ள வேண்டும் என்று. அக்கனவை சுஷ்மிதா வாயிலாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார்.<br />
அமைச்சர் தன் உதவியாளரை அழைத்து கீழ்த்தளத்தில் தங்கியிருக்கும் நடிகையின் பெயரைச் சொல்லி அவரை நான் சந்திக்க வேணும் என்றார். அதைச் சொல்கையில் அவரது முகத்தில் வெட்கம் வழிந்தது.<br />
‘ ஏற்பாடு செய்கிறேன் சார்’ என்றார் உதவியாளர்.<br />
‘ எப்படி...?’<br />
உதவியாளர் நெற்றியைச் சுழித்து நாசியும் கண் புருவமும் கூடுவாயில் விரல்களைக் கொடுத்து நீவி விட்டபடி ‘ ஆம், ஒரு ஐடியா இருக்கு சார்’ என்றார்.<br />
‘ என்ன ஐடியா...?’<br />
‘ நீங்க அவங்கக்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கணும்...?’<br />
அமைச்சருக்கு கோபம் வந்தது. ‘ நான் பச்சை மையில கையெழுத்து போடுறவன். என்னை போயி ஆட்டோகிராப் வாங்கச் சொல்றே...?’<br />
உதவியாளரின் ஐடியா உடைந்து சுக்கு நூறானது. அவர் வெறுமெனத் தலையைச் சொறிந்தபடி நின்றார்.<br />
‘ இப்படி செய்தால் என்ன...?’தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டார் அமைச்சர்.<br />
‘ எப்படி சார்...?’<br />
‘ என்னையும், நான் பார்க்கிற இலாகாவையும் சொல்லி நான் சந்திக்க விரும்புகிற செய்தியை அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லி அழைச்சிக்கிட்டு வாயேன்...’<br />
‘ ஒரு வேளை மாட்டேனு சொல்லிட்டா, தலைக்குனிவு உங்களுக்கில்ல, நீங்க வகிக்கிறத் துறைக்கு சார்...’<br />
‘ எப்படிய்யா அந்தப் பொண்ணு அப்படிச் சொல்லும். நான் அமைச்சர்ய்யா...’<br />
‘ அந்தப் பொண்ணு மட்டும் என்னவாம்., இன்றைக்கு அந்தப்பொண்ணு சினிமா இன்டஸ்ட்ரீல உச்சம்...’<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnfvy6lLyg4zWyLr62iFTWDewxdbU1RkOuT3qze9DR1OhQxmVFMrGDVOe2R67Resw1GtZP4V5GhR0MAU6xTFvMp7xJZ2fEBb1Iaw063Oh2GH2hHBpeoYjS3UJ9bvGaNXRzefDv4CvyTqA/s1600/20180730_174416.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnfvy6lLyg4zWyLr62iFTWDewxdbU1RkOuT3qze9DR1OhQxmVFMrGDVOe2R67Resw1GtZP4V5GhR0MAU6xTFvMp7xJZ2fEBb1Iaw063Oh2GH2hHBpeoYjS3UJ9bvGaNXRzefDv4CvyTqA/s640/20180730_174416.jpg" width="360" /></a></div>
<br />
‘ கலைமாமணி விருது வாங்கித்தாறேனு சொல்லி அழைச்சிக்கிட்டு வாய்யா...’<br />
‘ அதை வாங்கிக்கொடுக்க ஆயிரம் பேரு இருக்காங்க...’<br />
அமைச்சரால் வேறெதையும் யோசிக்க முடியவில்லை. பற்களால் உதடுகளை நீவி, முன் வழுக்கையை கைக்குட்டையால் துடைத்துகொண்டார்.<br />
‘நீங்க அந்த பொண்ணுக்கிட்ட ஆட்டோகிராப் வாங்க ஒரு துண்டுச்சீட்ட நீட்டுறதுல்ல எவ்வளவு குறைஞ்சிடப்போறீங்க சார்...’<br />
‘சரி, அப்படியேச் செய்யலாம்...’ என்றவாறு அமைச்சர் ஒரு வழிக்கு வந்தார்.<br />
உதவியாளர் கோப்புகளை அடுக்கி ஓரிடத்தில் வைத்துவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் நடந்தார்.<br />
‘ ஒன் மினிட் சின்னத்துரை. நான் அந்தப்பொண்ணுக்கிட்ட தனியாகப் பேசணும்..’<br />
‘ தனியானா...?’<br />
‘ கதவைச் சாத்திக்கிட்டு, சன்னல சாத்திக்கிட்டு அப்படியெல்லாம் இல்ல. தனியா பேசணும். நான் பேசிக்கிட்டு இருக்கிறது வெளியே தெரிந்தாலும் பரவாயில்ல. ஆனால் நான் பேசுறது வேற யாருக்கும் கேட்கக்கூடாது....’<br />
அறையை விட்டு வெளியேறினார் உதவியாளர். திரும்பி வருகையில் அவரிடம் ஒரு சம்மதக்கடிதமிருந்தது. <br />
<br />
<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>@@@<br />
அமைச்சர் - சுஸ்மிதா இருவரின் சந்திப்பும் அந்நட்சத்திர விடுதியின் விருந்தினர் அறையில் வெகு அமைதியாக நடந்துகொண்டிருந்தது.<br />
சுஸ்மிதா ஓரளவு உடம்பை மறைக்கும்படியான உடையில் இருந்தார். உடை நீண்டிருக்க வேண்டிய இடத்தில் சற்று குறுகியும், குறுக வேண்டிய இடத்தில் நீண்டுமிருந்தது. கால் மேல் கால் கிடத்திக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து நெற்றியில் விழும் குதிரை வால் முடிகளை விரல்களால் கோதி பின் பக்கமாக எடுத்துவிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.<br />
அமைச்சர் தன் பேச்சின் ஊடே நடிகையின் முகத்தை, கண்களை , உதட்டை, முகவாய் கட்டையை, கழுத்தை,...என இறங்கு வரிசையில் பார்த்துகொண்டு வந்தார்.<br />
திரையில் தெரிவதைப்போல அத்தனை அழகாக அவர் இருந்திருக்கவில்லை. ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கும்படியான அழகில் அவர் இருந்தார்.<br />
‘ எதாவது சாப்பிடுறீங்களா...?’ அமைச்சர் கேட்டார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEildclTRU1EJynVRY6mQ-mpW1iumBfRlnxNtWzDxnktQ16CDnkCIJwzZ-CA5ywbgruisw5BjBsOVgqowhElxaLFjCOyj5tjEI3ihEAFzGJPf_zdkv9QuSoS7VcqEZb2cigxCXCMdelwcCM/s1600/20180730_174426.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEildclTRU1EJynVRY6mQ-mpW1iumBfRlnxNtWzDxnktQ16CDnkCIJwzZ-CA5ywbgruisw5BjBsOVgqowhElxaLFjCOyj5tjEI3ihEAFzGJPf_zdkv9QuSoS7VcqEZb2cigxCXCMdelwcCM/s640/20180730_174426.jpg" width="360" /></a></div>
<br />
<br />
‘ என்ன சாப்பிடலாம்...?’<br />
‘ நீங்க சொல்லுங்க...’<br />
‘ காஃபி சாப்பிடலாமே...?’<br />
அமைச்சர் எழுந்து ‘ ரெண்டு காஃபி. நல்லா இருக்கணும். தாமதமானாலும் பரவாயில்லை....’ என்றார்.<br />
அவர் காஃபியை தாமதமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொல்லியிருந்தார்.<br />
அமைச்சர் முன்னே விடவும் நடிகையுடன் நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவரது மினிஸ்டர் வேட்டி நடிகையின் முழங்கால்களை மெல்ல உரசிக்கொண்டிருந்தது. பேச்சுக்கிடையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து தனது அலைபேசி எண்ணை எழுதி நடிகையுடன் நீட்டினார்.<br />
‘ என்னது...?’<br />
‘ என்னோட பர்சனல் நம்பர்...’<br />
‘ எனக்குத் தாறீங்க...’<br />
‘ எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும் எனக்கு கால் பண்ணுங்க...’<br />
நடிகை சிரித்தார். ‘ தேங்க்ஸ்’ என்றார்.<br />
‘ ஏன் சிரிக்கிறீங்க...?’<br />
நடிகை அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘ மினிஸ்டர்க்கிட்ட இப்படியெல்லாம் உதவிக்கேட்க முடியுமா...?’<br />
‘ முடியாதுதான். ஆனா நீங்க என்கிட்ட கேட்கலாம்...’<br />
நெற்றியில் கவிழ்ந்து கிடந்த பூனை முடிகளை நெற்றியில் தழுவி எடுத்து கோதிவிட்டபடி இருந்தார்.<br />
‘ எனக்கொரு மிஸ்டுகால் கொடுங்க பார்க்கலாம்...’<br />
அவரது மிளகாய்ப்பிஞ்சு விரல்கள் அலைபேசி எண்களில் ஊர்ந்தன.<br />
‘ நான், உங்கக்கிட்ட ஒரு நாளு முழுக்கவும் பேசிக்கிட்டே இருக்கணும் போலிருக்கு...’ எனச் சொன்ன அமைச்சர் தன் கண்களால் ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க...என்பதைப்போல பார்த்தார்.<br />
‘ நைஸ்...பார்க்கலாம்....’<br />
‘ உங்க வீட்ல அந்த சந்திப்ப வச்சிக்கலாமா...?’<br />
நடிகையால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை<br />
‘ சொந்த வீட்லதானே இருக்குறீங்க...?’<br />
‘ இல்லை...’<br />
‘ நான்னா உங்களுக்கொரு வீடு வாங்கித்தரட்டா...’<br />
நடிகை பேரதிர்ச்சியில் பெரிதென வாயைத் திறந்தார். ‘ பரவாயில்லைங்க,...’ என்றவாறு எழுந்திருக்கையில் ஆவிப்பறக்க காஃபி வந்திருந்தது.<br />
நடிகையின் சந்திப்பிற்கு பிறகு அமைச்சரின் ஓட்டங்கள் வட்டமாகியது. வட்டத்தின் மையமாக நடிகை சுஸ்மிதா இருந்தார். அமைச்சர் அடிக்கடி அலைபேசியில் துழாவுவதும், குறுஞ்செய்தி அனுப்புவதுமாக இருந்தார்.<br />
நடிகை தன் வாயால் தன்னை வீட்டிற்கு அழைக்க எத்தகைய வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேடி குறுஞ்செய்தி அனுப்புவதாக இருந்தார். நடிகை பதிலுக்கு ‘ விரைவில்...’ எனப் பதில் அனுப்பி அவரைச் சாந்தப்படுத்துவதாக இருந்தார்.<br />
பார்க்கலாம், விரைவில், அடுத்த வாரம், இந்த வாரம், என சொல்லிக்கொண்டு வந்த சுஷ்மிதா ஒரு நாள் ஞாயிறு தினத்தன்று மதியம் பனிரெண்டு மணிக்கு தன் வீட்டு முகவரியைக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மிகச் சரியாக வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.<br />
அன்றைய தினம் அமைச்சரின் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது. விரல்கள் ஹார்மோனியம் வாசித்தன. குறிப்பிட்ட நேரத்திற்கு தனியாளாக காரில் நடிகையின் வீட்டிற்குச் சென்றார்.<br />
நடிகையின் வீடு குட்டி பங்களா அளவிற்கு இருந்தது. காரை ஓட்டிச்சென்ற அவர் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வீட்டை ஏறிட்டுப்பார்த்தார். நடிகை பால்கனியில் அள்ளி முடிந்த சிகை அலங்காரத்தோடு, பாதி உடம்பு வெளியே தெரியும்படியான சேலையில் நின்று கையை நீட்டி அமைச்சரின் வருகைக்கு புன்னகைப்பூ காட்டினார்.<br />
அமைச்சர் நீ அங்கேயே இரு. நான் வந்து விடுகிறேன்...என்பதைப்போல ஓடினார். வீட்டிற்குள் நடிகையுடன் இரண்டு பெண்கள் பவனி வந்தார்கள். அவர்களைப் பார்த்து ஒரு கும்பிடுப்போட்ட அமைச்சர் நடிகையை சற்று உரசியப்படி ‘ இவர்களெல்லாம் யார்...’ என்பதைப்போல கண்களால் கேட்டார். நடிகை தன் நடிக்கும் கண்களால் ‘ இவர் என்னோட அம்மா, அவர் என் பணிப்பெண்...’ என்றார்.<br />
மதிய உணவு தயாரானது. அவருக்கான விருந்தை நடிகையே பரிமாறினார். போதும் என்கிற சொல்கிற வாக்கில் அவரது மணிக்கட்டைத் தொடுவதும், ஒரு காலால் அவரது கணுக்கால்களை உரசுவதுமாக இருந்தார். அப்பொழுது அவள் சிரித்த சிரிப்பும், வெட்கமும் அப்போதைக்கு போதுமென இருந்தது. தான் நினைத்து வந்திருந்த வேலை கை கூடாதப் பொழுது இதற்கு மேலும் என்ன வேலை,.. என்பதைப்போல அமைச்சர் அப்பங்களாவை விட்டு வெளியேறினார்.<br />
அமைச்சர் காரைத் திருப்புகையில் சுஷ்மிதாவை ஒரு பார்வைப் பார்த்தார். ‘ என்னை நீ ஏமாற்றி விட்டாய்...’ என்பதைப்போல அப்பார்வை இருந்தது. அவரால் காரை இலகுவாக இயக்க முடியவில்லை. இரண்டொரு திருப்பம் சென்று காரை நிறுத்தி நடிகைக்கு அழைப்பு விடுத்தார்.<br />
‘ சுஷ்மிதா...’<br />
‘ இம்....போயிட்டீங்களா...?’<br />
‘ என்ன விளையாடுகிறாயா...?’<br />
‘ என்னச் சொல்றீங்கனு புரியவில்லைங்க...’<br />
‘ வரச்சொன்னேனு வந்தேன். ஆனால் பங்களாவில் யார் யாரோ இருக்கிறார்கள்....’ வார்த்தைகளைத் தொண்டைக்குள் விழுங்கினார்.<br />
‘ சாரிங்க, அம்மாவும், கெல்பரும் வெளியில கிளம்புனாங்க. பிறகு என்ன நினைச்சாங்களோ தெரியல, நாளைக்குப்போகலாமென இருந்திட்டாங்க. அதான்..’ வார்த்தைகளை தொண்டைக்குள் அடைத்தார் சுஷ்மிதா.<br />
‘ நான் உன்கிட்ட வெட்கத்த விட்டு ஒன்று கேட்கிறேன்... கேட்கவா...?’<br />
‘ இம்..கேளுங்க...’<br />
‘ அடுத்த முறை வீட்டுக்கு வருகிறப்ப, வீட்ல யாரும் இருக்கக்கூடாது...’<br />
சுஷ்மிதா ‘ இவ்வளவுதானே,...’ என்றவாறு ஒரு சிரிப்பு சிரித்தார்.<br />
‘நம்பலாமா...?’<br />
‘ சுயர்..’<br />
அமைச்சர் ஆசுவாசமானார். ‘ எப்ப வர...?’<br />
‘ நானே சொல்கிறேனே...’<br />
அதன்பிறகு அமைச்சர் ஒரு நாளைக்கு பத்து முறையென நடிகையுடன் தொடர்பு கொள்பவராக இருந்தார்.<br />
இன்னொரு நாள் இரவு பனிரெண்டு மணிவாக்கில் சுந்தரலிங்கத்திற்கு திடீர் அழைப்பு வந்தது. அழைத்தவர் நடிகை சுஷ்மிதாதான். அழைப்பை எடுத்து காதினில் வைத்துக்கொண்ட அமைச்சர் ‘ சுஷ்மிதா வரட்டா...?’ என ஆவல் பொங்கக் கேட்டார்.<br />
‘ இம்...வாங்க...’<br />
அமைச்சர் துள்ளிக் குதித்தார். ‘ வீட்ல யாரும் இல்லையே...’<br />
‘ இல்ல வாங்க...’<br />
<br />
முடிவு - 1<br />
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். சுஷ்மிதா சொன்னதைப்போலவே பங்களாவில் யாரும் இருந்திருக்கவில்லை. பங்களா இறுகப் பூட்டி முகப்பில் ‘வாடகைக்கு’ என்கிற அறிவிப்பு தொங்கிக்கிடந்தது.<br />
முடிவு - 2<br />
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். சற்று நேரத்தில் உலகத் தமிழ் தொலைக்காட்சிகள், ‘ சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் சொகுசு விடுதியிலிருந்து தப்பித்து அணி மாறி தப்பி ஓட்டம்’ என்கிற வரிச் செய்தியை ஓட விட்டிருந்தது.<br />
முடிவு - 3<br />
அமைச்சர் காரை எடுத்துக்கொண்டு நடிகையின் பங்களாவை நோக்கி விரைந்தார். இப்படியாகத்தான் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நாளன்று அவர் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தொலைந்து போயிருந்தார்.<br />
<br />
<br />
நன்றி - தி இந்து காமதேனு ஆகஸ்ட் 5, 2018</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-74496865903684387182018-07-18T13:18:00.001+05:302018-07-18T13:18:24.191+05:30அகிலன் ஆண்டு விழாவில் நான்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dysDbjHIYQcZRS8jfkByo3JowJj67Je4qi-wE0L1H9y92btSMIlNF3A8Qq4wFQ4-w0wFRKJ5QbkJ8N2sN37rA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-43001290086810582018-07-18T10:06:00.000+05:302018-07-18T10:17:09.683+05:30மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களுக்கு....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWtZXeUXpdVZvOEXlDjguV1OS2Z_3K74H7qHqer8sRel8iXLQnsGaEZboHrW92dowiyJjTDhk34zw3ifmsMO6kSabFM-aFhf_FhW9C7_kdu_t5kdgpg9j6fyP95C5Th5-JM94V32ZWeKc/s1600/20180718_095631.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="1600" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWtZXeUXpdVZvOEXlDjguV1OS2Z_3K74H7qHqer8sRel8iXLQnsGaEZboHrW92dowiyJjTDhk34zw3ifmsMO6kSabFM-aFhf_FhW9C7_kdu_t5kdgpg9j6fyP95C5Th5-JM94V32ZWeKc/s320/20180718_095631.jpg" width="320" /></a></div>
<a href="https://www.blogger.com/"></a><span id="goog_1566634689"></span><span id="goog_1566634690"></span><br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-73361861732205670412018-07-18T09:53:00.003+05:302018-07-18T09:53:42.110+05:30அசோகமித்திரன் சிறுகதைப்போட்டி - 2018<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tiK_jgLaegnLDP4aM9ecRqx36DCYxNmR6wF08Eq9435J1vYa_zn1cJEtjnUQewiMb6qhls3qU8lbHneCdnrOSY5YFHiBh64sy-iz4-hiKgLB-mOIpFbYgimLOl4jp6ghtpQqfuiGKKQ/s1600/20180718_094812.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tiK_jgLaegnLDP4aM9ecRqx36DCYxNmR6wF08Eq9435J1vYa_zn1cJEtjnUQewiMb6qhls3qU8lbHneCdnrOSY5YFHiBh64sy-iz4-hiKgLB-mOIpFbYgimLOl4jp6ghtpQqfuiGKKQ/s640/20180718_094812.jpg" width="360" /></a></div>
<br /></div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4087026226701886657.post-69980838216342343472018-06-26T10:27:00.002+05:302018-06-26T10:27:44.030+05:30சிறுகதைப்போட்டி அறிவிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிறுகதைப் போட்டி<br />
<br />
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 பற்றிய அறிவிப்பு.<br />
விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்<br />
••••<br />
வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.<br />
* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.<br />
* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018.<br />
* வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும்.<br />
* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.<br />
* அனுப்பி வைப்பவரின் நிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.<br />
* கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டுகதைகளை அனுப்பவும்.<br />
* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும். கையெழுத்துப் பிரதிகள் நிராகரிக்கப்படும்.<br />
* தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.<br />
* தேர்ந்தெடுக்கப்படாத கதைகள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கான விளக்கங்கள் தரப்படமாட்டாது.<br />
* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே. புத்தகத்தின் காப்புரிமை கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்தது.<br />
நிபந்தனைகள்:<br />
* கதைகள் சென்னையைப் பின்னணியாகக் கொண்டதாக இருக்கவேண்டும். சென்னையில் நடக்கும் கதையாகவோ அல்லது சென்னையைப் பற்றிய கதையாகவோ அல்லது சென்னையைக் களமாகக் கொண்டு நிகழும்கதையாகவோ இருக்கலாம்.<br />
* சென்னை அல்லாத பிற இடங்களில் நிகழும் கதைகளாக இருந்தால், சென்னையுடன் ஏதேனும் ஒரு வகையில் ஊடாடும் கதைகளாக இருக்கவேண்டும். சென்னையைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும்.<br />
* சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.<br />
* மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.<br />
* இக்கதைகள் இதுவரை எங்கும் (இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.<br />
* கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.<br />
* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.<br />
நடுவர்கள்:<br />
எழுத்தாளர் அரவிந்தன்<br />
எழுத்தாளர் ஆர்.அபிலாஷ்<br />
பரிசு விவரம்:<br />
முதற்பரிசு: 7,500 ரூ<br />
இரண்டாம் பரிசு: 3,000 ரூ<br />
மூன்றாம் பரிசு: 1,500 ரூ<br />
ஆறுதல் பரிசுகள் (பத்து கதைகளுக்கு): தலா 750 ரூ<br />
உங்கள் கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: kizhakkupathippagam@gmail.com<br />
கதைகளை அச்சுப் பிரதிகளாக அனுப்ப விரும்புகிறவர்கள், கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பல்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 600014 என்ற முகவரிக்கு அனுப்பவும். கையெழுத்துப் பிரதிகளை அனுப்பவேண்டாம். கதைகளைப் போட்டிக்கு அனுப்பும்போது, உள்ளே தெளிவாக, “இக்கதை கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கானது” என்று குறிப்பிடவும்.<br />
•••<br />
<br />
எஸ். ராமகிருஷ்ணன் இணையப் பக்கத்திலிருந்து 👆🏾</div>
அண்டனூர்சுராhttp://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.com0